கல்யாணமாம், கல்யாணம்!

azaki

Article No.2011

Written by London swaminathan

Swami_48@yahoo.com

Date : 23  July 2015

Time uploaded in London : காலை 8-01

 

கல்யாணம் என்று வந்தால் யாருக்கு எதில் ஆசை? என்ன எதிர்பார்க்கிறார்கள்? நம் முன்னோர்கள் பாடிய பாட்டு என்ன தெரியுமா?

பெண்ணுக்கு ஆசை – கணவன் அழகாக இருக்க வேண்டும்

அம்மாவுக்கு ஆசை – மாப்பிள்ளை நல்ல பணக்காரராக இருக்க வேண்டும்

அப்பாவுக்கு ஆசை – மாப்பிள்ளை நல்ல புத்திசாலியாக இருக்க வேண்டும்

உறவினர்களுக்கு ஆசை – நல்ல குடும்பமாக இருக்க வேண்டும்

அழைப்புக்கிணங்கி வந்தோருக்கு ஆசை – நல்ல சாப்பாடு கிடைக்க வேண்டும்.

கன்யா வரயதே ரூபம், மாதா வித்தம், பிதா ஸ்ருதம்!

பாந்தவா: குலம் இச்சந்திமிஷ்டான்னமிதரே ஜனா:!!

radha beauty

நல்ல மனைவி யார்?

ஐந்து ‘ல’காரம் இருந்தால் போதும்; நீங்கள் நல்ல அதிர்ஷ்டசாலிதான்! ஐந்து ல- காரம் என்றவுடன் ஐந்து லட்சம் ரூபாய் வரதட்சிணை என்று நினைத்துவிடாதீர்கள். அந்தக் காலம் எல்லாம் மலை ஏறிப் போய்விட்டது. கீழ்கண்ட ஐந்து ல, லா – வேண்டும்:-

அனுகூ’லா’ = நன்மை செய்பவர்

விம’லா’ங்கி = நாணம் உள்ளவர்

கு’ல’ஜா = உயர்குலப் பெண்; அதாவது பண்புமிக்க குடும்பப் பெண்

குச’லா’ = திறமைசாலி

சுசீ’லா’ = நல்ல ஒழுக்கம் வாய்ந்தவள்

அனுகூலாம் விமலாங்கிம் குலஜாம் குசலாம் சுசீலசம்பன்னாம்

பஞ்ச லகாராம் பார்யாம் புருஷ: புண்யோதயா லபதே

–சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

IMG_4877 (2)

மாப்பிள்ளைக்கு எதனால் மதிப்பு?

இதேபோல மாப்பிள்ளைக்கோ அல்லது எந்த ஒரு மனிதனுக்கோ, மதிப்பளிக்கக்கூடிய ஐந்து ‘வ’கார அம்சங்கள் இருக்கின்றன. அவையாவன:–

வஸ்திரம் / உடுப்பு

வபுஷம் / உருவம்

வாக் / உரைத்தல் (பேசுதல்)

வித்யா/ கல்வியறிவு

விநய/ பணிவு

வஸ்த்ரேன வபுஷா வாசா வித்யயா விநயேன ச

வகாரை: பஞ்சாபி: ஹீன நரோநாயாதி கௌரவம்

வாழ்க சம்ஸ்கிருதம்! வளர்க தமிழ்!

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: