Article Written S NAGARAJAN
Date: 15 July 2016
Post No. 2972
Time uploaded in London :– 5-48 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
அவன் யார்? – 1
ச.நாகராஜன்
அவன் பெயர் சங்கரன். ஊர் கேரளாவில் உள்ள திருச்சூர். தந்தையும் தாயும் அந்தண வகுப்பைச் சேர்ந்தவர்கள். பயபக்தியுடன் நெறியுடன் வாழ்ந்து வரும் குடும்பங்களுள் அந்தக் குடும்பமும் ஒன்றாக இருந்தது.
இள வயதில் ஒரு நாள் கனவு ஒன்று அவனுக்கு வந்தது. அதில் அருகிலிருந்த சிவன் கோவிலிலிருந்து பிரகாசமான ஒளி ஒன்று தோன்றி அவனை நோக்கி வந்து அவனைச் சுற்றி வளைத்தது போல காட்சி ஒன்றைக் கண்டான்.
அருகில் இருந்த ஒல்லூரில் உயர்நிலலப் பள்ளியில் அவன் படித்து வந்தான்.
அவனுக்குப் பத்து வயது நடந்து கொண்டிருந்த போது ஒரு நாள் அவனது தாயாருக்கு உடல் நலம் சரியில்லாமல் போனது.
நல்ல மழை. ஆற்றின் மறு க்ரையில் வைத்திய்ர் இருந்தார். ந்தியில் படகைச் செலுத்திப் போக வேண்டும். யாராவது தன்னுடன் துணைக்கு வருவதாக இருந்தால் படகைச் செலுத்தத் த்யார் என்றார் வீட்டிலிருந்த சமையல்காரர்.
சங்கரன் உடனே முன் வந்தான். மாத்ரு பக்தி ஒரு பக்கம் என்றால் சாகஸ செயல்களைச் செய்ய வேண்டும் என்ற இயல்பான துடிப்பு இன்னொரு பக்கம்.
பின்னாளில் அவன் வாழ்க்கையில் சாதித்த எல்லா காரியங்களுக்கும் அடிப்படையாக் இந்த சாகஸ துணிச்சல் அமைந்தது.
திருச்சூர் நூலகத்தில் ஒரு நாள் நண்பன் ஒருவன் அவனிடம் இந்தப் புத்தகத்தைப் படிக்கிறாயா என்று கேட்டான்.
அந்தப் புத்தகத்தின் பெயர் ‘தி காஸ்பல் ஆஃப் ஸ்ரீ ராமகிருஷ்ணா’
ஆவலுடன் அதைக் கையில் எடுத்த சங்கரன் அதில் நூறு பக்கங்களைப் படித்து முடித்த பிறகே கீழே வைத்தான்.
அந்தப் புத்தகம் அவன் வாழ்க்கையில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.
ராமகிருஷ்ணர் மீது அளவிலா பக்தி அவனுக்கு ஏற்பட்டது. ராமகிருஷ்ண க்தாம்ருதத்தை வழங்கிய மாஸ்டர் மஹாசய (எம் என்று அழைக்கப்படுபவர்) மீதும் அவனுக்கு பக்தி ஏற்பட்டது.
1924ஆம் வருடம். அவனுக்கு பதினைந்தரை வயது தான்.
ஆனால் உலக வாழ்க்கையைத் துறந்து ராமகிருஷ்ண இயக்கத்தில் சேர்ந்து விட வேண்டுமென்ற முடிவான தீர்மானத்துக்கு அவன் வ்ந்து விட்டான்.
1926இல் பள்ளியில் இறுதித் தேர்வு முடிந்தது. டைப்ரைட்டிங்கும் ஷார்ட் ஹாண்டும் படிக்க திருச்சூர் இன்ஸ்டிடியூட்டில் ஒன்றில் அவன் சேர்ந்தான்.
அங்கிருந்து மதராஸ் ராமகிருஷ்ண மடத்திற்கு ஒரு கடிதம் எழுதினான். அதில் அங்கு சேர வேண்டும் என்ற தன் விருப்பத்தை எழுதினான். பதில் வந்தது. மதராஸ் மடத்தில் இடம் இல்லை என்றும் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட மைசூர் மடத்தை அணுகலாம் என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சங்கரன் மடத்தில் சேர்ந்தானா? அந்த சங்கரன் யார்?
அடுத்த பகுதி வ்ரும் வரை பொறுத்திருங்கள்!
-தொடரும் .
hariharanark
/ July 15, 2016interesting post