அக்டோபர் 2015 காலண்டர்

arunagiri annamalai

அருணகிரிநாதர் சிலையின் படம்

(மன்மத வருடம் புரட்டாசி/ஐப்பசி)

இந்த மாதக் காலண்டரில், அருணகிரிநாதர் பாடிய, சந்தத் தமிழ் திருப்புகழ் மேற்கோள்கள் இடம்பெறுகின்றன.

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

Compiled  by London swaminathan

Date: 28  September 2015

Post No: 2195

Time uploaded in London :– 16-10

(Thanks  for the pictures) 

முக்கிய நாட்கள்: அக்டோபர் 2 காந்தி ஜயந்தி, 12 மஹாளய அமாவாசை ,13 நவராத்திரி ஆரம்பம்,21 சரஸ்வதி பூஜை, 22 விஜயதசமி, 24 மொகரம்;

8, 13 ஏகாதசி , 27 பௌர்ணமி

முகூர்த்த நாட்கள்: 19, 22,25, 26

amman gold

அக்டோபர் 1 வியாழக்கிழமை

முத்தமிழடை வினை முற்படு கிரிதனில்

முற்பட எழுதிய முதல்வோனே

முப்புரம் எரிசெய்த அச்சிவனுறை ரதம்

அச்சது பொடிசெய்த அதிதீரா.

அக்டோபர் 2 வெள்ளிக்கிழமை

தினைவேடர் காவல் தங்கு மலை காடெலாமுழன்று

சிறுபேதை கால் பணிந்த குமரேசா

திரையாழி சேது கண்டு பொரு ராவணேசனை வென்ற

திருமால் முராரி தங்கை  அருள்பாலா.

அக்டோபர் 3 சனிக்கிழமை

சந்ததம் பந்தத் தொடராலே

சஞ்சலந்துஞ்சித் திரியாதே

கந்தனென்றுற் றுனைநாளும்

கண்டுகொண் டன்புற்றிடுவேனோ.

அக்டோபர் 4 ஞாயிற்றுக்கிழமை

இரவுபகல் மோகனாகியபடியில் மடியாமல் யானுமுன்

இணையடிகள் பாடி வாழ என்நெஞ்சிற் செஞ்சொல் தருவாயே.

அக்டோபர் 5 திங்கட்கிழமை

உயர் கருணை புரியும் இன்பக் கடல் மூழ்கி

உனையெனதுள் அறியும் அன்பைத் தருவாயே

amman lakshana

அக்டோபர் 6 செவ்வாய்க்கிழமை

மங்கை அழுது விழவே யமபடர்கள்

நின்று சருவமலமே யொழுக வுயிர்

மங்கும் பொழுது கடிதே மயிலின்மிசை வரவேணும்.

அக்டோபர் 7 புதன்கிழமை

மதித்துச் திண்புரம் சிரித்துக் கொன்றிடும்

மறத்திற் றந்தைமன் ரினிலாடி

மழுக்கைக் கொண்ட சங்கரர்க்குச் சென்றுவண்

டமிழ்சொற் சந்தமொன்  றருள்வாயே.

அக்டோபர் 8 வியாழக்கிழமை

புரக்கைக்குன் பதத்தைந்தெனக்குத் தொண்டுறப்பற்றும்

புலத்துக்கண் செழிக்கச் செந்தமிழ் பாடும்

அக்டோபர் 9 வெள்ளிக்கிழமை

மங்கைமார் கொங்கைசேரங்க மோகங்களால்

வம்பிலே துன்புறாமே

வண்குகா நின்சொரூபம் ப்ரகாசங்கொலே

வந்து நீயன்பில்  ஆள்வாய்.

அக்டோபர் 10 சனிக்கிழமை

துன்பநோய் சிந்த நற்கந்தவேள் என்றுனைத்

தொண்டினால் ஒன்றுரைக்க  அருள்வாயே

a o maa

அக்டோபர் 11 ஞாயிற்றுக்கிழமை

அறிவால் அறிந்து இருதாளிறைஞ்சும்

அடியார்  இடைஞ்சல் களைவோனே

அழகான செம்பொன் மயில்மேல் அமர்ந்து

அலைவாயுகந்த பெருமாளே

அக்டோபர் 12 திங்கட்கிழமை

தீப மங்கள ஜோதி நமோ நம

தூய அம்பல லீலா நமோ நம

தேவ குஞ்சரிபாகா  நமோ நம  –அருள்தாராய்.

அக்டோபர் 13 செவ்வாய்க்கிழமை

அபகாரநிந்தைப் பட்டுழலாதே

அறியாத வஞ்சரைக் குறியாதே

உபதேச மந்திரப் பொருளாலே

உனை நான் நினைந்தருட் பெறுவேனோ.

அக்டோபர் 14 புதன்கிழமை

அவமாயை கொண்டு உலகில் விருதா அலைந்து உழலும்

அடியேனை அஞ்சலென வரவேணும்

அறிவாகமும் பெருக இடரானதும் தொலைய

அருள்ஞான இன்பமது புரிவாயே.

