அருமையான 54 புறநானூற்றுப் பொன்மொழிகள்!

tamil kurathi

Compiled by London Swaminathan
Post No.1088; Dated 6th June 2014.

TAMIL TREASURE TROVE: 54 GOLDEN SAYINGS FROM PURANANURU
1.வீரம்
மரப்புலி உடலின், மான்கணம் உளவோ?
மருளின விசும்பின் மாதிரத்து ஈண்டிய
இருளும் உண்டோ, ஞாயிறு சினவின்? ( மன்னன் வீரம்; ஔவையார், புறம் 90)

2.எலி போல திருடும் குணம் உடையாருடன் சேராதே
எலிமுயன்றனையராகி உள்ளதம்
வளன்வலியுறுக்கும் உளம் இலாளரோடு
இயைந்த கேண்மை இல்லாகியரோ ! –(எலி போன்றோருடன் சேராதே; நல்லுருத்திரன், புறம் 190)

3.வழுதியின் ஆற்றல்: கடலுக்கு அணை போட முடியுமா?

நீர்மிகின் சிறையும் இல்லை; தீ மிகின்
மன்னுயிர் நிழற்றும் இலை;
வளிமிகின் வலியும் இல்லை! – (வழுதியின் ஆற்றல்; ஐயூர் முடவனார், புறம் 51)

4.முடிந்தால் சொல்லு, சொல்லியபின் செய்யாமல் இராதே
ஒல்லுவது ஒல்லும் என்றலும், யாவர்க்கும்
ஒல்லாது இல்லென மறுத்தலும், இரண்டும்
ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே;
ஒல்லாது ஒல்லும் என்றலும், ஒல்லுவது
இல்லென மறுத்தலும், இரண்டும் வல்லே; – (முடிந்ததைச் சொல்லு; ஆவூர் மூலங்கிழார், புறம் 196

5.சான்றோர் சன்றோருடன் சேருவர்
என்றும் சான்றோர்
சான்றோர் பாலர் ஆப;
சாலார் சாலார் பாலர் ஆகுபவே ! – (இனம் இனத்தோடு சேரும்; கண்ணகனார், புறம் 218)

6.மனைவி இறந்தாள், இன்னும் வாழ்கிறேனே! சீ,சீ!!
ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை
இன்னும் வாழ்வல் என் இதன் பண்பே! –(மனைவி போயும் இன்னும் உயிர் இருக்கிறதே! சேரமான் மாக்கோதை, புறம் 245)

7.கணவனுடன் இறப்பதே மேல்
பெருந்தோள் கணவன் மாய்ந்தென, அரும்பற
வள்ளிதழ் அவிழ்ந்த தாமரை
நள்ளிரும் பொய்கையும் தீயும் ஓரற்றே! – ( கணவன் சிதைத்தீயில் குதிப்பது குளத்தில் குளிப்பது போல; பெருங்கோப்பெண்டு, புறம் 245)

tamil kottil

8.சீ! உன்னை விட்டால் கதி இல்லை என்று எண்ணாதே!
பெரிதே உலகம் பேணுநர் பலரே
மீளிமுன்பின் ஆளிபோல
உள்ளம் உள்ளவிந்தடங்காது வெள்ளென
நோவா தோன்வயின் திரங்கி
வாயா வன்கனிக்கு உலமருவாரே – ( உலகில் கொடுப்போர் அதிகம்; பெருஞ்சித்திரனார், புறம் 207)

9.நீ இருக்கும் வரை இனி நான் கூலிக்கு மாரடிக்கத் தேவை இல்லை
பீடில் மன்னர்ப் புகழ்ழ்ச்சி வேண்டி
செய்யா கூறிக் கிளத்தல்
எய்யாதாகின்று எம்சிறு செந்நாவே! – (வாரி வழங்குகிறாய் மற்றவர்களைப் பொய்யாகப் புகழத்தேவையே இல்லை; வன் பரணர், புறம் 148)

10. பார்! மற்றவன் கொடுத்த யானை!
இரவலர் புரவலர் நீயும் அல்லை
புரவலர் இரவலர்க்கு இல்லையுமல்லர்
இரவலர் உண்மையும் காணினி இரவலர்க்கு
ஈவோருண்மையும் காணினி நின்னூர்க்
கடிமரம் வருந்தத் தந்தியாம் பிணித்த
நெடுநல் யானையெம் பரிசில்
கடுமான் தோன்றல் செல்வல் யானே- – (உலகில் கொடுப்போர் அதிகம்; பெருஞ்சித்திரனார், புறம் 162)

