COMPILED BY LONDON SWAMINATHAN
Date: 7 January 2016
Post No. 2467
Time uploaded in London :– 8-37 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
கடவுள் பற்றி 275 பொன்மொழிகள், பழமொழிகள்
இந்துமதம் பற்றிய 200 பழமொழிகள்- பகுதி 1 (ஜூன் 21, 2012)
இந்துமதம் பற்றிய 200 பழமொழிகள்- பகுதி 2 (ஜூன் 22, 2012)
எனது முந்தைய தொகுப்புகளில் 200 பழமொழிகளும் இன்றைய தொகுப்பில் 75 பழமொழிகளும், ஆக மொத்தம் 275 பழமொழிகள் பொன்மொழிகள் உள:
கீழ்கண்ட தொகுப்பில் பல ஆங்கிலப் பழமொழிகளின் மொழி பெயர்ப்பும் உள.
1.சொர்கம் ஏன் காலியாக இல்லை? நம் பாவங்களை கடவுள் மன்னிப்பதால்!
2.முதல் எழுத்து அ போல உலகிற்கு மூல முதல்வன் பகவான் –வள்ளுவன் குறள்
3.வேண்டுதல் வேண்டாமை இலாதவன் –குறள்
4.தனக்குவமை இலாதான் – குறள்
5.வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க, போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் – ஆண்டாள்
6.கொடுக்கும் தெய்வம் கூரையைப் பிய்த்து கொண்டு கொடுக்கும்
7.நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்
8.நம்பினார் கெடுவதில்லை, நான்கு மறை தீர்ப்பு – பாரதியார்
9.அவனருளாலே அவன் தாள் வணங்கி- மாணிக்கவாசகர்
10.அன்பே சிவம் – திருமூலர்
11.கடவுள்,மர்மமான வழிகளில் செயல்படுகிறார்- வில்லியம் கவ்பர்
12.குணப்படுத்துபவன் கடவுள்; நன்றியை வாங்கிக் கொள்பவன் டாக்டர்!
13.கடவுள் கட்டாயமாகக் கூலி கொடுக்கும் எஜமானன்
14.கடவுள் மெதுவாக வருவார்; ஆனால் அடிக்கும்போது இரும்புக்கரத்தால் அடிப்பார்
15.கடவுள் கோவிலில் இருப்பார்; அருகில் சின்னக் கோவிலில் சாத்தான் வசிப்பான்
16.கடவுள் கல்லைப் படைக்கிறார்; மனிதன் வடிவமைக்கிறான்
17.கடவுள் நாட்டுப்புறம் படைத்தார்; மனிதன் நகரத்தை உருவாக்கினான்.
18.எல்லாம் வல்லவன், எங்கும் நிறைந்தவன், எல்லாம் அறிந்தவன் இறைவன்
19.திக்கற்றவருக்கு தெய்வமே துணை
20.யாண்டும் இடும்பை இல – குறள் (கடவுளை நம்புவோருக்கு துன்பமே இல்லை)
21.சங்கீர்த்ய நாராயண சப்தமாத்ரம், விமுக்த துக்கா சுகினோ பவந்து – விஷ்ணு சஹஸ்ரநாமம் (நாராயண சப்தமுள்ள இடத்தில் துக்கம் பறந்தோடும்)
22.சாமிவரம் கொடுத்தாலும் பூசாரி வரம்தர மாட்டான்
23.தெய்வச் செயல் இருந்தால் செத்தவனும் எழும்புவான்
24.தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சிக்கேற்ற பலன் கிடைக்கும் – வள்ளுவன் வாக்கு
25.தெய்வப் புலவனுக்கு நா உணரும், சித்திர ஓடாவிக்கு கை உணரும்
26.தெய்வமிலாதேயா பொழுது போகிறதும், பொழுது விடிகிறதும்?
