Compiled by london swaminathan
Date: 29 March,2016
Post No. 2674
Time uploaded in London :– 8-45 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
தாவரங்கள் பற்றிய 30 பழமொழிகள், இந்த மாத காலண்டரை அலங்கரிக்கின்றன.
முக்கிய நாட்கள்:- 8-யுகாதி/தெலுங்கு புத்தாண்டு,
14-தமிழ் புத்தாண்டு, 15-ஸ்ரீஇராமநவமி, 21-சித்திரா பவுர்ணமி.
ஏப்ரல் 20- மதுரை சித்திரைத் தேர், 22- கள்ளழகர், மதுரை வைகை ஆற்றில் இறங்குதல்.
முகூர்த்த நாட்கள்:-4, 25, 29, அமாவாசை:- 6/7, பௌர்ணமி:- 21
ஏகாதசி:- 3, 17/18 இம்மாத காலண்டரில் தாவரம் பற்றிய 30 பழமொழிகள் இடம்பெறுகின்றன.
ஏப்ரல் 1 வெள்ளிக்கிழமை
அமாவாசையில் மழை பெய்தால், அரிசி விற்ற விலையில் நெல் விற்கும்.
ஏப்ரல் 2 சனிக்கிழமை
அணில் ஏறி, தென்னை மரம் அசையுமா?
ஏப்ரல் 3 ஞாயிற்றுக் கிழமை
அரச மரத்தைச் சுற்றிவிட்டு, அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்தாளாம்.
ஏப்ரல் 4 திங்கட்கிழமை
அருகாகப் பழுத்தாலும் விளா மரத்தில் வெவ்வால் சேராது.
ஏப்ரல் 5 செவ்வாய்க்கிழமை
அறுக்க ஊறும் பூம்பாளை; அணுக ஊறும் சிற்றின்பம்.
ஏப்ரல் 6 புதன்கிழமை
ஆடிப் பட்டம் தேடி விதை; ஆடி வாழை தேடி நடு.
ஏப்ரல் 7 வியாழக்கிழமை
ஆயிரம் கலம் நெல்லுக்கு ஒரு அந்து
ஏப்ரல் 8 வெள்ளிக்கிழமை
ஆள் அறிந்து ஆசனம் போடு; பல் அறிந்து பாக்குப் போடு
ஏப்ரல் 9 சனிக்கிழமை
ஆமணக்கும் பருத்தியும் அடர விதைத்தால் ஆகாது.
ஏப்ரல் 10 ஞாயிற்றுக் கிழமை
ஆலும் வேலும் பல்லுக்குறுதி.
ஏப்ரல் 11 திங்கட்கிழமை
ஆவணி மருதாணி அடுக்காய்ப் பற்றும்
ஏப்ரல் 12 செவ்வாய்க்கிழமை
ஆவும் தென்னையும் அஞ்சு வருஷத்தில் பலன் ஈயும்
ஏப்ரல் 13 புதன்கிழமை
இலை சாய்கிற பக்கம் குலை சாயும்
ஏப்ரல் 14 வியாழக்கிழமை
எட்டடி வாழை, பத்தடி பனை, பதினாறடி தென்னை
ஏப்ரல் 15 வெள்ளிக்கிழமை
எட்டி மரமானாலும் பச்சை மரத்தை வெட்டாதே.
ஏப்ரல் 16 சனிக்கிழமை
எட்டு எள்ளுக்குச் சொட்டு எண்ணெய் எடுப்பான்.
ஏப்ரல் 17 ஞாயிற்றுக் கிழமை
எள்ளும் கரும்பும் இறுக்கினால்தான் பலன் கொடுக்கும்
ஏப்ரல் 18 திங்கட்கிழமை
ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும், தன் நாற்றம் போகாதாம் பேய்ச் சுரைக் காய்க்கு.
ஏப்ரல் 19 செவ்வாய்க்கிழமை
ஐப்பசி நெல் விதைத்தால் அவலுக்கும் ஆகாது
ஏப்ரல் 20 புதன்கிழமை
கத்தரிக்காய் வாங்க பூசணிக்காய் கொசுரா?
ஏப்ரல் 21 வியாழக்கிழமை
கத்தரிக்காய்க்கு காம்பு ருசி; வெள்ளரிக்காய்க்கு விதை ருசி.
ஏப்ரல் 22 வெள்ளிக்கிழமை
யானை வாயில் போன கரும்பைப் போல
ஏப்ரல் 23 சனிக்கிழமை
கரும்பில் எறும்பு இருந்தால் ஆனைக்கு என்ன?
ஏப்ரல் 24 ஞாயிற்றுக் கிழமை
காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும்
ஏப்ரல் 25 திங்கட்கிழமை
கனியிருக்க காயைத் தின்பரோ?
ஏப்ரல் 26 செவ்வாய்க்கிழமை
காய்த்த மரம்தான் கல்லடி படும்
ஏப்ரல் 27 புதன்கிழமை
கேட்காத கடனும் பார்க்காத பயிரும் பாழ்
ஏப்ரல் 28 வியாழக்கிழமை
கொடிக்குக் காய் பாரமா?
ஏப்ரல் 29 வெள்ளிக்கிழமை
சாணி சுமப்பவளுக்கு சந்தனப் பூச்சு எதற்கு?
ஏப்ரல் 30 சனிக்கிழமை
சுண்டைக் காய் கால் பணம்; சுமைகூலி முக்கால் பணம்.
மே 1 ஞாயிற்றுக் கிழமை
–சுபம்–
You must be logged in to post a comment.