எதற்கு எது அழகு?

woman

சம்ஸ்கிருத செல்வம் — அத்தியாயம் 31
ச.நாகராஜன்

Post No 857 Date 22nd February 2014

கவிஞர் அழகற்ற குயிலையும் அவலட்சணமான மனிதன் ஒருவனையும், ஒரு பெண்ணையும்., ஒரு தவ யோகியையும் பார்த்தார். இவர்கள் அனைவரையும் அனைவரும் போற்றிப் புகழ்ந்தவுடன் அவருக்கு எதற்கு எது அழகு, ஏன் அப்படிப் புகழ்கின்றனர் என்பது புரிந்து விட்டது; கூடவே ஒரு நல்ல பாடலும் பிறந்து விட்டது!

குயிலுக்குக் குரல் அழகு
பெண்ணுக்கு கற்பு அழகு
அவலட்சணமானவனுக்கு கல்வி அழகு
தபஸ்விக்கு பொறை அழகு

கோகிலானாம் ஸ்வரோ ரூபம் நாரிக்யம் பதிவ்ரதம் I
வித்யா ரூபம் க்ரூபாணாம் க்ஷமா ரூபம் தபஸ்வினாம் II

கோகிலானாம் ஸ்வரோ ரூபம் – குயிலுக்கு அதன் கூவல் அழகு
நாரிக்யம் பதிவ்ரதம் – பெண்ணுக்கு பதிவிரதம் மேன்மை
வித்யா ரூபம் க்ரூபாணாம் – குரூபமாய் இருந்தாலும் கல்வி அவனுக்கு அழகு
க்ஷமா ரூபம் தபஸ்வினாம் – தவம் புரிவோருக்கோ பொறை அல்லது மன்னித்தல் அழகு

இது சுபாஷித ரத்னாகர பாண்டாகாரத்தில் தொகுக்கப் பட்டுள்ள பாடல்!

எது எதை எப்படிப் பாதுகாக்க வேண்டும்?

சத்யேன தர்மா – சத்தியத்தால் தர்மத்தை ரக்ஷிக்க வேண்டும்
யோகேன வித்யா – பயிற்சியால் கல்வியை ரக்ஷிக்க வேண்டும்
ம்ருஜயா ரூபம் – சுத்தப் படுத்துவதால் அழகை ரக்ஷிக்க வேண்டும்
(உடல் நலம் பேணுதல் வேண்டும்)
வ்ருத்தேன குலம் – ஒழுக்கமான நன்னடத்தையால் குடும்பத்தை ரக்ஷிக்க வேண்டும்.

சத்யேன ரக்ஷதே தர்மோ வித்யா யோகேன ரக்ஷயதே I
ம்ருஜயா ரக்ஷதே ரூபம் குலம் வ்ருத்தேன ரக்ஷயதே II

அழகான சொற்களால் அற்புதமான கருத்து வலிமை பெறுகிறது! இது மஹாபாரதத்தில் விதுர நீதியில் வரும் பாடல்.

யாருக்கு எது எதிரி?

எந்தக் காரணத்தால் எது அழிகிறது என்பதையும் பார்க்கலாம்:

ஸ்ரீ – ரூபம் – பெண் அழகால் அழிகிறாள்

ப்ராஹ்மணன் –ராஜசேவா – பிராம்மணன் அரசனுக்குச் சேவை செய்யப் போவதால் அழிகிறான்

காவா- தூர ப்ராசேரேண – பசுக்கள் தூரத்தில் உள்ள மேய்ச்சல் நிலத்திற்குச் செல்வதால் அழிகின்றன.

ஹிரண்யம் – லோபலிப்ஸா – தங்கம் பேராசையால் அழிகிறது.

ஸ்தீரி வினஷ்யதி ரூபேண ப்ராஹ்மணோ ராஜசேவா I
காவோ தூரப்ரசாரேண ஹிரண்யம் லோபலிப்ஸயா II

ஸ்தீரி (வினஷ்யதி) ரூபேண –பெண் அழிவது அழகாலே
ப்ராஹ்மணோ வினஷ்யதி ராஜசேவா – ப்ராம்மணன் அழிவது ராஜசேவையால்
காவோ (தூரப்ரசாரேண) வினஷ்யதி –பசு அழிவது வெகு தூரத்தில் மேய்ச்சலுக்குச் செல்வதால்
ஹிரண்யம் (வினஷ்யதி) லோபலிப்ஸயா – தங்கம் அழிவது பேராசையால்.

இதுவும் சுபாஷித ரத்னாகர பாண்டாகாரத்தில் இடம் பெறும் பாடல். தான்!

எது யாருக்கு அழகு என்பது பற்றியும், பாதுகாப்பது பற்றியும், எதனால் எது அழிகிறது என்பதையும் அமுதச் சொற்களால் தெரிந்து கொண்டோம்.

*******************

Contact swami_48@yahoo.com

Leave a comment

1 Comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: