சிந்தனைச் சிற்பிகள் (ஜய வருடம்) 2014 நவம்பர் மாத காலண்டர்
Post No. 1378; Date: 30 அக்டோபர் 2014
Prepared by London swaminathan (copyright)
முக்கிய நாட்கள்: நவம்பர் 4 முஹர்ரம்; அமாவாசை:22;
சுபமுஹூர்த்த நாள்:– 2, 9, 12, 13, 21; பௌர்ணமி – 6; ஏகாதசி- 3, 18;
நவம்பர் 1 சனிக் கிழமை
எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும் – கொன்றை வேந்தன்
நவம்பர் 2 ஞாயிற்றுக் கிழமை
கைப்பொருள் தன்னில் மெய்ப்பொருள் கல்வி – கொன்றை வேந்தன்
நவம்பர் 3 திங்கட் கிழமை
ஓதாமல் ஒருநாளும் இருக்கவேண்டாம் — உலக நீதி
நவம்பர் 4 செவ்வாய்க் கிழமை
இளமையிற் கல்; ஓதுவது ஒழியேல்; வித்தை விரும்பு – ஆத்திச்சூடி
நவம்பர் 5 புதன் கிழமை
கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே – வெற்றிவேற்கை
நவம்பர் 6 வியாழக் கிழமை
எண் என்ப ஏனை எழுத்து என்ப இவ்விரண்டும்
கண் என்ப வாழும் உயிர்க்கு – திருக்குறள்
நவம்பர் 7 வெள்ளிக் கிழமை
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே – புறநானூறு
நவம்பர் 8 சனிக் கிழமை
தனக்குப் பாழ் கற்றறிவில்லா உடம்பு – நான்மணிக் கடிகை
நவம்பர் 9 ஞாயிற்றுக் கிழமை
கல்லா ஒருவனுக்கு அவன் சொல்லே கூற்றாக முடியும் – நான் மணிக்கடிகை
நவம்பர் 10 திங்கட் கிழமை
எக்குடிப் பிறப்பினும் யாவரே ஆயினும்
அக்குடியிற் கற்றோரை வருக என்பர் – வெற்றி வேற்கை
நவம்பர் 11 செவ்வாய்க் கிழமை
கல்லாத மூத்தானைக் கைவிட்டுக் கற்றவன் இளமை பாராட்டும் உலகு – நான் மணிக்கடிகை
நவம்பர் 12 புதன் கிழமை
நெஞ்சத்து நல்லம் யாம் என்னும் கல்வியழகே அழகு – நாலடியார்
நவம்பர் 13 வியாழக் கிழமை
பிச்சைப் புக்காயினும் கற்றல் மிகவினிதே – இனியவை நாற்பது
நவம்பர் 14 வெள்ளிக் கிழமை
கணக்காயர் இல்லாத ஊரால் நன்மை இல்லை – திரிகடுகம்
நவம்பர் 15 சனிக் கிழமை
ஒருமைக் கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமைக்கும் ஏமாப்புடைத்து — திருக்குறள்
நவம்பர் 16 ஞாயிற்றுக் கிழமை
எம்மை உலகத்தும் யாம் காணேம் கல்வி போல்
மம்மர் அறுக்கும் மருந்து – நாலடியார்
நவம்பர் 17 திங்கட் கிழமை
எண் அவன் காண் எழுத்து அவன் காண்
இன்பக் கேள்வி இசை அவன் காண் – அப்பர் தேவாரம்
நவம்பர் 18 செவ்வாய்க் கிழமை
பயிற்றிப் பல கல்வி தந்து – இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும் – பாரதி பாடல்
நவம்பர் 19 புதன் கிழமை
ஒருகுடிப் பிறந்த பல்லோருள்ளும்
மூத்தோன் வருக என்னாதவருள்
அறிவுடையோனால் அரசுஞ் செல்லும் –புறநானூறு
நவம்பர் 20 வியாழக் கிழமை
தேடு கல்வியிலாதொரு ஊரைத் தீயினுக்கிரையாக மடுத்தல்
கேடு தீர்க்கும் அமுதம் எம் அன்னை கேண்மைகொள்ள வழி இவை கண்டீர்–பாரதியார்
நவம்பர் 21 வெள்ளிக் கிழமை
வெள்ளதால் போகாது வெந்தணலால் வேகாது
வேந்தராலும் கொள்ளத்தான் முடியாது (கல்வி) –
நவம்பர் 22 சனிக் கிழமை
கல்வி கரையில, கற்பவர் நாள் சில – நாலடியார்
நவம்பர் 23 ஞாயிற்றுக் கிழமை
வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளூம்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பாலொருவனும் அவன்கட் படுமே – புறநானூறு
நவம்பர் 24 திங்கட் கிழமை
நரை முடித்துச் சொல்லால் முறை செய்தான் சோழன்
குலவிச்சை கல்லாமற் பாகம் படும் — பழமொழி
நவம்பர் 25 செவ்வாய்க் கிழமை
கற்கக் கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக – திருக்குறள்
Picture of Shantiniketan, West Bengal
நவம்பர் 26 புதன் கிழமை
நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான் கற்ற
நூல் அளவே ஆகுமாம் நுண்ணறிவு – வாக்குண்டாம்
நவம்பர் 27 வியாழக் கிழமை
கேள்வி முயல்; நூற் பல கல்; எண் எழுத்து இகழேல் – ஆத்திச்சூடி
நவம்பர் 28 வெள்ளிக் கிழமை
கடைநிலத்திற் பிறந்தவர் எனினும் கற்றறிந்தவரைத் தலைநிலத்து வைப்பர் – நாலடியார்
நவம்பர் 29 சனிக் கிழமை
பற்பல நாளும் பழுதின்றிப் பாங்குடைய கற்றலின்காழ் இனியதில் — இனியவை நாற்பது
நவம்பர் 30 ஞாயிற்றுக் கிழமை
கற்றோர்க்கு கல்வி நலனே கலன் அல்லால்
மற்றோர் அணிகலம் வேண்டாவாம் –– நீதிநெறிவிளக்கம்
Picture of school under Delhi bridge
In each month’s calendar you can read beautiful Tamil quotations!
Contact swami_48@yahoo.com
You must be logged in to post a comment.