WRITTEN BY S NAGARAJAN
Date: 26 March 2016
Post No. 2664
Time uploaded in London :– 6-48 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
தெரிந்து கொள்ள வேண்டியவர்கள்
இவர் யார்?
ச.நாகராஜன்
பெரிய வேதாந்தி. கணிதப் பேராசிரியர்.
அமெரிக்காவிற்குச் சென்று வேதாந்தச் சொற்பொழிவுகளை நிகழ்த்தி அமெரிக்கர்களைப் பெரிதும் கவர்ந்தவர்.
பஞ்சாபி, உருது, சம்ஸ்கிருதம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் புலமை பெற்றவர்.
உலக வாழ்வைத் துறந்தவர்.
33 ஆண்டுகளே வாழ்ந்தார்.
கங்கையில் குளிக்கச் சென்ற போது சுழல் இவரை இழுக்க, “அம்மா! உன் விருப்பம் அதுவானால் அது சரிதான்!” என்று சொல்லி ஜல சமாதி எய்தியவர்.
ஜல சமாதிக்கு முன்னர் அவர் எழுதிய துண்டுச் சீட்டில், “மரணமே, வா! உன்னை என்னால் ஒன்றும் செய்ய முடியாது. நான் எங்கும் இருப்பவன்” என்று எழுதி வைத்தவர்.
பாரதத்தை தன்னிலே கண்டு தன்னனயே பாரதமாக உருவகப் படுத்தி இவர் எழுதிய கட்டுரை ஒவ்வொரு பாரதீயனும் படிக்க வேண்டிய ஒன்று!
இவரது அருமையான சொற்பொழிவுகள் 8 பகுதிகளாக வெளி யிடப்பட்டுள்ளது.
கணிதத்தில் கடவுளைக் கண்ட இவரின் உருவகங்கள் பிரமாதமானவை.
குர் ஆனில் ஓம் உள்ளது என்ற இவரது சொற்பொழிவு முஸ்லீம்கள் வியந்து போற்றிய ஒன்று.
உருதுவில் பெரும் புலமை பெற்ற இவர் ஒரு பெரும் கவிஞரும் கூட.
ஸ்வாமி விவேகானந்தரை லாகூரில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று விருந்தளித்தவர். கூடவே குட்வின் உள்ளிட்டவரும் அந்த விருந்தில் கலந்து கொண்டனர்,
தனது வீட்டில் இருந்த நூலகத்தை ஸ்வாமிஜிக்குக் காண்பிக்கவே, அவர் வால்ட் விட்மன் எழுதிய “லீவ்ஸ் ஆஃப் கிராஸ்’ புத்தகத்தை அங்கு படித்தார்.
இவர் ஸ்வாமி விவேகானந்தருக்கு ஒரு கடிகாரத்தை பரிசாக அளிக்கவே, அதை அவர் சட்டைப் பையிலேயே மாட்டிய ஸ்வாமிஜி, “இதை, நான் இங்கேயே அணிகிறேன்” என்று கூறி பரந்த வேதாந்த கருத்தைச் சொன்ன சம்பவம் உலகப் புகழ் பெற்ற ஒன்று.
இந்த மகான் யார்?
*********
விடை: சுவாமி ராமதீர்த்தர்
–Subham–
You must be logged in to post a comment.