விநாயகரின் ரசாயன யுத்தம்

 

ரசாயனப் போர் முறை (Chemical warfare) மிகவும் சர்ச்சைக்குரிய விஷயம். ஐ.நா.சபையால் தடை செய்யப்பட்ட போர் முறை. ஆனால் எதிரிகள் முதலில் அதைப் ப்ரயோகித்தால் தற்காப்புக்காக அதைச் செய்வதில் தவறில்லை. இதைத் தான நாம் கும்பிடும் பிள்ளையாரும் செய்தார்.

 

விநாயகரின் 16 முக்கிய நாமாக்களில் ஒன்று தூமகேது. இந்த சம்ஸ்கிருதச் சொல்லுக்கு இரண்டு அர்த்தம் உண்டு: 1.வால் நட்சத்திரம், 2.விநாயகப் பெருமான். அவருக்கும் வால் நட்சத்திரத்துக்கும் (தூமகேது) ஒரு தொடர்பும் இல்லை.

விகுதி என்ற ஒரு அரசன் இந்திர பதவி மீது ஆசை கொண்டான். அதைப் பொறுக்காதோர் அவனைச் சபிக்கவே அவன் தூமாசுரன் என்ற புகை அசுரனாகப் பிறந்தான். தூமம் என்றால் புகை என்று பொருள். அவனிடம் விஷப் புகை ( Weapons of Mass Destruction) ஆயுதங்கள் இருந்தன. அதை அவன் ரிஷிகள் மீதும் நல்லோர் மீதும் பிரயோகித்தான். அவனைக் கொல்ல சுமுதை என்பவளுக்குப் பிறக்கப்போகும் குழந்தை உதவும் என்று ஒரு அசரீரி கேட்டது. ஆகவே சுமுதை கணவருடன் காட்டுக்குச் செல்ல, அங்கு விநாயகரே அவர்களுக்குக் குழந்தையாக வந்து அவரிடம் வளர்ந்தார்.

தூமாசுரன் செயல்களைக் கேள்வி கேட்கவே அவன் பிள்ளையார் மீதும் புகை ஆயுதங்களைப் பிரயோகித்தான். அவரோவெனில் அத்தனை புகையையும் உள்ளுக்கு இழுத்தார். தூமாசுரன் மீது அந்த விஷப் புகையைக் கக்கவே அவன் சேனைகளுடன் அழிந்தான். ஆகவே அவருக்கு தூம கேது என்று பெயர்.

Previous Post
Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: