‘எங்கே பெண்கள் மதிக்கப்படுகிறார்களோ, அங்கே தெய்வங்கள் மகிழ்வார்கள்’ (Post No 2717)

IMG_3209

Written by london swaminathan

Date: 12 April, 2016

 

Post No. 2715

 

Time uploaded in London :– 14-48

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

பெண்கள் பற்றிய சம்ஸ்கிருத பழமொழிகள்–பகுதி 3

 

((முதல் இரண்டு பகுதிகள் மார்ச் 26, மார்ச் 28 தேதிகளில் வெளியிடப்பட்டன.))

IMG_3210

38.முக்தா: ஸ்வபாவாத் ப்ராயேன யோஷிதாஸ்தரல ஆசயா:

-ராமாயண மஞ்சரி

பெண்கள் இயற்கையிலேயே, இளகிய மனம் படைத்தவர்கள்

xxx

 

39.ய: ஸ்த்ரீணாம் குஹ்யம் ஆக்யாதி தத் அந்தம் தஸ்ய ஜீவிதம்

–ப்ருஹத் கதா கோச

பெண்களின் ரஹசியத்தை வெளியிடுபவன் கதி, சகதி!

(பெண்களின் ரகசியத்தை வெளியிடுபவர் வாழ்க்கையின் முடிவைக் காண்பர்)

xxx

40.யத்ர நார்யஸ்து பூஜ்யந்தே ரமந்தே தத்ர தேவதா:

–மனு ஸ்மிருதி 3-56

எங்கே பெண்களை கொண்டாடுகிறார்களோ, அங்கே தெய்வங்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

xxx

 

 

IMG_3212

41.யோஷிதம் யத்யபி க்ருத்தா ந நிக்னந்தி இஹ வைரிண:

—-ப்ருஹத் கதா கோச

அதிபயங்கர கோபத்திலும் கூட, எவரும் பெண் கொலை புரியமாட்டார்கள் (பெண்களைக் கொல்லக் கூடாது)

xxx

42.யோஷிதாஞ்ச நதீனாம் ச புனராகமனம் குத:

—–ப்ருஹத் கதா மஞ்சரி

ஓடிப்போன நதியும், ஓடிப்போன பெண்ணும் திரும்புவது நடக்குமா? (சாத்தியமா?)

xxx

  1. ரஹஸ்யம் ச ந வக்தவ்யம் வந்னிதாசு

–கதாசரித் சாகரம்

பெண்களிடம் ரகசியத்தைச் சொல்லாதே

xxx

44.ரூப லுப்தா ஹி யோஷித:

——-ப்ருஹத் கதா மஞ்சரி

பெண்கள் மேக்-அப் போடுவதில்தான் அதிக உற்சாகம் காட்டுவர் ( பெண்கள்,தங்கள் தோற்றத்திலதிக கவனம் செலுத்துவர்)

xxxx

45.வஜ்ரலேபாத் அபித்ருடோ மானினீனாம் ஹி நிஸ்சய:

——-ப்ருஹத் கதா மஞ்சரி

பிடிவாதம்பிடித்த பெண்ணின் முடிவுகள், கான்க்ரீட்டைவிடக் கடினமானவை

(வஜ்ரலேபம் என்பது, கான்க்ரீட் போல கடினமானது)

xxx

 

 

IMG_3179

46.வாமசீலா ஹி நார்ய:

–தூர்த்தநர்த்தக

பெண்கள், இயற்கையிலேயே, குறுக்குபுத்தி உடையவர்கள்.

xxx

47.விதக்தா அபி வஞ்சயந்தே விடவர்ணனயா ஸ்த்ரிய: —-கதாசரித் சாகரம்

பெண்கள் புத்தி கூர்மையானதுதான்; ஆனால் ஆண்களின் புகழ்ச்சியில் அது மழுங்கிவிடுகிறது(அதாவது கள்ளக் காதலனின் புகழ்ச்சியில் ஏமாந்து போவார்கள்)

xxx

48.வித்யதே ஸ்த்ரீசு சாபல்யம் வித்யதே ஞாதிதோ பயம் –வால்மீகி ராமாயணம்

பெண்களின் சபல புத்தியால், சொந்தக்காரர்களிடத்தில் பயம்!

xxx

49.வித்யுதம் க:ஸ்திரீகுர்யாத்கோ ரக்ஷேச்சபலாம் ஸ்த்ரியம் —கதாசரித் சாகரம்

மின்னலை யாராவது அசையாமல் நிறுத்த முடியுமா? பெண்களின் யாராவது மனதை சலனமில்லாமல் செய்ய முடியுமா?

xxx

50.விபரீத அர்த்தவிதோ ஹி யோஷித:

பெண்கள் எளிதில் தப்பான, அர்த்தம் செய்துவிடுவார்கள்.

xxx

 

IMG_3184

to be continued………………………….

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: