பீதாம்பரதாரியும் நீலாம்பரதாரியும், மதுப் ப்ரியனும் மாது ப்ரியனும்

-Balarama_kolkatta8
Balaraman in Kolkatta Museum

கட்டுரை மன்னன்: லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்:1324; தேதி:– 3 அக்டோபர் 2014.

என்றும் நீல உடை அணிபவன் – பலராமன் ( நீலாம்பரன் )
என்றும் மஞ்சள் உடை அணிபவன் – கிருஷ்ணன் ( பீதாம்பரன் )

மதுப் ப்ரியன் – பலராமன் ( மது அருந்துபவர் )
மாதுப் ப்ரியன் – கிருஷ்ணன் ( கோபியர் பின்னால் சென்றவர் )

வெள்ளைக் காரன் – பலராமன்
கருப்பன் – கிருஷ்ணன்

பனைக் கொடி ஏந்தியவன் – பலராமன்
கருடக் கொடி ஏந்தியவன் – கிருஷ்ணன்

இந்த விஷயங்களை எல்லாம் நமக்குச் சொல்பவர்கள் யார் புராணங்களையும் இதிஹாசங்களையும் எழுதியோர் — அவர்கள் உண்மை விளம்பிகள் — எதையும் மறைக்காதவர்கள் — மிகவும் கூர்ந்து கவனிப்பவர்கள். — நல்லது, கெட்டது அனைத்தையும் பட்டியலிடுவோர். இப்படி எல்லா விஷயங்களையும் சொல்வதிலிருந்து புராணங்கள் பொய் சொல்லாது என்பது நமக்குப் புரிகிறது.

கண்ணனும் பலராமனும் ஒரே தாய்க்குப் பிறந்தவர்கள். ஆயினும் அவர்களிடையே எத்தனை வேறுபாடுகள்!!! இதைப் படிக்கையில் வியப்பு மேலிடுகிறது.
bala big
Balaraman at he British Museum in London

இந்துக்கள் வர்ணங்களை ஆராய்வதில் மன்னர்கள். சிவபெருமானுடைய ஐந்து முகங்களுக்கும் ஐந்து வண்ணங்களைக் கூறுவர். இதைப் பார்த்து பௌத்தர்களும் மாயா நாகரீக மன்னர்களும் திசைகளுக்கும் வர்ணம் சொன்னார்கள்.

பலராமன் அண்ணன் — கிருஷ்ணன் தம்பி — இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அவ்வளவு அன்பு. இருந்த போதிலும் அண்ணன் ஒரு கட்சி — தம்பி வேறு ஒரு கட்சி!!

மாபாரதப் போரில் பாண்டவர்களை ஆதரித்தான் கண்ணன். பலராமன் சுவிட்சர்லாந்து மாதிரி எந்தக் கட்சியிலும் சேராமல் நடுநிலை வகித்தார். மாபாரதம் யுத்தம் முடியும் 18ஆவது நாளில் தீர்த்த யாத்திரையில் இருந்து திரும்பி வந்தார். அன்றுதான் பீமனுக்கும் துரியோதணனுக்கும் இறுதி யுத்தம் — கதாயுதப் போர் — அப்போது கள்ளக் கிருஷ்ணன் சொன்னதைக் கேட்டு விதியை மீறி துரியோதணன் தொடையில் அடித்தான் பீமன். இவ்விருவருக்கும் கதாயுதப் பயிற்சி கொடுத்தது பலராமன் தான். பீமன் தவறு செய்தது கண்டு பொறுக்காமல் களத்தில் குதிக்கத் தயாரானான் பலராமன். கிருஷ்ணன் அவனைத் தடுத்து நிறுத்தினான். அதர்மம் தோற்பதற்காக ஒன்றிரண்டு தப்புகள் செய்யலாம் என்பது கண்ணன் கட்சியின் வாதம்.

அண்ணனும் தம்பியும் இப்படி மோதிக் கொண்டது பல இடங்களில் நடந்தது. கிருஷ்ணனுக்கு ருக்மினி காதல் கடிதம் எழுதினாள். உடனே கிருஷ்ணன் அவளைக் கடத்தி வந்தான். ருக்மினியின் தந்தை ருக்மின் என்பவன் போருக்கு வந்தான். உடனே பலராமன் களத்தில் குதித்து ருக்மினைக் கொன்றான். ருக்மின் மகள் ருக்மினியை கண்ணன் கல்யாணம் செய்தான்.