11.காசுக்காகப் பாடும் பரதேசி நான் அல்ல!
காணாது ஈத்தவிப் பொருட்கு யானோர்
வாணிகப் பரிசிலன் அல்லேன் பேணித்
தினையனைத்தாயினும் இனிதவர்
துணை யளவறிந்து நல்கினர் விடினே – (காசுக்காகப் பாடும் ஆள் அல்ல; பெருஞ்சித்திரனார், புறம் 208

12..உண்டோ குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு?
எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே –
( உன்னை விடக் கொடுப்போர் உண்டு; அவ்வையார், புறம் 206)

13.பிச்சை எடுப்பது இழிந்ததுதான்
ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதிர்
ஈயெனென்றல் அதனினுமிழிந்தன்று
கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதனெதிர்
கொள்ளேனென்றல் அதனினும் உயர்ந்தன்று – ( தா என்பது இழிந்தது; வன்பரணர், புறம் 204)

tamil curiosity

14.நல்லவரை மட்டுமே பாடுவேன்
பெரியவோதினும் சிறியவுணராப்
பீடின்று பெருகிய திருவிற்
பாடின் மன்னரைப் பாடன்மார் எமரே – (தகுதியற்றவரைப் பாடமாட்டோம்; மோசிகீரனார், புறம் 375)

15.புலவரைப் போய் உளவாளி என்று மடக்கிவிட்டாயே!
பெற்றது கொண்டு சுற்றமருத்தி
ஓம்பாது உண்டு கூம்பாது வீசி
வரிசைக்கு வருந்துமிப் பரிசில் வாழ்க்கை
பிறர்க்குத் தீதறிந்தன்றோ இன்றே – ( புலவர் வாழ்க்கை;கோவூர்க் கிழார் புறம் 47)

16.வரி விதிக்கும் போது அளவாக வரி விதி
அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே
கோடியாத்து நாடு பெரிது நந்தும் – (வரி விதிப்பு; பிசிராந்தையார், புறம் 184)

17.கோள் சொல்பவரை நம்பாதே
வழிபடுவோரை வல்லறிதி நீயே
பிறர்பழி கூறுவோர் மொழி தேறலையே
நீமெய்கண்ட குற்றம் காணின்
ஒப்ப நாடி அத்தகவொறுத்தி – (கோள் சொல்பவரை ஒதுக்கி, குற்றவாளிகளை தண்டிப்பாய்; ஊன்பொதி பசுங்குடையார், புறம் 10

18.உழவர்களைப் போற்று
நொதுமலாளர் பொது மொழி கொள்ளாது
பகடு புறந்தருநர் பாரமோம்பிக்
குடிபுறந் தருவை யாயினின்
அடிபுறந் தருகுவர் அடங்காதோரே – (உழவரை ஆதரி; வெள்ளைக்குடி நாகனார், புறம் 35)

19.பரித்ராணாய சாதூனாம் விநாசாய துஷ்க்ருதாம் (தீயோரைப் பொசுக்கு)
கொடியோர்த் தெறுதலும் செவ்வியோர்க் களித்தலும்
ஒடியா மரபின் மடிவிலையாகி
நல்லதன் நலனும் தீயதன் தீமையும்
இல்லையென்பார்க்கு இனனாகிலியர்—( கொடியோரை அழி; நாத்திகரை நம்பாதே; முதுகண்ணன் சாத்தனார், புறம் 29)

20.இன்று போல் என்றும் ஒன்றுபட்டு வாழ்க
ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர் இருவீரும்
உடநிலை திரியீராயின் இமிழ்திரைப்
பௌவ முடுத்தவிப் பயங்கெழு மாநிலம்
கையகப் படுவது பொய்யாகாதே – (ஒற்றுமை வாழ்க; காரிக்கண்ணனார், புறம் 58)

21.நினைத்தேன், வந்தாய்! என்ன அதிசயம்!
வருவன் என்ற கோனது பெருமையும்
அது பழுதின்றி வந்தவன் அறிவும்
வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந்தன்றே – பொத்தியார், புறம் 217

22.குழல் இனிது, யாழ் இனிது என்பர், குழந்தை இல்லார்
குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி,
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்ப்பட விதிர்த்தும்
மயக்குறுமக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் தாம் வாழும் நாளே! – (குழந்தைகள் இல்லாத வாழ்வு இன்பம் தராது; அறிவுடைநம்பி, புறம் 188).

tamil lovers

23.ஈமக்கடன் நிகழ்த்த புதல்வன் பெற்ற பின் என்னிடம் வா!
புகழ்சால் புதல்வன் பிறந்தபின் வாவென
என்னிவணொழித்த அன்பிலாள
எண்ணாதிருக்குவை யல்லை
என்னிடம் யாதுமற் றிசைவெய் யோயே பொத்தியார், புறம் 222

24.தைரியம் இருந்தால் போர் செய் அல்லது கோட்டையைத் திற
அறவையாயின் நினதெனத் திறத்தல்
மறவையாயின் போரொடு திறத்தல்
அறவையும் மறவையும் அல்லையாகி
திறவா தடைத்த திண்ணிலைக் கதவின்
நீண்மதில் ஒருசிறை யொடுங்குதல்
நாணுத் தகவுடைத்துக் காணுங்காலே – புறம் 44, கோவூர்க் கிழார்

kannaki cooking

Following Thirty Golden sayings were already posted under June Calendar in Tamil

புறநானூற்றுப்பாடல்களில் இருந்து எடுக்கப்பட்ட 30 அருமையான மேற்கோள்கள் இந்த மாத காலண்டரை அலங்கரிக்கின்றன. சுருக்கமான பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.

ஜூன் 1 ஞாயிற்றுக் கிழமை
நிலம் பெயரினும் நின்சொற் பெயரல் (உண்மையே கொள்கை – இரும்பிடர்த்தலையார், புறம் 3).

ஜூன் 2 திங்கட்கிழமை
அருளும் அன்பும் நீக்கி, நீங்கா
நிரயம் கொள்பவரோடு ஒன்றாது, காவல்
குழவி கொள்பவரின் ஓம்புமதி
– — (கெட்டவருடன் சேராதே; நரிவெரூஉத் தலையார், புறம் 5)

ஜூன் 3 செவ்வாய்க் கிழமை
நீரின்றமையா யாக்கைக் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே – (அன்னதானமே சிறந்தது; குடபுலவியனார், புறம் 18).

ஜூன் 4 புதன் கிழமை
இகழுநர் இசையொடு மாயப்
புகழொடு விளங்கிப் பூக்கநின் வேலே – (உன்னை மதியாதோர் வீழ்க; நீ வாழ்க; ஐயூர் மூலங்கிழார். புறம் 21.)

ஜூன் 5 வியாழக் கிழமை
வல்லுநர் வாழ்ந்தோர் என்ப – (வல்லவரே வாழ்வர்; மாங்குடி கிழார், புறம் 24)

ஜூன் 6 வெள்ளிக்கிழமை
புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
வலவன் ஏவா வானவூர்தி
எய்துப,என்ப (புகழுடையோர் சுவர்க்கம் புகுவர்; முதுகண்ணன் சாத்தனார், புறம் 27)

ஜூன் 7 சனிக்கிழமை
தேய்தல் உண்மையும் பெருகல் உண்மையும்
மாய்தல் உண்மையும் , பிறத்தல் உண்மையும்
அறியாதோரை அறியக்காட்டி – (ஜனன,மரண சுழற்சியை விளக்குவாய்; முதுகண்ணன் சாத்தனார் புறம் 27)

bow 3
Chera Emblem

ஜூன் 8
வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும்
வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி
அருள வல்லை ஆகுமதி — (எவர் வந்தாலும் உபசரி; உறையூர் முதுகண்ணன் சாத்தனார், புறம் 27)

ஜூன் 9
அதனால் அறமும் பொருளும் இன்பமும் மூன்றும்
ஆற்றும் பெருமநின் செல்வம் – (தர்ம, அர்த்த, காம ஆகிய மூன்றில் நிற்பவன் நீ; முதுகண்ணன் சாத்தனார், புறம் 28)

ஜூன் 10
சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்
அறத்து வழிப்படூஉம் – (தர்ம, அர்த்த, காம ஆகிய மூன்றில் தர்மமே பெரிது; கோவூர் கிழார், புறம் 31)

ஜூன் 11
நிலம்புடை பெயர்வதாயினும், ஒருவன்
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல் – (நன்றி மறக்காதே; ஆலத்தூர் கிழார், புறம் 34)

ஜூன் 12
வருபடை தாங்கிப் பெயர்புறத் தார்த்துப்
பொருபடை தரூஉங் கொற்றமும் உழுபடை
ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே! – (உழவே பெரிது; வெள்ளைக்குடி நாகனார், புறம் 35)

