மே 2016 காலண்டர் (துர்முகி சித்திரை/ வைகாசி)
Compiled by london swaminathan
Date: 27 ஏப்ரல் ,2016
Post No. 2761
Time uploaded in London :– 16-50
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
பசு, காளை, மாடு பற்றிய 31 தமிழ்ப் பழமொழிகள் மே மாத காலண்டரை அலங்கரிக்கின்றன. ஒவ்வொரு பழமொழியையும் யோசித்துப் பார்த்தால் பொருள் விளங்கும்; நீங்களே ஒவ்வொன்றைப் பற்றியும் கட்டுரை எழுதத் துவங்கி விடுவீர்கள். இது வரை இந்த பிளாக்கில் சுமார் 2000 தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதப் பழமொழிகளை தலைப்பு (சப்ஜெக்ட்) வாரியாகத் தொகுத்துக் கொடுத்துள்ளேன். தமிழில் 20,000 பழமொழிகள் உள்ளன!! வாழ்க தமிழ்!
முக்கிய நாட்கள்:- மே 1 மே தினம், 4 அக்னி நட்சத்திரம் ஆரம்பம், 9 அக்ஷய த்ருதியை, 21 புத்த ஜயந்தி, வைகாசி விசாகம், 28 அக்னி நட்சத்திரம் முடிவு.
முகூர்த்த நாட்கள்:- 2, 4, 9, 11, 12, 19,26; அமாவாசை:- 6; பௌர்ணமி:- 21; ஏகாதசி:- 3, 17.
மே 1 ஞாயிற்றுக் கிழமை
ஆடுற மாட்டை ஆடிக் கறக்கனும், பாடுற மாட்டைப் பாடிக்கறக்கனும்.
மே 2 திங்கட் கிழமை
மாடு கெட்டால் தேடலாம், மனிதர் கெட்டால் தேடலாமா?
மே 3 செவ்வாய்க் கிழமை
மாடு மயங்கி வானம் பார்த்தால் மழை பெய்யும்
மே 4 புதன் கிழமை
மாடு மேய்க்காமற் கெட்டது, பயிர் பார்க்காமற் கெட்டது.
மே 5 வியாழக் கிழமை
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
மே 6 வெள்ளிக் கிழமை
அடியாத மாடு படியாது.
மே 7 சனிக் கிழமை
மாடு கிழமானாலும் பாலின் ருசி போகுமா?
மே 8 ஞாயிற்றுக் கிழமை
மாடு தின்கிற மாலவாடு, ஆடு தின்கிறது அரிதா?
மே 9 திங்கட் கிழமை
மாட்டைப் புல் உள்ள தலத்திலும், மனிதனை சோறு உள்ள தலத்திலும் இருக்க ஒட்டாது.
மே 10 செவ்வாய்க் கிழமை
மாடு நினைத்த இடத்தில் தொழுவம் கட்டுவதா?
மே 11 புதன் கிழமை
மாடு மேய்க்கிற தம்பிக்கு மண்டலமிட்ட பெண்சாதி
மே 12 வியாழக் கிழமை
மேய்க்கிற மாட்டின் கொம்பிலே புல்லைக் கட்ட வேணுமா?
மே 13 வெள்ளிக் கிழமை
பாலைப் பார்த்து பசுவைக் கொள்ளு, தாயைப் பார்த்து பெண்ணைக் கொள்ளு.
மே 14 சனிக் கிழமை
பசு உழுதாலும் பயிரைத் தின்ன வொட்டான்.
மே 15 ஞாயிற்றுக் கிழமை
பசுத்தோல் போர்த்திய புலி போல
மே 16 திங்கட் கிழமை
பசுமாடு நொண்டியானால், பாலும் நொண்டியா?
மே 17 செவ்வாய்க் கிழமை
பசுவைக் கொன்று செருப்பு தானம் செய்தது போல.
மே 18 புதன் கிழமை
பசுவுக்கு பிரசவ வேதனை , காளைக்கு காம வேதனை
மே 19 வியாழக் கிழமை
பசு விழுந்தது புலிக்கு ஆதாயம்
மே 20 வெள்ளிக் கிழமை
மாடு திருப்பினவன் அர்ச்சுனன்
மே 21 சனிக் கிழமை
மாடு தின்னிக்கு வாக்குச் சுத்தம் உண்டா?
மே 22 ஞாயிற்றுக் கிழமை
மாடு மறுத்தாலும் பால் கறக்கும், வாலில் கயிறைக் கட்டினால்.
மே 23 திங்கட் கிழமை
காளை போன வழியே கயிறு போகும்.
மே 24 செவ்வாய்க் கிழமை
இளிச்சவாயனைக் கண்டால் எருதும் மச்சான் முறை கொண்டாடும்
மே 25 புதன் கிழமை
எருதுக்கு நோய்வந்தால் கொட்டகையைச் சுடுகிறதா?
மே 26 வியாழக் கிழமை
எருது ஏழையானால் (கூடாவிட்டால்), பசு பத்தினித்துவம் கொண்டாடும்
மே 27 வெள்ளிக் கிழமை
எருது கெட்டார்க்கும் எட்டே கடுக்காய், இளம்பிள்ளைத் தாய்ச்சிக்கும் எட்டே கடுக்காய்
மே 28 சனிக் கிழமை
எழுது கொழுத்தால் தொழுவத்தில் இராது, பறையன் கொழுத்தால் பாயில் இரான்.
மே 29 ஞாயிற்றுக் கிழமை
பசு மாடும் எருமை மாடும் ஒன்றாகுமா?
மே 30 திங்கட் கிழமை
பசு கருப்பென்று பாலும் கருப்பா?
மே 31 செவ்வாய்க் கிழமை
மாட்டை மேய்த்தானாம், கோலைப் போட்டானாம்
–சுபம்–
You must be logged in to post a comment.