Written by London swaminathan
Date: 31 October 2015.
Post No:2289
Time uploaded in London :– 10-05 AM
(Thanks for the pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
நுனி மரத்தில் உட்கார்ந்துகொண்டு அடிமரத்தை வெட்டுபவன் மூடன், முட்டாள் என்று இந்திய இலக்கியங்கள் சித்தரிக்கின்றன. உலக மஹா கவி காளிதாசனும் இப்படி இருந்தவர் என்றும் பின்னர் காளிதேவியின் அருள் பெற்று சிறந்தவர் என்றும் செவி வழிக் கதைகள் செப்பும்.
சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை
முட்டாள்கள் அர்த்தம் தெரியாமல் சொற் பிரயோகம் செய்வர். தமிழில் உள்ள கதை அனைவரும் அறிந்ததே. ஒரு ஊரில் ஒரு பெரியவரின் தாயார் இறந்தவுடன் பலரும் துக்கம் விசாரிக்கச் சென்றனர். ஒரு முட்டாள் ஏது சொல்வதென்று திகைத்திருந்த தருணத்தில் எல்லோரும் செல்வதைக் கவனித்தான். “உனது தாயின் இழப்பு உனக்கு மட்டும் இழப்பன்று; அவர் ஊருக்கே தாயாக விளங்கினார். ஆகையால் இன்று நாங்கள் எல்லோரும் தாயை இழந்த பிள்ளையாகி விட்டோம் என்று பலரும் கூறினர். இவனும் அப்படியே கூறிவிட்டு, வீட்டுக்கு வந்தான். மற்றொரு நாள் ஊர்ப் பெரியவரின் மனைவி இறந்து போனாள். இவன் எல்லோருக்கும் முன் முந்திக் கொண்டு, முந்திரிக் கொட்டை போலச் சென்றான். ஊரே கூடியிருந்தது. இந்த முட்டாள் முன்னே சென்று, “உனது மனைவியை இழந்தது உனக்கு மட்டும் துக்கமன்று. அவள் உனக்கு மட்டும் மனைவியில்லை; ஊருக்கே மனைவியாகத் திகழ்ந்தாள் இன்று நாங்கள் அனைவரும் மனைவியை இழந்த கணவர் ஆகிவிட்டோம்” என்றான். பக்கத்தில் இருந்த பத்துப் பேர் அவனுக்கு அடி உதை கொடுத்து அவனை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்!!
மஹாபாரதம் இதை இன்னும் அழகாகச் சொல்லுகிறது. ஒரு கிளியானது சொன்னதைச் சொல்லும்; அழகாகச் சொல்லும். ஆனால் அதையே ஒரு பூனை பிடிக்க வரும் போது அம்மா, என்னை பூனை பிடிக்கிறது என்று சொல்லத் தெரியாது. இதே கதைதான் முட்டாள்களின் கதையும்.
இதோ சில சம்ஸ்கிருதப் பழமொழிகள்:–
நகைச்சுவை நடிகர்கள், முட்டாள்கள் போல நடித்து நமக்கு அறிவூட்டினர்.
முட்டாள்களின் (அவ) லட்சணம்
தூரத: சோபதே மூர்கோ லம்பசாடபடாவ்ருத:
தூரத்திலிருந்து பார்க்கும்போது பகட்டான ஆடைகளோடு முட்டாள் பிரகாசிக்கிறான்.(பக்கத்தில் போனால் வண்டவாளம் தெரிந்துவிடும்)
அர்தோ கடோ கோஷமுபைதி நூனம்
குறைகுடம் கூத்தாடும்; நிறைகுடம் தழும்பாது (அதிகம் பேசுபவன் மூடன்)
அசுபம் வாக்யமாதத்தே புரீஷமிவ சூகர: — மஹாபாரதம்
எப்படிப் பன்றிகள் மலத்தை நாடிப் போகின்றனவோ, அது போல மூடர்கள் சொல்லத் தகாத சொற்களையே (கெட்ட வார்த்தை) நாடுவர்.
தாவஸ்ச சோபதே மூர்கோ யாவத் கிஞ்சின்ன பாஷதே – ஹிதோபதேசம்
எதுவரை மூர்கர்கள் (முட்டாள்கள்) வாயைத் திறப்பதில்லையோ அதுவரை அவர்கள் சமாளிப்பார்கள் (பேசத் துவங்கினால் யார் என்று தெரிந்து விடும்!!)
ந சோபதே சபா மத்யே ஹம்ஸ மத்யே பகோ யதா – ஹிதோபதேச/ சாணக்ய நீதி தர்பண
சபை மத்தியில் முட்டாள்கள் இருப்பதானது, அன்னப் பறவைகளின் இடையே கொக்கு நிற்பதற்குச் சமம்.
(அன்னமும் கொக்கும் வெள்ளைதான் ஆயினும் எளிதில் இனம் கண்டு விடலாம்; அது போல அறிஞர் சபையில் முட்டாள்கள் உட்கர்ந்தாலும் அவர்களை கொக்கு போலக் கண்டுபிடித்து விடலாம். வானத்தின் மீது மயிலாடக் கண்ட வான் கோழி தானும் தன் பொல்லா சிறகை விரித்தாடிய கதைதான் இது!!)
-சுபம்–
You must be logged in to post a comment.