27.தெய்வமே துணை
28.தெய்வம் உண்டெபார்க்கு உண்டு, இல்லை என்பார்க்கு இல்லை
29.எல்லாம் அவன் செயல்
30.தெய்வம் காட்டுமே தவிர, ஊட்டாது
31.தெய்வம் பண்ணின திருக்கூத்து
32.பரமம் பவித்ரம் லீலா விபூதிம் (எல்லாம் அவன் லீலா விநோதம்)
33.தெய்வ வணக்கமே நரக வாசலை அடைக்கும் தாழ்
34.சாகற நேரத்தில் சங்கரா, சங்கரா என்றானாம்
35.சம்யாத்மா விநஸ்யதி (சந்தேகப்படுவான் அழிவான்)- பகவத் கீதை
36.அகதிக்குத் தெய்வமே துணை
37.அரசன் அன்று கேட்பான், தெய்வம் நின்று கேட்கும் (அரசன் அன்றே கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்)
38.யோகக்ஷேமம் வஹாம்யஹம்- பகவத் கீதை 9-22 (பக்தன் விரும்பியதை அடையச்செய்வதும் அதைக் காப்பதும் என் பொறுப்பு)
39.கடவுள் நினைத்தால் காற்றில்லாமலே மேகம், மழை வரும்
40.சத்யம் ஞானம் அனதம் பிரம்மா
41.சத்யம், சிவம், சுந்தரம்
42.வேலை வணங்குவதே எமக்கு வேலை- பாரதியார்
43.அஹம் பிரம்மாஸ்மி (நானே பிரம்மம்)
44.தத் த்வம் அஸி ( நீ அதுவாக (கடவுள்) இருக்கிறாய்)
45.ராமன் இருக்கும் இடத்தில் காமன் இரான்
46.அரங்கனைப் பாடின வாயால் குரங்கனைப் பாடுவேனா?
47.சிவநி ஆக்ஞலேக சீம கறவது (சிவனுடைய ஆணையின்றி எறும்பும் கடிக்காது)
48.ஓ ராம நீ நாமமு ஏமி ருசிரா? (தியாகராஜர்)
49.ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லாற்கு ஆயிரம் திருநாமம் பாடிநாம் தெள்ளேனம் கொட்டாமோ- திருவாசகம்
50.பிள்ளையார் பிடிக்கக் குரங்கானது
51.அனுமார் வால் போல நீளும்
52.முன்னைப் பழமைக்கும் பழமையாய், பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் (சிவன் பற்றி மாணிக்கவாசகர்)
53.சோற்றுக்குப் பின்னர்தான் சொக்கரும் மீனாட்சியும்
54.சிதம்பர ரகசியமா?
55.சிவத்தைப் போற்றிர் தவத்திற்கு அழகு – கொன்றைவேந்தன்
56.ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம் – உலகநீதி
57.தெய்வம் நமக்குத் துணை பாப்பா- ஒரு தீங்குவரலாகாது பாப்பா – பாரதியார்
58.சிவாத் பரதரம் நாஸ்தி (சிவனுக்கு மேல் தெய்வமில்லை)
59.சுக்குக்கு மேல் மருந்தும் இல்லை; சுப்பிரமணியத்துக்கு மேல் தெய்வமும் இல்லை
60.சிவன் அபிஷேகப் பிரியன்; விஷ்ணு அலங்காரப் ப்ரியன்
61.அவனினின்றி ஓர் அணுவும் அசையாது.
62.ஒன்றே குலம் ஒருவனே தேவன் –திருமூலர்
63.சிவனே என்று கிட

Jammu,August 27 An children dressed up as Shri Krishna and his friends during shoba yatra on the eve of Janmashtami in Jammu city on Tuesday. Photo by Vishal Dutta
64.அரியும் சிவனும் ஒன்னு; அறியாதவன் வாயில மண்ணு
65.சிவனொடொக்கும் தெய்வம் தேடினுமில்லை
66.ஈசனுக்கு ஒப்பு எங்கனும் இல்லை
67.ஈசன் எப்படி, அப்படி தாசன்
68.ஈசன் செயலை நீசன் குறை சொன்னானாம்
69.ஈசன் செயல் எண்ணத் தொலையாது
70.ஈசுவரன் கோயில் திருநாள் ஒருநாள் கந்தாயம்
71.இறைவன், அடியார் நெஞ்சில் குடியாய் இருப்பான்
72தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்
73.காஞ்சி காமாட்சி, காசி விசாலாட்சி, மதுரை மீனாட்சி
74.ஜகஜ்ஜனனி, லோக மாதா, அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி
75.ஈக்கும் எறும்புக்கும் படி அளப்பவன் நமக்கும் படி அளப்பான்
–Subham—
You must be logged in to post a comment.