Written by London swaminathan
Date: 20 February 2016
Post No. 2557
Time uploaded in London :– 6-56 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
Please go to swamiindology.blogspot.com
OR
tamilandvedas.com
For 2500 more articles and research papers.
சம்ஸ்க்ருத பழமொழிகள், பொன்மொழிகள்
தமிழ் மொழிபெயர்ப்பு; லண்டன் சுவாமிநாதன்
அநாஸ்ரயா ந சோபந்தே பண்டிதா வனிதா லதா – கதாசரித்சாகரம்
பெண்களும், பூங்கொடிகளும் எப்படி பற்றுக்கோடில்லாமல் சோபிக்கமாட்டார்களோ, அப்படியே பண்டிதர்களும் அவர்களை ஆதரிப்போர் இல்லாவிடில் சோபிக்க மாட்டார்கள்/ சிறப்படையமாட்டார்கள் (அதாவது பெண்கள், அறிஞர்கள், பூங்கொடிகளுக்கு ஆதரவு/ கொழுகொம்பு தேவை)
தொல்காப்பியனுக்கு ஒரு நிலந்தரு திருவில்பாண்டியன், கம்பனுக்கு ஒரு சடையப்ப வள்ளல், அருணகிரிநாதருக்கு ஒரு பிரபுடதேவமஹராயன், காளிதாசனுக்கு ஒரு போஜன், சேக்கிழாருக்கு ஒரு சோழமன்னன், தெனாலிராமனுக்கு ஒரு கிருஷ்ணதேவராயன், பீர்பலுக்கு ஒரு அக்பர்– இவ்வாறு ஒவ்வொருவரும் சிறப்படைய ஒருவர் தேவை).
Xxx
உபாயம் சிந்தயேத் ப்ராக்ஞஸ்ததா உபாயம் ச சிந்தயேத் – ஹிதோபதேசம்—பஞ்சதந்திரம்
அறிஞன் உபாயத்தைச் சிந்திக்க வேண்டும்- அவ்வாறே அபாயத்தையும் சிந்திக்க வேண்டும்.
எண்ணித் துணிக கருமம், துணிந்தபின் எண்ணுவதென்பது இழுக்கு (குறள்)
ஒரு உதாரணம்: –சக்ரவியூஹத்தில் நுழையக் கற்றுக் கொண்ட அபிமன்யூ அதிலிருந்து வெளிவரக் கற்றுக் கொள்ளாததால் இறக்க நேரிட்டது.
Xxx
சபாரத்னம் வித்வான் – பிரசங்காபரணம்
அவைகழகு அறிஞர்கள்!
விக்ரமாதித்தன் சபையை நவரத்னங்கள் என்றழைக்கப்பட்ட ஒன்பது அறிஞர்கள் அலங்கரித்தனர். இதே போல கிருஷ்ணதேவராயர் சபையை அஷ்ட திக்கஜங்கள் எனப்படும் எட்டு அறிஞர்கள் அலங்கரித்தனர்.
உதாத்த பாவனா= உயர்ந்த நோக்கு
கோபத்தை சாந்தியால்/கோபமின்மையால் வெல் – தம்மபதம்
Xxx
எல்லா உயிர்களிடத்தும் சொல், செயல், சிந்தனை ஆகிய மூன்றிலும் அன்புடனிருத்தல், அருள்கூர்தல், தானம் செய்தல் ஆகியனவே ஒழுக்கம் எனப் புகழப்படுகிறது – மஹாபாரதம்
Xxx
ஒன்றுமே இல்லாதவிடத்தும் சந்தோஷமாக இருப்பவனே சொர்க்கத்தைக் காண்பவன் (சொர்கமென்பது, ஒன்றுமேயில்லாதபோதும் சந்தோஷமாக இருப்பதாகும்)
Xxx
அஹிம்சையே பெரிய தர்மம் –மஹாபாரதம்
Xxx
ஒருவனுடைய ஒழுக்கம் குடிப்பிறப்பைக் காட்டும்; ஒருவனுடைய உடல், அவன் சாப்பிடும் உணவைக் காட்டும்- சாணக்கிய நீதி
Xxx
ஆசாரமே பெரிய தர்மம்- மனு
(ஆசாரம்= ஒழுங்குமுறை விதிகள்)
Xxx
ஆசாரமே தர்மமும் தவமும்
Xxx
ஆச்சாரத்திலிருந்துதான் ஆயுளும் பணமும் கிடைக்கும் – ம.பா.
Xxx
தனக்கு எது தீங்கு செய்யுமோ, அதைப் பிறருக்கு செய்யாதே – பஞ்ச தந்திரம்
Xxx
எவனுக்கு ஆசை அடிமையாக இருக்கிறதோ அவனுக்கு உலகமே அடிமை.
எவன் ஆசையால் அடிமைபடுத்தப்படவில்லையோ, அவன் உலகையே அடிமைப்படுத்துவான். – சு.ர.பா.
Xxx
ஆசையின் எல்லையைத் தொட்டவர் எவர்?
Xxx
ஆசையே ஒளி; நிராசையே (பற்றற்ற தன்மை) தவம்.
Xxx
ஆசையே துன்பத்திற்குக் காரணம்.
பற்றற்றிருப்பதே சுகம்
Xxx
இறைவனை வழிபடுவதே எல்லோருக்கும் நன்மை பயக்கும்
Xxx
உற்சாகமே பலம்; உற்சாகத்தைவிட பெரிய பலம் எதுவுமில்லை; உற்சாகமுள்ளவனுக்கு உலகில் அடைய முடியாதது எதுவுமில்லை.
Xxx
கொடையாளிக்கு பணம் புல்லுக்குச் சமம்
Xxx
ஒருநிலையை அடையும் வரை உற்சாகம் இருக்கிறது; அதற்கப்புறம் அது முடிந்துவிடுகிறது.
Xxx
ஈசாவாஸ்யம் இதம் சர்வம், யத் கிம்ச ஜகத்யாம் ஜகத்….
இந்த உலகம் முழுதும் இறைவனுக்குச் சொந்தமானது. அதில் மிஞ்சியிருப்பதை இறைவனுடைய பிரசாதம் என்று அனுபவிக்கவேண்டும் – ஈசா. உப.
–சுபம்–
You must be logged in to post a comment.