அக்டோபர் 15 வியாழக்கிழமை

பிணிபட்டு உணர்வற்று அவமுற்றியமற்

பெறுமக் குணமுற் றுயிர்மாளும்

பிறவிக்கடல் விட்டுயர் நற்கதியைப்

பெறுதற்கு அருளைத் தரவேணும்

kolu3

அக்டோபர் 16 வெள்ளிக்கிழமை

கமல விமல மரகதமணி

கனகமருவும் இருபாதங்

கருத அருளி எனது தனிமை

கழிய அறிவு தரவேணும்.

அக்டோபர் 17 சனிக்கிழமை

வானே காலே தீயே நீரே

பாரே பருக் குரியோனே

மாயா மானே கோனே மானார்

வாழ்வே கோழிக் கொடியோனே.

அக்டோபர் 18 ஞாயிற்றுக்கிழமை

நானே நீயாய் நீயே நானாய்

நானா வேதப் பொருளாலும்

நாடா வீடா யீடே றாதே

நாயேன் மாயக் கடவேனோ.

அக்டோபர் 19 திங்கட்கிழமை

ஓதம் பெறுகடல் மோதுந்திரையது

போலும் பிறவி  லுழலாதே

ஓதும் பல அடி யாருங் கதிபெற

யானுன் கழலினை பெறுவேனோ.

அக்டோபர் 20 செவ்வாய்க்கிழமை

ஆலத்தை ஞாலத்து ளோர்திக்கு வானத்த

ராவிக்கள் மாள்வித்து மடியாதே

ஆலித்து மூலத் டேயுட்கொ ளாதிக்கு

மாம்வித்தை யாமத்தை யருள்வோனே

original

அக்டோபர் 21 புதன்கிழமை

ஏறு தோகை மீதேறி யாலித் திடும்வீரா

ஏழு லோகம் வாழ்வான சேவற் கொடியோனே

சீறு சூரர் நீறாக மோதிப் பொரும்வேலா

தேவ தேவ தேவாதி தேவப் பெருமாளே.

அக்டோபர் 22 வியாழக்கிழமை

ஆடலழ கொக்க ஆடுமயி லெற்றி

ஆண்மையுயுட னிற்கு முருகோனே

ஆதியர ரனுக்கு வேதமொழி முற்றி

யார்வம்விளை வித்த அறிவோனே

அக்டோபர் 23 வெள்ளிக்கிழமை

செருக்கழியத் தெழித்துதிரத்

திரைக்கடலிற் சுழித்தலையிற்

றிளைத்த  அயிற் கரக்குமரப் பெருமாளே

அக்டோபர் 24 சனிக்கிழமை

வடகிரி தொளைபட அலைகடல் சுவறிட

மற்றுத் திக்கெனு மெட்டுத் திக்கிலும் வென்றிவாய

வலியுட னெதிர்பொரு மசுரர்கள் பொடிபட

மட்டித் திட்டுயர் கொக்கைக்குத்திம லைந்தவீரா

அக்டோபர் 25 ஞாயிற்றுக்கிழமை

பருகுத லரியது கந்த தீதிது

உளதென குறளிகள் தின்று மேதகு

பசிகெட வொருதனி வென்ற சேவக மயில்வீரா

Navaratri2

அக்டோபர் 26 திங்கட்கிழமை

மயிலு மியலறி புலமையு முபநிட

மதுர கவிதையும் விதரண கருணையும்

வடிவு மிளமையும் வளமையு மழகிய பெருமாளே

அக்டோபர் 27 செவ்வாய்க்கிழமை

கால சங்கரி சீலா சீலித்ரி சூலிமந்த்ர சுபாஷா பாஷனி

காள் கண்டிக பாலீ மாலினி கலியாணி

காமதந்திர லீலா லோகினி வாமதந்திர நூலாய் வாள்சிவ

காமசுந்தரி வாழ்வே தேவர்கள் பெருமாளே

அக்டோபர் 28 புதன்கிழமை

ஆறுமுகமான பொருள் நீயருளல் வேண்டும்

ஆதியருணாசலம்  அமர்ந்த பெருமாளே

அக்டோபர் 29 வியாழக்கிழமை

முட்டா மற்றா ளைச்சே விப்பார் முற்பா வத்தைக் களிவோனே

முத்தா முத்தீ யத்தா சுத்தா முத்தீ யத்தா சுத்தா முத்தா முத்திப் பெருமளே

அக்டோபர் 30 வெள்ளிக்கிழமை

வித்தகத் திப்பவள தொப்பையப் பற்கிளைய

வெற்றிசத் திக்கரக முருகோனே

வெற்புமெட் டுத்திசையும் வட்டமிட் டுச்சுழல

விட்டபச் சைச்சரண மயில்வீரா

kolu1

அக்டோபர் 31 சனிக்கிழமை

நீலமே னிக்குலத் தோகைமே லுற்றுநிட்

டூரசூர் கெட்டுகப் பொரும்வேலா

நேசமாய் நித்தநிற் றாலைநீ ளச்சமற்

றோதநீ திப்பொருட் டரவேணும்

–Subham–

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: