Written by S Nagarajan
Date: 5 February 2016
Post No. 2509
Time uploaded in London :– 7-45 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact
ச.நாகராஜன்
புத்தரிடம் புன்னா என்ற பிக்ஷு வந்தார். புத்த தர்மத்தை உலகெங்கும் பரவச் செய்ய வேண்டும் என்ற ஆவலுடன் வந்த அவரை புத்தர் கனிவுடன் பார்த்தார்.
தனக்கான தியான முறை ஒன்றை கருணை கூர்ந்து அருள வேண்டும் என்று அவர் புத்தரிடம் விண்ணப்பித்தார்.
புத்தரும் அவருக்குரிய தியான முறை ஒன்றை உபதேசித்து அருளினார்.
பின்னர் புன்னாவை நோக்கிய புத்தர், “எந்த ஊருக்குப் போகப் போகிறாய்?” என்று கேட்டார்.
“சுநபராந்தா என்று ஒரு மாவட்டம் இருக்கிறது. அங்கு சென்று தர்ம பிரச்சாரம் செய்யப் போகிறேன்” என்றார் புன்னா.
புத்தர்:-“புன்னா! சுநபராந்தாவில் உள்ள மக்கள் சற்று கடுமையானவர்கள்.அவர்கள் உன் பேச்சைக் கேட்க மாட்டார்கள். உன்னைக் கண்டபடி திட்டப் போகிறார்கள். அப்போது நீ என்ன செய்வாய்?”
புன்னா:- “ஆஹா! இவர்கள் எவ்வளவு நல்லவர்கள். திட்டத்தானே செய்கிறார்கள். என்னை அடிக்கவில்லையே என்று நினைத்துக் கொள்வேன்.”
புத்தர்: “நல்லது.அவர்கள் உன்னை அடித்து விட்டாகள் என்றால், அப்போது நீ என்ன செய்வாய்?”ர்
புன்னா: “ஆஹா! இவர்கள் கல்லை எடுத்து என்னை அடிக்கவில்லை. கையாலே தானே இரண்டு தட்டு தட்டுகிறார்கள் என்று நினைத்துக் கொள்வேன்.”
புத்தர்:” அப்பனே! அவர்கள் கல்லை எடுத்து வீசி அடித்தால், அப்போது நீ என்ன செய்வாய்?”
புன்னா: “ நல்ல வேளை! இவர்கள் கல்லைத் தானே வீசி எறிகிறார்கள். கழி கொண்டு தாக்கவில்லையே என்று நினைத்துக் கொள்வேன்.”
புத்தர்: “அப்பனே, புன்னா! ஒருவேளை அவர்கள் கம்பால் உன்னைத் தாக்கினார்கள் என்றால் அப்போது நீ என்ன செய்வாய்?”
புன்னா: “நல்லவேளையாக இவர்கள் கம்பு கொண்டு தான் அடிக்கிறார்கள். கொலைகாரக் கத்தியால் தாக்கவில்லையே என்று எண்ணுவேன்”
புத்தர்: “ஒருவேளை அவர்கள் கத்தியை எடுத்து உன்னைக் குத்தி விட்டால், அப்போது நீ என்ன செய்வாய்?”
புன்னா: “ஆஹா! இவர்கள் கத்தியினால் குத்தத் தானே செய்தார்கள். என் உயிருக்கு ஆபத்து ஒன்றும் விளைவிக்கவில்லையே என நினைப்பேன்.”
புத்தர்: “புன்னா! ஒருவேளை அவர்கள் கத்தியினால் குத்தி உன் உயிருக்கே ஆபத்து விளைவித்து விட்டால், அப்போது நீ என்ன செய்வாய்?”
புன்னா:”ஏராளமான பிக்ஷுக்கள் தங்கள் உடலின் மீது அதிருப்தி கொண்டு, வாழ்க்கையில் வெறுப்பு அடைந்து, கத்தி ஒன்று கிடைக்காதா என்று ஏங்குகிறார்கள்.ஆனால் எனக்கோ எந்தவித சிரமுமின்றி ஒரு கத்தி கிடைத்து உயிர் போகவுள்ளதே என்று நினைப்பேன்.”
புத்தர்: “நல்லது, மிகவும் நன்று, புன்னா! நீ சுநபராந்தாவில நன்கு பணி ஆற்ற முடியும்.உன்னிடம் பொறுமையும் எளிமையும் இருக்கிறது. உனக்கு காலம் மிகவும் நன்றாக இருக்கிறது
நீ நினைத்தபடி தர்ம பிரச்சாரம் செய்யக் கிளம்பு”
புத்தர் கருணையுடன் புன்னாவை ஆசீர்வதித்தார்.
புன்னா சுநபராந்தா நோக்கி புத்தரின் ஆசியுடன் பயணமானார்!
புத்தரின் போதனை: அஹிம்சையும், பொறுமையும், எளிமையும் நேர்மையும் தர்ம பிரச்சாரம் செய்பவர்களுக்கு இன்றியமையாத குணங்கள்.
*********
You must be logged in to post a comment.