Compiled by London swaminathan
Date: 19 June 2016
Post No. 2907
Time uploaded in London :– 9-51
( Pictures are taken by London swaminathan)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com
தமிழிலும் ஆங்கிலத்திலும் குரு, ஆசிரியர் (டீச்சர்), உபாத்யாயர் போன்ற சொற்கள் வேறுபாடின்றி வழங்கப்படுகின்றன. ஆனால் சம்ஸ்கிருதத்தில் ஒவ்வொன்றுக்கும் தெளிவான பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.
டீச்சர், ஆசிரியர் ஆகிய சொற்கள் சம்ஸ்கிருதச் சொல்லான ‘ஆசார்ய’ என்பதிலிருந்து வந்தவை.
வட இந்தியாவில் இப்பொழுது பல்கலைக்கழகத் துணைவேந்தரை குலபதி என்று அழைக்கின்றனர். வேத காலத்தில் 10,000 மாணவர்களைக் கொண்ட ஆசிரியருக்கு மட்டுமே குலபதி என்ற பட்டம் வழங்கப்பட்டது.
உலகின் முதல் சட்டப்புத்தகமான மனு ஸ்மிருதியிலிருந்து சில விஷயங்களைக் காண்போம்.
உபநீயது ய: சிஷ்யம் வேதமத்யாபயேத் த்விஜ:
சகல்பம் சரஹஸ்யம் ச தமாசார்யம் ப்ரசக்ஷதே (மனு 2-140)
உபநயனம் (பூணூல்) செய்வித்து வேத வேதாந்தங்களை ஓதிவைப்பவன் ‘ ஆசார்யன்’ என்று அழைக்கப்படுகிறான்.
xxx
ஏகதேசம் து வேதஸ்ய வேதாங்கான்யபி வா புன:
யோ அத்யாபயதி வ்ருத்தர்தமுபாத்யாய: ச உச்யதே
பணம் (தட்சிணை) வாங்கிக் கொண்டு வேத வேதாங்கங்களைக் கற்பிப்பவன் உபாத்யாயன் என்று சொல்லப்படுகிறான்.
xxx
நிஷேகாதினி கர்மாணி ய: கரோதி யதா விதி
சம்பாவயதி சான்னேன ச விப்ரோ குருர் உச்யதே
விதிப்படி, கர்ப்பாதானம் முதலிய கிரியைகளைச் செய்வித்து ஜீவனோபாயத்தைக் கற்பிப்பவன் குரு என்று அழைக்கப்படுகிறான்
xxx
பிதா மாதா ச ததாசார்யோ மஹாகுருரிதி ச்ம்ருத:
தந்தை, தாய், ஆசிரியர் ஆகியோர் மஹா (பெரிய) குருக்கள் என்று கருதப்படவேண்டும்.
xxx
முனீனாம் தசசாஹஸ்ரம் யோ அன்னதானாதி போஷணாத்
அத்யாபயதி விப்ரர்ஷிரசௌ குலபதி: ஸ்ம்ருத:
10,000 சிஷ்யர்களுக்கு உணவு அளித்து, போதிக்கும் (கற்பிக்கும்), ரிஷிக்கு ‘குலபதி’ என்று பெயர். (பத்தாயிரம் முனிவர்களுடைய கூட்டத்துக்கு எவன் அன்னதானம் முதலியன கொடுத்து ஆதரிக்கிறானோ அவன் குலபதி என்று அறியப்படுகிறான்)
xxxx
ஆசிரியனின் இலக்கணம்: ஒரு ஆசிரியன் எப்படி இருக்கவேண்டும் என்றும் இந்துமத நூல்கள் செப்புகின்றன:–
ஜிதேந்த்ரிய ஜித த்வந்த்வஸ் தபோ தான பராயணா:
சத்யவாக் ஊர்ஜித: ராக்ஞோ மேதாவீ நியதஸ் சுசி:
புலனடக்கம், இருமைகளை (வெற்றி தோல்வி, சுக துக்கம் போன்றவை இருமைகள்) வென்றவன், தானம்-தவம் ஆகியவற்றைக் கடைப்பிடிப்பவன், உண்மை விளம்பி, வீர்யமுடையவன், கற்றறிந்தவன், புத்திகூர்மையுள்ளவன், ஒழுங்கு கட்டுப்பாடு உடையவன், தூய்மையானவன் (ஆசிரியன் ஆவான்)
xxxx
நிஸ்சம்திக்த: குலீனஸ்ச ஸ்ரௌதகர்மணி தத்பர:
நிக்ரஹானி க்ரஹேதக்ஷஸ் சர்வ தோஷ விவர்ஜித:
காயத்ரீமந்த்ர குசல ஆசார்ய ஸமுதாஹ்ருத:
அப்பழுக்கற்ற குலத்தில் பிறந்தவன், வேத அனுஷ்டானம் உடையவன், செய்யத் தக்கது-செய்யத்தகாதது எது என்ற விவேகம் உடையவன், மாசுமருவற்ற ஒழுக்கம் உடையவன், எல்லாம் அறிந்தவன், காயத்ரீ மந்திரத்தில் தேர்ச்சியுடையவன் ஆசார்யன் (ஆசிரியர்) என்று அறியப்படுகிறான்.
xxxx

Sanskrit instructor conducting a contact class for professionals at Rashtriya Sanskrit Sansthan on Tuesday. Photo by K Asif 26/09/12
ஆசினோதி ஹி சாஸ்ரார்தான் ஆசாரே ஸ்தாபயத்யபி
ஸ்வயமாசரதே யஸ்மாத் தஸ்மாத் ஆசார்ய உச்யதே
சாத்திரங்களை அறிந்து பிறரையும் அனுசரிக்கச் செய்பவனே ஆசார்யன்.
(சாத்திர நூல்களின் பொருளை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து அறிந்துஆராய்பவன், பிறரையும் ஆசார அனுஷ்டானங்களில் ஈடுபடச் செய்பவன், தானும் அதைக் கடைப்பிடிப்பவன் ஆசார்யன் (ஆசிரியர்) என்று அறியப்படுகிறான்.
–சுபம்–
You must be logged in to post a comment.