பாரதி பாட்டில் பழமொழிகள்

தமிழ் மொழியில் இருக்கும் இருபதாயிரம் பழமொழிகளை 150 ஆண்டுகளுக்கு முன் மூன்று வெள்ளைக்காரர்கள் தொகுத்து ஆங்கில மொழிபெயர்ப்புடன் வெளியிட்டு அரிய பணியைச் செய்தனர். இன்னும் பத்தாயிரம் பழமொழிகள் பட்டியலிடப்படாமல் உள்ளன. மேலும் அவைகளை தலைப்பு வாரியாகத் தொகுக்க வேண்டும். பல சொற்களுக்கு இப்போதே பொருள் புரியவில்லை. இதே போக்கில் விட்டால் பிராமணர்களின் வேதங்களுக்கு எப்படி இன்று பொருள் சொல்ல முடியவில்லையோ அந்த கதி தமிழ்ப் பழமொழிகளுக்கும் எற்பட்டுவிடும். ராமர் கட்டிய பாலத்தில் அணிலும் சிறிது மண் போட்டு உதவியது போல நானும் ஏதோ சிறிய முயற்சிகளைச் செய்கிறேன்.
பழமொழிகளைப் பயன்படுத்தாத தமிழர்களைக் காண்பது அபூர்வம். வீட்டில் புரோகிதம் செய்துவைக்கும் புரோகிதர்கள் முதல் ரோட்டில் வடை சுட்டு விற்கும் கிழவிகள் வரை தமிழ்ப் பழமொழிகளைப் பயன் படுத்துவதைப் பார்த்திருக்கிறேன். சங்க இலக்கியமானாலும் சரி, கம்பன் பாடல் ஆனாலும் சரி பழமொழிகளைக் காணலாம். இந்தச் சிறிய கட்டுரையில் பாரதி பாடல்களில் கண்ட சில பழமொழிகளைக் காணலாம்.

1) எனை நீ காப்பாய், யாவுமாந் தெய்வமே!
பொறுத்தாரன்றே பூமி ஆள்வார்;

2) உண்டாக்கிப் பாலூட்டி வளர்த்த தாயை
உமையவள் என்று அறியீரோ- உணர்ச்சி கெட்டீர்!
பண்டாய்ச்சி ஔவை அன்னையும் பிதாவும்
பாரிடை முன்னறி தெய்வம் என்றாள் அன்றோ?

3) காற்றுள்ளபோதே நாம் தூற்றிக் கொள்வோம்
கனமான குருவை எதிர் கொண்டபோதே

4) கவலை துறந்திங்கு வாழ்வது வீடென்று
காடும் மறாஇகள் எல்லாம்—நீவிர்
அவலை நினைந்து உமி மெல்லுதல் போல் இங்கு
அவங்கள் புரிவீரோ

5) சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடும்
செய்தி அறியாயோ—நன்னெஞ்சே!
குப்பையிலே மலர் கொஞ்சுங் குருக்கத்திக்
கொடி வளராதோ?

6) பெண் என்று சொல்லிடிலோ—ஒரு
பேயும் இரங்கும் என்பார்; தெய்வமே நினது
என்னம் இரங்காதோ

7) பண்ணிய பாவம் எல்லாம்
பரிதி முன் பனியே போல
நண்ணிய நின்முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அன்னாய்

8) கை வைத்தது பசும்பொன் ஆகுமே—பின்பு
காலின் பயம் ஒழிந்து போகுமே

9) சுரத்திடை இன்னீர்ச் சுனையது போன்றும்
அரக்கர் தம் குலத்திடை வீடணனாகவும்
சேற்றிடைத் தாமரைச் செம்மலர் போன்றும்

10) வேளையிலே நமதுதொழில் முடித்துக் கொள்வோம்
வெயிலுள்ள போதிலே உலர்த்திக் கொள்வோம்
11) நரி வகுத்த வலையினிலே சிங்கம் தெரிந்து
நழுவி விழும்;சிற்றெறும்பால் யானை சாகும்;
வரி வகுத்த உடற் புலியைப் புழுவும் கொல்லும்

12) சென்றதினி மீளாது, மூடரே
(போனதை நினைக்கிறவன் புத்தி கெட்டவன்)

13) தாழ்வு பிறர்க்கென்னத் தான் அழிவான் என்ற
சாத்திரம் கேளாயோ (கெடுவான் கேடு நினைப்பான்)

பழமொழி ஆராய்ச்சி செய்பவர்கள் என்னுடைய பிளாக்—கில் பின்வரும் கட்டுரைகளைப் படிக்கலாம்:
பழமொழிகளில் இந்துமதம்
இந்துமதம் பற்றி 200 பழமொழிகள்
20000 தமிழ் பழமொழிகள்
ஒன்றுக்கும் உதவா உதிய மரமே !
உடம்பைக் கடம்பால் அடி!
Amazing collection of 20,000 Tamil Proverbs
******************

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: