கட்டுரை மன்னன்:- லண்டன் சுவாமிநாதன்
ஆய்வுக் கட்டுரை எண்:– 1264: தேதி:- 3 செப்டம்பர் 2014.
(I have posted the English version of this article yesterday)
இந்தியாவில் இருந்து 5000 மைல்களுக்கு அப்பால் உள்ள சுவீடன் நாட்டில் ஹெல்கோவில் ஒரு புத்தர் சிலை கிடைத்தது. இது நடந்தது 1954ஆம் ஆண்டில்; ஆனால் இன்னும் மர்மம் நீடிக்கிறது. எப்படி இந்தச் சிலை அங்கே வந்தது என்பது மர்மமே! ஹெல்கோ என்றால் புனித இடம் என்று பெயர். புத்தர் சிலை இங்கே கிடைத்தது எவ்வளவு பொருத்தம் பாருங்கள்!
இதற்கு முன், டென்மார்க் நாட்டில் குண்டஸ்ட்ரப் கால்ட்ரன் (Gundestrup Cauldron) என்னும் அண்டாவில் கஜலெட்சுமி உருவமும் சிந்து சமவெளி பசுபதி முத்திரை போன்ற ஒரு கடவுள் உருவமும் இருப்பதை இரண்டு ஆண்டுகளுக்கு முன் எழுதினேன். சென்ற வாரம் டென்மார்க் நாட்டு சூரிய ரதம் சிலை (Trundholm Sun Chariot) ரிக் வேதத்தில் சொல்லப்படது போல இருப்பது பற்றி எழுதினேன். அதற்குப் பின், போனவாரம் சுவீடன் நாட்டுத் தலைநகரான ஸ்டாக்ஹோம் நகருக்குப் போய் இருந்தேன். அங்குள்ள ஒரு மியூசியத்தில் இந்த வெண்கல புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. மலரான் ஏரிக்கு (Lake Maleran) அருகில் ஹெல்கோ (Helgo) என்னும் இடத்தில் பூமிக்கடியில் இருந்து இந்த வெண்கலச் சிலை எடுக்கப்பட்டது. அத்தோடு எகிப்திய, அயர்லாந்திய, பைசாண்டிய பொருட்களும் கிடைத்ததால் இது ஒரு வணிகர் கொண்டுவந்த பொருளாக இருக்க வேண்டும் என்பது தொல்பொருட் துறையினரின் கருத்து.
இந்த புத்தர் சிலை வட இந்தியாவில் 1500 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. நெற்றியில் ஒரு திலகம் உள்ளது. இது ஞானக் கண்ணாகிய மூன்றாவது கண். புத்தர் இரண்டு தாமரை மலர் மீதான பீடத்தில் தியான நிலையில் அமர்ந்து இருக்கிறார்.
Statue near T Centralen Tube Station in Stockholm.
மலரன் ஏரிக்கு அருகில் பிற்காலத்தில் பிர்கா என்னும் ஒரு புதிய வணிகத் துறைமுகமும் உருவானது. அங்கும் நிறைய பொருட்கள் தோண்டி எடுக்கப்பட்டன. சுவீடன் நாடு கி.பி. 800 முதல் 1100 வரை வைகிங் என்னும் கடல் வணிகரின் வசம் இருந்தது. இவர்கள் நீண்ட உயரமான கப்பல்களை வைத்துக் கொண்டு உலகம் முழுதும் சென்று கொள்ளை அடித்தனர். தங்கம் தான் இவர்களுக்கு குறி. அதுமட்டுமல்ல. வட அமெரிக்கா முதல் ஐரோப்பா வரை காலனிகளையும் அமைத்தனர். கிட்டத்தட்ட பிரிட்டா னியர்கள், ஸ்பானியர்கள், போஸ்ர்ச்சுகீசியர் என்ன செய்தனரோ அதையே இவர்களும் செய்தனர். வைகிங் மன்னர்களின் வீர வரலாறுகளைக் கூறும் சாகா என்னும் இலக்கியமும் இவர்களிடம் உண்டு.
வைகிங் (Viking) மன்னர்கள் இறந்தால் அவர்களை கப்பல்களுடன் புதைத்து விடுவார்கள். 1999 ஏப்ரலில் பிரிட்டனில் சானல் 4 டெலிவிஷனில் வைகிங் பற்றி ஒரு செய்திப் படம் காட்டினார்கள். இவர்களைப் பற்றி அராபியர் எழுதிய விஷயங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட சித்திரம் அது. அவர்களின் மன்னர்கள் இறந்தவுடன் அடிமைப் பெண்கள், தோழிகள், மனைவியர் எல்லோரையும் சேர்த்துப் புதைத்தனர் அல்லது எரித்தனர். இந்த வழக்கம் எகிப்திலும் இருந்தது. நம் நாட்டில் இமயம் முதல் குமரி வரை வழங்கிய சதி என்னும் வழக்கம் போன்றது இது.
(Baby statue in The Royal Palace and the Hindu Krishna on Banyan leaf! Look at the similarity!
பாரிஸ் நகரில் கண்டுபிடித்தது போல ஏதேனும் இந்து மத தடயங்கள் ஸ்வீடன் நாட்டிலும் கிடைக்குமா என்று கேமராவுடன் அலைந்தேன். இரண்டு, மூன்று விஷயங்கள் கிடைத்தன. ஆனால் இவை அனைத்தும் ஊகங்களே. இந்துமத செல்வாக்கோ என்று எண்ணவைக்கிறது. அவ்வளவுதான்.
முதலில் நோபல் மியூசியம்(Nobel Museum) சென்றேன். அங்கு நோபல் பரிசு பெற்ற இந்தியர்களான அமார்த்ய சென், தாகூர், சர் சி வி ராமன், ஹரிகோவிந்த கொரானா ஆகியோர் பற்றிப் படித்தேன். சில புகைப்படங்களும் எடுத்தேன். (Please see the pictures on my Facebook page)
ராயல் பாலஸ் (The Royal Palace) எனப்படும் அரசர் மாளிகைக்கும் சென்றேன். அங்கு ஆலிலைக் கண்ணன் போல ஒரு குழந்தையின் பளிங்குச் (மார்பிள்) சிலை இருந்தது. அதையும் புகைப் படம் எடுத்தேன். ட்ரைசெந்த்ரலன் என்னும் (T centralen) ஸ்டேஷனுக்குப் பக்கத்தில் ஒரு பையன் இந்திய பத்மாசனம் போல் சம்மணம் போடு உட்கார்ந்ததையும் படம் எடுத்தேன். அண்மைக் காலத்தில் கட்டப்பட்ட இரண்டு இந்துக் கோவில்களும் ஸ்டாக்ஹோமில் உண்டு. சிட்டி ஹால் (The City Hall) என்னும் நகர மண்டபத்தில் பெண்கள் சிலைகள் கொடுத்த “போஸ்” நம்மூர்க் கோவில்களை நினைவுபடுத்தின.
என்னுடைய நண்பர் டாக்டர் சஞ்சீவி, ஸ்டாக்ஹோமில் 25 ஆண்டுகளாக வசிப்பதால் அவர்கள் வீட்டில் அறுசுவை விருந்தும், காரில் சவாரியும் கிடைத்தது.
Picture of Indian Nobel Laureate Amartya Sen
வாழ்க ஸ்வீடன்! வளர்க தமிழ்!!
You must be logged in to post a comment.