Compiled by London swaminathan
Date:23 July 2016
Post No. 2997
Time uploaded in London :– 6-20 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
ஜாயா என்றால் பிறவிக்குக் காரணமானவள். இதை மனைவிக்கு சம்ஸ்கிருதத்தில் பயன்படுத்துவது விநோதமாக இருக்கும். இது தாயாருக்குப் பொருந்தும். ஆனால் தாயாருக்கு ஜனனி, மாதா போன்ற பல பெயர்கள் இருக்கின்றன.
ஜாயா என்பதற்கு மனு விளக்கம் தருகிறார்:–
பதிர் பார்யா சம்ப்ரவிஸ்ய கர்போ ப்ருத்வேஹ ஜாயதே
ஜாயாயாஸ்தத்தி ஜாயாத்வம் யதஸ்யாம் ஜாயதே புன:
–மனு 9-8
கணவன் (பதி:), இந்திரிய ரூபமாக மனைவிக்குள் (பார்யா) புகுந்து (சம்ப்ரவிஸ்ய), கர்ப்பமாக உருவாகி மீண்டும் பிள்ளையாகப் பிறக்கிறபடியால் மனைவிக்கு ஜாயா என்று பெயர்.
சுருக்கமாகச் சொல்லப்போனால், கணவனே மகனாகப் பிறக்கிறான்.
பிள்ளைக் குழந்தையை வாரி எடுத்து அணைக்கும்போது கணவனை அணைக்கும் இன்பத்தை மனைவி அனுபவிக்கிறாள். ஆனால் ஒரு பெரிய வித்தியாசம்: – கணவனை அணைக்கும் போது இருந்த பால் (செக்ஸ்) உணர்வுகள், இப்பொழுது தாயின் அன்பு வெள்ளமாக மாறிவிடுகிறது.
இன்னும் சொல்லப் போனால், குழந்தை பிறந்தவுடன், கணவன் மீதான அன்பில் 50 % அன்பு, குழந்தைக்குப் போய்விடும். கணவன்பாடு கொஞ்சம் திண்டாட்டம்தான்!
புலன்களை வென்றவன் (ஜிதேந்த்ரியன்) யார்?
ஸ்ருத்வா ஸ்ப்ருஷ்ட்வா அத த்ருஷ்ட்வா ச புக்த்வா க்ராத்வா ச ய: நர:
ந ஹ்ருஷ்யதி க்லாயதி வா ச விக்ஞேய: ஜிதேந்த்ரிய: (மனு 2-98)
ஸ்ருத்வா – கேட்டும்
ஸ்ப்ருஷ்ட்வா அத – தொட்டும்
த்ருஷ்ட்வா ச – பார்த்தும்
புக்த்வா – சுவைத்தும்
க்ராத்வா ச – முகர்ந்தும்
ய: நர: – எந்த மனிதன்
ந ஹ்ருஷ்யதி -மகிழ்வதில்லையோ
க்லாயதி வா – துக்கம் அடைவதில்லையோ
ச விக்ஞேய: — அவன் அறியப்படுவான்
ஜிதேந்த்ரிய: – புலன்களை வென்ற வீரன் என்று.
அதாவது ஐம்புல நுகர்ச்சியானது அவனுக்கு மகிழ்ச்சியையோ, துக்கத்தையோ தராது. இந்தக் கருத்து பகவத் கீதையிலும் பல இடங்களில் வருகிறது.
ஒன்றாகக் காண்பதே காட்சி (அத்வைதம்)
புலன் ஐந்தும் வென்றான் தன் வீரமே வீரம் (மஹாவீரன்) —
என்று அவ்வையாரும் செப்பினார்.
–Subham–
You must be logged in to post a comment.