இதேபோல அர்ஜுனன், சுபத்ரா என்னும் காதலியைக் கடத்திவந்தான். அது தவறு என்று எதிர்த்தான் பலராமன்.

கிருஷ்ணனுடைய பேரன் சம்பா, துரியோதணன் மகள் லெட்சுமனாவை கடத்த முயற்சித்தான். துரியோதனன், அவனைப் பிடித்து வைத்தான். அப்போது சம்ரசத்துக்குப் போன பலராமன் இருவரும் ஒருவரை ஒருவர் மணம் முடிக்க உதவினான். இப்படி மூன்று காதல் – கடத்தல் விஷயத்தில் மூன்று நிலை!! இதுதான் பலராமன்.

Krishna_meets_parents
Blue for Balaraman, Yellow for Krishna; meeting parents.

எப்போதும் நீல நிற உடை அணிவான். கையில் கலப்பை வைத்திருப்பான், உலக்கையும் வைத்திருப்பான். பனைக்கொடி ஏந்திச் செல்வான். ஒருகாலத்தில் இந்தியா முழுதும் கண்ணன் கோவிலில் பலராமன் சந்நிதியும் உண்டு. இவனது வழிபாடு 2300 ஆண்டுகளுக்கு முன்னரே நடந்தது என்பது சாணக்கியன் எழுதிய அர்த்தசாஸ்திரத்தில் தெரிகிறது. கிரேக்க- இந்திய மன்னர்கள், மௌரியப் பேரசர்கள் ஆகியோர் இவனுக்கும் கண்னனுக்கும் நாணயங்கள் வெளியிட்டனர். ஆழ்வார் பாடல்களில் இருந்து இவரது வழிபாடு தமிழ் நாட்டுக் கோவில்களில் ஏழாம் எட்டாம் நூற்றண்டுவரை இருந்ததை அறிகிறோம்.

பலராமனின் பனைக்கொடியை தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். புற நானூற்றுப் பாடலில் கண்ணனையும் அவன் அண்ணனையும் நக்கீரர் (புறம். 56) புகழ்கிறார். காளிதாசன் மேகதூத காவியத்தில் ( பாடல் 51, பாடல் 61) சொன்னதை தமிழ் கவிஞர்கள் பல இடங்களில் பாடுவர்.

மாபாரதம் ஒரு விநோதக் கதை சொல்லும். வெள்ளை கருப்பு ஆகிய இரண்டு நிற முடிகளை தேவகியின் வயிற்றில் வைத்தானாம் விட்டுணு! ஆகவே இரு நிறக் குழந்தைகள்!! ‘’ஆல்பினிஸம்’’ என்பது தோலில் நிறமிகள் இல்லாமல் செய்யும் ஒரு குறைபாடு. ஒருவேளை மாபாரதக் கதை இதைத்தான் இப்படி முடிக் கதையால் மூடி மறைத்து விட்டதோ !!!

அமரகோஷம் என்னும் அற்புத நிகண்டு பலராமனுக்கு 15 பெயர்களைச் சொல்கிறது. உலக்கைத் தடியன், பனைக் கொடியோன், கலப்பைக் கையன், நீல ஆடையன், யமுனைத் திருப்பி, ரோகிணி மைந்தன், ரேவதியின் காதலன் என்னும் பொருள்படும் பல சொற்கள் பலராமனின் புகழ் பாடுகின்றன.
Death_of_Bala_Rama
Balarama’s death; white snake may be Adi sesah or Kundalini power. He left his body by yoga.

பலராமன் பற்றிய எனது ஆராய்ச்சி

பலராமன் எப்போதும் கலப்பை கொண்டு செல்பவர். அவன் ஒரு விவசாயி. கள் குடிப்பதில் பிரியம் இருந்ததால் பனை மரத்தைக் கொடியில் வைத்தார். கிருஷ்ணனுக்கு அரசியலில் விருப்பம், பலராமனுக்கோ விவசாயத்தில் விருப்பம். அது இல்லாவிடில் கலப்பையைக் கையில் ஏந்தித் திரிய நியாயமே இல்லை. அது மட்டுமல்ல. அவரைப் பற்றி ஒரு சுவையான கதையும் உண்டு. ஒரு நாள் குடிபோதை மயக்கத்தில் ஏ! யமுனை நதியே என் அருகில் வா! என்றாரம். அது மறுத்தவுடன் கலப்பையால் கீறியவுடமன் அது பயந்து கொண்டு சொன்ன இடத்துக்கு எல்லாம் வந்ததாம். இந்தக் கதை புராணம் பயன்படுத்தும் பரிபாஷை! அதாவது யமுனை நதியில் இருந்து பாசனக் காலவாய் வெட்டிப் பயிர் செய்தான் என்பதையே புராணங்கள் இப்படி சுவைபடச் சொல்லும்.

