Compiled by london swaminathan
Post No. 2542
Date: 15th February 2016
Time uploaded in London:- 9-07 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact swami_48@yahoo.com)
100 ஆண்டுகளுக்கு முந்தைய பழைய ஜோக்.
ஆதாரம்: விநோத விகட சிந்தாமணி;
அனுப்பியவர்: சென்னை ச. சீனிவாசன்
“சாமத்தில் வயிற்றுச் சாப்பாட்டுக்கு வழியின்றி, தந்திரம் ஒன்றும் தோன்றாமல்,சென்னையன் என்ற கருமான் பழைய துப்பாக்கி ஒன்றைச் சம்பாதித்து, கையிற்பிடித்து, அடர்ந்து படர்ந்த சாலையின்கண், துப்பாக்கியும் கையுமாய் உலவிக்கொண்டிருக்கையில், சங்கிலிபோல தங்கக் கொலுசு அரை ஞாணும் நிறைய வெண்டயம் போல் வளைவுள்ள விசிறிமுருகுகளையும் அணிந்து கையில் பணப்பையுடன் ஒரு செட்டியைக் கண்டு சந்தோஷத்துடன் கருமான், கையிலுள்ள துப்பாக்கியால் செட்டியைச் சுடுவது போலக் குறிவைத்து, “செட்டி மகனே! உன் கெட்டிக் கொலுசையும், வட்ட முருக்கையும், பொட்டிப் பணத்தையும் கொட்டிக்கொடுக்கிறாயா? சுட்டுப்போடட்டுமா? என்று பயமுறுத்திக்கேட்க, அதற்குச் செட்டி மகன், கெட்டியுக்தி பண்ணி, உன் துப்பாக்கியை எனக்குக் கொடுத்துவிட்டால், என் சொத்தனைத்தையும் உனக்குத் தருகிறேன் என்றான்.
(இதுவரை ஒரே வாக்கியம்; பழையகால நடை!!!!!!!!!!!!!!!!!)
கருமான் சம்மதித்து, சொத்தையெல்லாம் பறித்துக்கொண்டு துப்பாக்கியைக் கொடுத்தான். அதைக் கையிற்பிடித்து, “பட்டி மகனே! என் சொத்து முழுவதையும் கட்டிவைக்கிறாயா? அல்லது உன்னைச் சுட்டுப் போடட்டுமா? என்று செட்டியார் கேட்க, அதற்குக் கருமான், “செட்டியாரே! சுட்டுப் போட அதில் மருந்திருந்தாலன்றோ? என்று சொல்லிக்கொண்டு வந்தவழியே ஓட்டமெடுத்தான். செட்டியார் ஏமாந்து, துப்பாக்கியை எடுத்துக்கொண்டு தன் மதியீனத்தை நினைத்து துக்கித்தார்.
–சுபம்–
You must be logged in to post a comment.