Sangam Age Tamils
கட்டுரையை எழுதியவர் :– London swaminathan
கட்டுரை எண்- 1518; தேதி 26 டிசம்பர், 2014.
(compiled by Santanam Swaminathan)
இதன் முதற் பகுதி “தமிழுக்கு எத்தனை பெயர்கள்?” கட்டுரை எண்:–1094 ; தேதி ஜூன் 9, 2014 என்ற தலைப்பில் வெளியாகியது. இது இரண்டாம் பகுதி.
1.தமிழும் காயத்ரி மந்திரமும்
காயத்ரி மந்திரம் சூரிய ஒளி போல அறிவைப் பிரகாசிக்கச் செய்யும். அதை சூரியனை நோக்கி அனுதினமும் பார்ப்பனர்கள் மூன்று வேளைகளிலும் ஜபிப்பர். அதைப் போல தமிழும் அருள் புரிகிறது என்று தண்டிஅலங்காரம் சொல்லாமற் சொல்லும்:
ஓங்கல் இடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி
ஏங்கொலி நீர் ஞாலத்து இருள் அகற்றும்- ஆங் கவற்றுள்
மின்னேர் தனி ஆழி வெங்கதிர் ஒன்று ஏனையது
தன் நேர் இலாத தமிழ் (தண்டி அலங்காரம்)
There are two things born from the mountains, shining so brilliantly that the great bow down, driving darkness from earth circled by roaring waters. One is the flaming sun, single wheel bright as lightning, the other is Tamil that has no like. (Tantiyalankaram)
Tamil Philanthropist Bekan and the peacock
- பரிபாடலில் (பாடல் 9) குன்றம்பூதனார் காந்தர்வ இன்பத்தை அனுபவிக்க உரியாரை
“ தள்ளாப் பொருள் இயல்பின்
தண் தமிழாய் வந்திலார்
கொள்ளார் இக்குன்று பயன்” என்பர்.
- “இன் தமிழ் இயற்கை இன்பம்” என்று கந்தருவ போகத்தை சிந்தாமணி (பாடல் 2063) கூறும்.
செந்தமிழ், பைந்தமிழ், தண்தமிழ்,இன் தமிழ் என புலவர்கள் வாழ்த்துகின்றனர்.
- தமிழ் இயல்பு இனிய சுகபோகங்களோடு உயர்வாய் உய்ர்வாய் மிளிர்கிறது
இமிழ் திரை வையத்து ஏயர் பெருமகன்
தமிழ் இயல் வழக்கினன் (பெருங்கதை 4-17)
- காவீரி நதியை சீழ்தலைச் சாத்தனார் வாழ்த்தும் முறை:
கோன் நிலை திரிந்து கோடை நீடினும்
தான் நிலை திரியாத் தண் தமிழ் பாவை (மணிமேகலை)
- காட்டில் மனைவியைப் பிரிந்த ராமன் , ஒரு தாமரை மலரை நோக்கி
“தன் பால தழுவும் குழல் வண்டு
தமிழ் பாட்டு இசைக்கும் தாமரையே (கம்பன், கிட்கிந்தா, பம்பை 28)
- சீதை சொல் பற்றி கம்பன்
குழுவு நுண்தொளை வேயினும் குறி நரம்பௌ எறிவுற்று
எழுவு தண் தமிழ் யாழினும் இனிய சொற் கிளியே!
- தமிழ் என்னும் சொல்லை இனிமை, குளிர்ச்சி, உவகை முதலிய பொருளில் கவிகள் பயன்படுத்துவதைக் காண்கிறோம். தமிழ் பற்றி தொல்காப்பியப் பாயிரம் சொல்லுவது:–
வட வேங்கடம் தென் குமரி ஆயிடைத்
தமிழ் கூறும் நல் உலகத்து
செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு
முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணி
நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து
——ஐந்திரம் நிறைந்த
தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிப்
பல்புகழ் நிறுத்த படிமையோனே (பனம்பாரர்-பாயிரம்)
செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்
- இருபாற்றென்ப திரி சொற் கிளவி
செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்
தம் குறிப்பினவே திசைச் சொற் கிளவி
சிதைந்தன வரினும் இயைந்தன வரையார் (தொல்காப்பியம்-எழுத்து)
- கன்னித் தென்கரைக் கட்பழந்தீவம்
சிங்களம் கொல்லம் கூவிளமென்னும் (மயிலைநாதர்)
அகத்தியன் பற்றி………………..
- தாங்கா நல்லிசைத் தமிழ்க்கு விளக்காகென
வானோர் ஏத்தும் வாய் மொழிப் பல் புகழ்
ஆனாப் பெருமை அகத்தியன் (பன்னிரு படலம்)
- உயர் மதிற்கூடலின் ஆய்ந்த ஒண்தீந்தமிழின் துறைகள் (திருக்கோவையார்)
13.மூவறு மொழியுளும்
குணகடல் குமரி குடக வேங்கடம்
எனநான் கெல்லையி னிருந்தமிழ்
-நன்னூல் பாயிரச் சூத்திரம்
14.தேனுறை தமிழும் திருவுறை கூடலும் (கல்லாடம்)
பாரதி பாடல்கள்
15.யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்;
பாமரராய்,விலங்குகளாய்,உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,
நாமமது தமிழரெனக் கொண்டு இங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்.
16.யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்
வள்ளுவர் போல், இளங்கோவைப் போல்,
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை;
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை;
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம்;ஒரு சொற் கேளீர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!
பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புது நூல்கள்
தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகைமை இல்லை:
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்
17.வாழிய செந்தமிழ் ! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி
வாழிய வாழியவே
வானம் அளந்தது அனைத்தும் அறிந்திடும்
வன்மொழி வாழியவே
ஏழ்கடல் வைப்பினும் தன் மணம் வீசி
இசை கொண்டு வாழியவே
எங்கள் தமிழ் மொழி எங்கள் தமிழ் மொழி
என்றென்றும் வாழியவே
சூழ் கலி நீங்கத் தமிழ் மொழி ஓங்கத்
துலங்குக வையகமே
தொல்லை வினை தரு தொல்லை அகன்று
சுடர்க தமிழ் நாடே!
வாழ்க தமிழ் மொழி வாழ்க தமிழ் மொழி
வாழிய வாழியவே
வானம் அறிந்தது அனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழியவே
18.தமிழ்த் திரு நாடு தன்னைப் பெற்ற-எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா !
அமிழ்தில் இனியதடி பாப்பா !- நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா !
சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே- அதைத்
தொழுது படித்திடடி பாப்பா !
செல்வம் நிறைந்த ஹிந்துஸ்தானம்- அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா !
Avvaiyar and Adhiyamaan
19.பாரதிதாசன் பாடல்கள்
தமிழுக்கும் அமுததென்று பேர் !- அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் !
தமிழுக்கு நிலவென்று பேர் !- இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர் !
தமிழுக்கு மணமென்று பேர்- இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர் !
தமிழுக்கு மதுவென்று பேர்- இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச் செம்பயிருக்கு வேர் !
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்- இன்பத்
தமிழ் நல்ல புகழ் மிக்க புலவர்க்கு வேல் !
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் !- இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர் தந்த தேன் !
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்-இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள் !
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்- இன்பத்
தமிழ் எங்கள் வலமிக்க உளமுற்ற தீ
தமிழ் பற்றிய முக்கிய மேற்கோள்கள் அனைத்தையும் இந்த இரண்டு பகுதிக் கட்டுரையில் காணலாம்.
contact swami_48@yahoo.com
You must be logged in to post a comment.