ஜூன் 13
என்றும் இன்சொல் எண்பதத்தை ஆகுமதி! – (இன்சொல் பேசு; ஆவூர் மூலங்கிழார் புறம் 40)

fish 1
Pandya Emblem

ஜூன் 14
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்; அதுதான்
எல்லாரும் உவப்பது; அன்றியும்,
நல்லாற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே –( நன்றே செய்க; நரிவெரூஉத் தலையார், புறம் 195)

ஜூன் 15
அறநெறி முதற்றே அரசின் கொற்றம்
அதனால் நமரெனக் கோல் கோடாது
பிறரெனக் குணங்கொல்லாது – – (தர்மமே முக்கியம்; மருதன் இளநாகனார், புறம் 55)

ஜூன் 16
புலிசேர்ந்து போகிய கள்ளலை போல
ஈன்ற வயிரோ இதுவே,
தோன்றுவன் மாதோ, போர்க்களத்தானே! – (நான் வீரத் தாய்; காவற்பெண்டு, புறம் 86)

ஜூன் 17
—-தந்தயர்க்கு
அருள் வந்தனவால் புதல்வர்தம் மழலை! – (குழந்தை மழலை கடவுள் அருளியது; ஔவையார், புறம் 92)

ஜூன் 18
புல்லிலை எருக்கம் ஆயினும், உடையவை
கடவுள் பேணேம் என்னா – (பத்ரம், புஷ்பம் எதையும் கடவுள் ஏற்பார்; கபிலர், புறம் 106)
tiger drawing 1
Choza Emblem

ஜூன் 19
இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்
அறநிலை வாணிகன் ஆய் அல்லன்! – ( மறு ஜன்மத்தில் பலனை எதிர்பார்த்து அல்ல; முடமோசியார், புறம் 134)

ஜூன் 20
வாழ்தல் வேண்டிப்
பொய் கூறேன்; மெய் கூறுவல்! – (சோற்றுக்காக பொய் சொல்லேன்; மருதன் இளநாகனார், புறம் 139)

ஜூன் 21
‘எத்துணை ஆயினும் ஈதல் நன்று’ என,
மறுமை நோக்கின்றோ அன்றே
பிறர் வறுமை நோக்கின்று, அவன் கைவண்மையே—
(மறு ஜன்மத்தில் பலனை எதிர்பார்த்து அல்ல; பரணர், புறம் 141)

ஜூன் 22
யாதும் ஊரே, யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா!
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே !
(- எல்லோரும் சகோதரர்; கணியன் பூங்குன்றனார், புறம் 192)

ஜூன் 23
உண்டால் அம்ம, இவ்வுலகம்; இந்திரர்
அமிழ்தம் இயைவதாயினும், இனிது எனத்
தமியர் உண்டலும் இலரே;
– (இந்திர லோக அமிர்தம் கிடைத்தாலும் பகுத்து உண்பர்; கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி, புறம் 182)

bow and arrow

ஜூன் 24
–பிறர் அஞ்சுவதஞ்சிப்
புகழெனின் உயிரும் கொடுக்குவர்; பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்
–( பழி என்றால் அதை வெறுப்பர்; கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி, புறம் 182)

ஜூன் 25
அன்ன மாட்சி அனையராகித்
தமக்கென முயலா நோந்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மையானே !
–( பிறருக்காக் உழைப்பவர் உள்ளதால் உலகம் நிலைத்து இருக்கிறது; கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி, புறம் 182)

ஜூன் 26
உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே!
– (கல்வி கற்பது மிக முக்கியம்; ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், – புறம் 183).

thathrupam pen

ஜூன் 27
நெல்லும் உயிரன்றே; நீரும் உயிரன்றே;
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்! – (நல்லாட்சி மிகவும் முக்கியம்; மோசிகீரனார், புறம் 186).

ஜூன் 28
நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்;
அவ்வழி நல்லை வாழிய நிலனே! – (ராமன் இருக்கும் இடம் அயோத்தி; அவ்வையார், புறம் 187)

ஜூன் 29
உண்பது நாழி உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓரொக்கும்மே ! (அடிப்படைத் தேவை; நக்கீரர், புறம் 189)

ஜூன் 30
செல்வத்துப் பயனே ஈதல்;
துய்ப்பேம் எனினே, தப்புந பலவே – (தானமே சிறந்தது; நக்கீரர், புறம் 189).

Contact swami_48@yahoo.com

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: