Translated by London Swaminathan
Date:28 July 2016
Post No. 3016
Time uploaded in London :– 8-16 AM
(Pictures are taken from various sources; thanks)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
எழுத்துத் திருடர்களுக்கு அன்பான வேண்டுகோள்:–
பிறருடைய கட்டுரைகள், கதைகள், துணுக்குகள் முதலியவற்றை மீண்டும் பயன்படுத்துகையில் எழுதியோருடைய பெயர்கள், வெளியிட்டவர்களின் பெயர்களை நீக்காமல் பகிருங்கள்; எழுத்தைத் திருடினால் உங்கள் மனைவி, மகள்கள், சொத்து, சுகம் இவைகளை வேறு ஒருவன் திருடிவிடுவான் என்பதை அறியீரோ!
xxx
பீங்கான் தட்டுகள், குடங்கள்,பூக்கள் வைக்கும் ஜாடிகள், அலங்காரப் பொருட்களை விற்கும் கடையில் ஒரு இளைஞன் வேலைக்குச் சேர்ந்தான். எல்லாம் விலை உயர்ந்த பொருட்கள். அவனுக்கோ கை நடுக்கம்.
நல்ல பூ வைக்கும் ஜாடியை உடைத்துவிட்டான்.
முதலாளி விரைந்தோடி வந்தார்.
இதோ பார், இதற்கான பணத்தைக் கொடுத்தால் தான் உனக்கு வேலை.
இதன் விலை என்ன?
முதலாளி: 300 டாலர். அவ்வளவு பணம் உன்னிடம் இல்லை என்று எனக்குத் தெரியும். ஆகவே வாரா வாரம் உனது சம்பளத்தில் ஒரு டாலர் கழித்து வருவேன்.
ரொம்ப நல்லது, முதலாளி! எனக்கு 300 வாரங்களுக்கு வேலை இருக்கிறதே! அதுவே போதும்!!
.////
சந்தேகப் பங்காளிகள்!
இரண்டு பேர் கூட்டு சேர்ந்து வியாபாரம் நடத்தி வந்தனர். இருவரும் விடுமுறையைக் கழிக்க ஒரு தீவுக்குச் சென்றனர். கடலில் நீந்தக் குதிக்கும்போது ஒரு பார்ட்னர் சொன்னார்:-
அடக் கடவுளே? கடையின் கதவைப் பூட்டினேன். ஆனால் பணப் பெட்டியைப் பூட்ட மறந்து விட்டேன்!
மற்றொரு பங்காளி: அதனால் என்ன?
ஆமாம், ஆமாம், அதனால் ஒன்றுமில்லை! நீதான் என்னுடன் இருக்கிறாயே!!
////
தன்னம்பிக்கை வாழ்க!
உலக வணிக கண்காட்சிக்கு ஏற்பாடாகிக் கொண்டிருந்தது. அதற்குப் பொறு ப்பான குரோவர் வேலனைச் சந்திப்பது ‘குதிரைக்கொம்பாக’ இருந்தது. அவரைக் காண பலரும் காத்திருந்தனர்.
ஒருவருக்கு வேலை இல்லை. அவரைச் சந்தித்து வேலை வாங்க துடியாய்த் துடித்தார். அவரது அலுவலகத்துக்குள் நுழைந்தார்.
ரிசப்ஷன் (RECEPTION) பெண்மணியிடம் குரோவர் வேலன் அலுவலக அறை எது? என்று கேட்டார்.
ரிஷப்ஷன் பெண்:- அவர் மிகவும் (BUSY) ‘பிஸி; இப்பொழுது நீங்கள் அவரைச் சந்திக்க முடியாது.
அவர் விறு விறு என்று அந்த அறையை நோக்கி நடந்தார்.
பெண்: – அன்பரே! அவரை இப்பொழுது சந்திக்க முடியாது என்று சொன்னேனே! காதில் விழவில்லையா?
ஏ, பெண்ணே! நான் காலையிலும் மாலையிலும் கடவுளுடனேயே இரு முறை பேசுகிறேன். உங்கள் முதலாளியுடன் பேச முடியாதா? என்று சொல்லிக் கொண்டே குரோவரின் அறைக்குள் நுழந்தார்.
அவருக்கு வேலை கிடைத்துவிட்டது!
தன்னம்பிக்கை வாழ்க!
////
பாடினாலும் வேலை!
எட்வார்ட் ஹாரிமேன் என்பவர் பெரிய ரயில்வே கம்பெனியின் அதிபர். அவரிடம் பல அதிகாரிகள் வேலை பார்த்து வந்தனர்..
ஒரு நாள் அவர் திடீரென அதிகாரிகள் அறைக்குள் நுழைந்தார்.
ஒரு அதிகாரி மேஜையின் மீது கால்களைப் போட்டுக்கொண்டு ஜாலியாக ‘விசில்’ அடித்து பாடிக்கொண்டிருந்தார்.
முதலாளியைப் பார்த்தவுடன் தூக்கிவாரி போட்டது.
உடனே நாற்காலியிலிருந்து எழுந்து நின்றார்.
சரி! நம்முடைய ‘சீட்டு’ இன்று கிழிந்தது– வீட்டுக்கு அனுப்பிவிடுவார் முதலாளி என்று நடுங்கினார்.
முதலாளி சொன்னார்: அட! இவ்வளவு கடுமையான வேலையிலும் உனக்கு நிதானமாகச் சிந்தித்து செயல்படும் ஆற்றல் இருக்கிறதே.
வெரி குட் (ரொம்ப நல்லது)
/////
ஏமாற்றியவருக்கு இரட்டைச் சம்பளம்!!
ஜேம்ஸ் கார்டன் பென்னெட் என்பவர் பெரிய பத்திரிக்கை முதலாளி. கடுமையான விதிமுறைகளைப் பின்பற்றுபவர். யாரும் மதுபானம் குடித்துவிட்டு அலுவலத்துக்கு வரக்கூடாது என்று உத்தரவு போட்டிருந்தார்.
ஒரு பத்திரிகை அலுவலக ஊழியர், ‘ஓஸி’யில் கிடைத்த மதுபானத்தை நன்றாக மாந்திவிட்டு அலுவலகத்துக்கு வந்தார். முதலாளி எங்கே இந்த அறைக்குள் வரப்போகிறார் என்று எண்ணி இருந்தார்.
அவரது “அதிர்ஷ்டம்” பென்னெட் உள்ளே நுழைந்தார். உடனே இந்த குடிகார பத்திரிக்கை ஊழியர் கொஞ்சம் பிரிண்டிங் இங்க் — மையை முகத்தில் பூசிக் கொண்டார்.
பென்னெட், அவரை, ஒரு பார்வை பார்த்தார். போர்மன் (FOREMAN), யார் இந்த ஆள்?
உடனே அவர் அவர் பெயரைச் சொன்னார்.
முதலாளி: கடுமையாக உழைப்பவர் என்று முகத்தைப் பார்த்தாலேயே தெரிகிறது. இன்று முதல் அவருக்கு இரட்டைச் சம்பளம் கொடுங்கள்!
–SUBHAM—
You must be logged in to post a comment.