அகத்தியர் கடலைக் குடித்தார், விந்திய மலையைக் கர்வ பங்கம் செய்தார் என்பது எல்லாம் பெரிய எஞ்சினீயரிங் சாதனைகள் என்பதைப் பல கட்டுரைகளில் விளக்கமாகக் கொடுத்துவிட்டேன். அது போன்றதே பலராமன் யமுனையை இழுத்த கதையும்.
baladevakrishna
Balarama and Krishna on Indo-Greek coins

பலராமனின் பெயர்கள்

பலபத்ரன், ப்ராலம்பக்னன், பலதேவன், அச்யுதக்ரஜன், காமபாலன், ஹலாயுதன், நீலாம்பரன், ரோகிணேயன், தாலங்கன், முசலிஹலி, சங்கர்ஷனன், க்ஷீரபாணி, காளிந்தி பேதனன், காளிந்தி ஹர்ஷணன், ஹல ப்ரித், லாங்கலி, குப்த சரன் (ரகசிய நடமாட்டம்).

இவை அனைத்தும் மேற்கூறிய அவனது சாதனைகளை விளக்கும் வடமொழிச் சொற்கள் ஆகும்.
வெள்ளைப் பாண்டி என்று யாதவ குல மக்களிடையே பெயர் உண்டு. இதுவும் பலராமன் பெயராக இருக்கலாம்.

MauryanBalaramaCoin3rd-2ndCenturyCE
Balaraman on Maurya coins;Third century BCE

பலராமன் புள்ளிவிவரம்

1.ஆதிசேஷன் அவதாரம்
2.புரி தேர்த் திருவிழாவில் நீல நிற பனைக்கொடி பொறித்த தேரில் பவனி வருவான்
3.மனைவி பெயர்- ரேவதி
4.வளர்ப்புத் தாய்- ரோகிணி
5.தாய் தந்தை – தேவகி, வசுதேவன்
6.தம்பி பெயர் – கள்ளக் கிருஷ்ணன்
7.கையில் இருப்பது – கலப்பை
8.கொடியில் திகழ்வது – பனை மரம்
9.குடிக்கப் பிடிப்பது – மது
10.எடுக்கப் பிடிப்பது – முசலி எனும் உலக்கை
11.காதல் விவகாரத் தொடர்புகள்: ருக்மினி- கிருஷ்ணன் காதலுக்கு ஆதரவு; சுபத்ரா- அர்ஜுனன் காதலுக்கு எதிர்ப்பு; லெட்சுமனா- சம்பா காதலில் நடுநிலை.
12.மகன்கள் பெயர்:- உள்முகன், நிஷதன்
13.பிடித்த பொழுது போக்கு – ஊர் சுற்றல் (தல யாத்திரை)
14.தம்பியுடன் சேர்ந்து செய்த துஷ்ட நிக்ரஹம்: தேனுகாசுரன், கம்சன், முஷ்டிகன், ரோமஹர்ஷணன், த்விவிடன், ருக்மின், ப்ரலம்பன்.
rath-yatra-and-appliqua
Balaraman chariot along with other chariots in Puri, Orissa.

15.இதில் ரோமஹர்ஷனன் கொலை மட்டும் முன்கோபத்தில் தெரியாமல் செய்தது — அந்தப் பாவத்தைத் தீர்ப்பதற்காக தீர்த்த யாத்திரை சென்றார். இவன் மிகுந்த பலசாலீ. பெயரில் பல தேவன், பல பத்ரன், பல ராமன் என்பதில் இருந்தே புலப்படும் — நல்ல மல்யுத்த வீரன் — எதிரிகளின் காலைப் பிடித்து சுழற்றி மரத்தின் மீது எறியும் வல்லமை படைத்தவன்.

நக்கீரனும் சங்க காலப் புலவர் பலரும் காளிதாசனும் பாடியது போல நாமும் பலராமன் புகழ் பாடுவோம்.

Balabhadra_Subhadra_Jagannath
Balabhadra, Subhadra, Jaganatha in Puri.

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: