Article No. 2049
Written by London swaminathan
Swami_48@yahoo.com
Date : 7 August 2015
Time uploaded in London : – 10-17
உள்ளத்தால் பொய்யாது ஒழுகுவது உண்மை
சொல்லால் பொய்யாது ஒழுகுவது வாய்மை
உடலால் பொய்யாது ஒழுகுவது மெய்மை!
தமிழர்களைப் போல இவ்வளவு தெளிவாக மனம், மொழி, மெய் ஆகியவற்றின் தூய்மையை விளக்கியவர் எவருளர்?
காயேன, வாசா, மனஸேந்த்ரியைர்வா என்று சொல்வதை – த்ரிகரண சுத்தியை – மிக அழகாக விளக்கிவிட்டனர் தமிழர்கள்!
இனி சம்ஸ்கிருத, தமிழ் பொன் மொழிகலைக் காண்போம்:
அஸ்வமேத சஹஸ்ராத் ஹி சத்யமேவ விசிஷ்யதே – மஹாபாரதம் & ஹிதோபதேசம்
ஆயிரம் அஸ்வமேத யாகங்களை விட சத்யமே சிறந்தது. (உண்மையைக் கடைப் பிடிப்பவன், 1000 யாகங்களைச் செய்வதால் கிடைப்பதைவிடக் கூடுதல் பலன் பெறுவான்)
Xxx
வாய்மை எனப்படுவது — தீமை இலாத சொலல்: குறள் 291
Xxx
உண்மை பேசுவோருக்கு வேறு அறம் தேவைப்பாடாது – குறள் 297
xxx
அசத்யம் ஜன ரஞ்சனம்
பொய் பேசுவது ஜனரஞ்சகம் ஆக இருக்கும் (இறுதியில் கெடுதியை விளைவிக்கும்)
Xxx
பொய்மையும் வாய்மை ………. நன்மை பயக்கும் எனின் –குறள் 292
xxx
நாஸ்தி சத்யாத் பரம் தானம், நாஸ்தி சத்யாத் பரம் தப: – மஹாபாரதம்
உண்மையை விட உயர்ந்த தானம் இல்லை; உண்மையை விட உயர்ந்த தவம் இல்லை
Xxx
தன் நெஞ்சறிவது பொய்யற்க – குறள் 293
xxx
நாஸ்தி சத்யாத் பரோ தர்மோ நான்ருதாத் பாதகம் பரம் – மனுஸ்ம்ருதி, மஹாபாரதம்
உண்மையை விட பெரிய தவம் இல்ல; பொய்யைவிட பெரிய பாதகம் (தீங்கு) இல்லை
Xxx
வாய்மை மொழியின் தவத்தொடு தானம் செய்வாரின் தலை – குறள் 295
xxx
சச்சாசச்ச வசஸீ பஸ்ப்ருதாதே –அதர்வ வேதம்
உண்மையும் பொய்யும் போட்டி போடும் வசனங்கள்
(அதாவது தர்ம – அதர்மப் போராட்டம் காலாகாலமாக நடைபெறும்)
Xxx
சத்யம் கண்டஸ்ய பூஷணம் – சுபாஷித ரத்ன பாண்டாகாரம்
கழுத்திற்கு அணிகலன் உண்மை விளம்பல்!
Xxx
சத்யம் ப்ரூயாத் ப்ரியம் ப்ரூயான்ன ப்ரூயாத்சத்யமப்ரியம்
ப்ரிய ச நான்ருதம் ப்ரூயாதேஷ தர்ம சநாதன: — மனுஸ்ம்ருதி
உண்மையே பேசு
இனிமையே பேசு
இனிமையற்றதை, உண்மையே ஆனாலும், சொல்லாதே
அதற்காக இனியது என்று கருதி பொய் பேசாதே
இதுவே எக்காலத்துக்கும் பொருந்தும் சநாதன தர்மம் (இந்து மதத்தின் அடிப்படைக் கோட்பாடு) – மனுஸ்மிருதி
Xxx
உலகத்தார் உள்ளத்துள் எலாம் உளன் – உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் — குறள் 294
xxx
சத்யம் வை சக்ஷு:, சத்யம் ஹி ப்ரஜாபதி: — சதபத ப்ராஹ்மணம்
உண்மையே கண்கள், உண்மையே தோற்றுவாய்
Xxx
சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு — குறள் 299
Xxx
சத்யமேவ ஜயதே நான்ருதம், சத்யேன பந்தா விததோ தேவயான: — முண்டகோபநிஷத்
வாய்மையே வெல்லும், பொய்மை வெல்லாது. உண்மையே சொர்கத்தை அடைவதற்கான பாதை, திறவுகோல் (இது தான் இந்திய அரசு, தமிழ் நாடு அரசு சின்னங்களில் உள்ள வாசகம்)
Xxx
புறந்தூய்மை நீரான் அமையும், அகந்தூய்மை வாய்மையால் காணப்படும் — குறள் 298
xxx
சத்யம் ஸ்வர்கஸ்ய சோபானம் – மஹாபாரதம்
உண்மையே சுவர்கத்தின் மாடிப்படிகள்
Xxx
சத்யஸ்ய நாவ: சுக்ருதம் அபீ பரன் – ரிக் வேதம்
உண்மையெனும் படகுகள் நல்லோரைக் கரை சேர்க்கும்
Xxx
பொய்யாமை அன்ன புகழில்லை — குறள் 296
Xxx
சத்யான்ன ப்ரமதிதவ்யம் – தைத்ரியோபநிஷத்
உண்மை பேசுவதை ஒரு போதும் அலட்சியம் செய்யாதே
Xxx
சத்யேன தார்யதே ப்ருத்வீ , சத்யேன பபதே ரவி: — மனுஸ்ம்ருதி, சாணக்ய நீதி
இந்த பூமியே உண்மையினால்தான் நிலைபெற்று நிற்கிறது, இந்த சூரியன் உண்மையின் அடிப்படையிலேயே ஒளிருகிறது
Xxx
சத்யேன உத்தபிதா பூமி: — ருக் வேதம், அதர்வ வேதம்
உண்மைதான் பூமியைத் தாங்கி நிற்கிறது.
Xxx
ஹிரண்மயேன பாத்ரேன சத்யஸ்யாபிஹிதம் முகம் – ஈஸாவாஸ்யோபநிஷத்
பொன்மயமான பாத்திரத்தினால் உண்மையின் முகம் மூடப்பட்டுள்ளது.
Xxx
வாய்மையை விடச் சிறந்த தர்மம் எனக்குத் தெரியாது – குறள் 300
–சுபம்–
You must be logged in to post a comment.