Written by S NAGARAJAN
Date: 7 April 2016
Post No. 2701
Time uploaded in London :– 9-27 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
சுற்றுப்புறச் சூழலைக் காக்க உலகெங்கும் உள்ள சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்களால் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22ஆம் நாள் பூமி தினமாக 192 நாடுகளில் கொண்டாடப்படுகிறது.
பிரபஞ்சத்தில் தனித்தன்மை கொண்ட கிரகமாகத் திகழும் பூமியை நேசித்துக் கொண்டாடும் நாள் இது.
பூமி தினம் சம்பந்தமாக ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விவரங்கள் இதோ:-
பூமி தினத்திற்கென தனியாகக் கொடி உண்டு. இதற்கு ஈகாலஜி ஃப்ளாக் (Ecology Flag) என்று பெயர். ரான் காப் (Ron Cobb) என்ற ஒரு கார்டூனிஸ்ட் தான் முதன் முதலில் இதை உருவாக்கினார். இதில் இடம் பெற்றுள்ள இரு ஆங்கில எழுத்துக்களான E மற்றும் O ஆகியவை Envirronment மற்றும் Organism ஆகிய வார்த்தைகளின் முதல் எழுத்திலிருந்து எடுக்கப்பட்டு கிரேக்க எழுத்துப் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பதிமூன்று பட்டைகள் பச்சை மற்றும் வெண்மை நிறங்களில் மாறி மாறி இடம் பெறுகின்றன.
பூமி தினத்திற்கான தனிப் பாடல் ஒன்றும் உண்டு. 1970ஆம் ஆண்டில் ஆயிரக்கணக்கான பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர் இரண்டு கோடிப் பேர் இந்த முதல் பூமி தினத்தில் பங்கு கொண்டனர்.
உலகெங்கிலுமுள்ள 192 நாடுகளில் 22000க்கும் மேற்பட்டோர் சுற்றுப்புறச் சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். உலகின் மிகப் பெரும் இயக்கமாக இது உருவெடுத்துள்ளது. இன்று நூறு கோடிப் பேர் இந்த இயக்கத்தில் இணைந்து அரிய பூமியைக் காக்க சபதம் கொண்டுள்ளனர்.
2012ஆம் ஆண்டு சீனாவில் ஒரு லட்சம் பேர் கார்பன் டை ஆக்ஸைடு நச்சுப் புகை வெளியேறுவதைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி சைக்கிள்களை ஓட்டி விழிப்புணர்வு ஊட்டினர். இந்த நாளில் உலகெங்குமுள்ள தன்னார்வத் தொண்டர்கள் ஆங்காங்கே குப்பைகளை அகற்றி வாழுமிடத்தைச் சுத்தப்படுத்துவதோடு மரக்கன்றுகளையும் நடுகின்றனர்.
நம்மை உயிர் வாழ வைக்கும் பூமித் தாயை நன்றியுடன் போற்றுவதில் நாமும் இணைவோமாக!
—சுபம்–
You must be logged in to post a comment.