திருடர்கள் இரண்டு வகை! ஜோதிடர்கள் மீது மனு தாக்குதல்! (Post No.3036)

260px-Japanesethieves

Written by london swaminathan

Date: 5th    August 2016

Post No. 3036

Time uploaded in London :– 7-52 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

kili 2

சம்ஸ்கிருதத்தில் திருட்டுக் கலை பற்றி தனி நூல்களே இருக்கின்றன. சம்ஸ்கிருதத்தில் இருக்கும் அளவுக்கு பரந்த வீச்சு உலகில் வேறு எந்த மொழியிலும் இல்லை. காம சாஸ்திரம், விமான சாஸ்திரம், ஆயுர்வேதம், மூலிகை விஷயங்கள், திருட்டு சாஸ்திரம்,  ஜோதிட சாஸ்திரம், இலக்கணம், இலக்கியம், தர்க்க சாஸ்திரம், நாடகம், கவிதை, பழமொழிகள், பொன்மொழிகள், சட்ட நூல்கள்,  நிகண்டு, மொழியியல்  என பல நூறுவகை விஷயங்கள் அதில் அடக்கம். எனக்குத் தெரிந்தவரை, கிரேக்க மொழி இதற்கு கொஞ்சம் பக்கத்தில் வரும். ஆனால் கிரேக்க மொழி சம்ஸ்கிருதத்தை விட குறைந்தது 600 வருடமாவது வயது குறைந்த மொழி.

நிற்க.

 

திருடர்கள் இரண்டு வகை என்கிறார் உலகின் முதல் சட்டப் புத்தகத்தை எழுதிய மனு. அதில் சோதிடர்கள், குறி சொல்லுவோர், ரேகை சாத்திரக்காரர் கள் மீதும் தாக்குதல் தொடுக்கிறார்!

 

இதோ அவர் எழுதிய மனு ஸ்மிருதியில் உள்ள சில பாக்கள் (ஸ்லோகங்கள்):–

 

ப்ரகாச வஞ்சகா: தேஷாம் நானா பண்ய உபஜீவின:

ப்ரச்சன்ன வஞ்சகா: து ஏதே யே ஸ்தேன ஆடவிகாதய:

 

உத்கோச  காஸ்ச: பதிகா: வஞ்சகா: கிதவா: ததா

மங்களாதேசவ்ருத்தா: ச பத்ரா ச ஏகக்ஷணிகை: சஹ

 

அசப்ய காரிணை: ச ஏவ மஹாமாத்ரா சிகித்சகா:

சில்யோபசாரயுக்தாஸ்ச நிபுணா: பண்யயோஷித:

மனு 9-258 -260

 

 kili 5

மனு 9-256

உளவாளிகள்தான் அரசனுக்குக் கண்கள்; அவர்கள் மூலமாக மக்களின்  உடைமைகளைத் திருடும்  வெளிப்படைத் திருடர்கள், மறைமுகத் திருடர்கள் ஆகிய இரண்டு வகைத் திருடர்களையும் அரசன் கண்டுபிடிக்க வேண்டும்

 

மனு 9-257

வணிகத்தில் மோசடி செய்யும் அனைவரும் வெளிப்படைத் (தெரிந்த) திருடர்கள்; வீடு புகுந்து திருடுவோர், காடுகளில் வழிப்பறி செய்வோர் முதலியோர் மறைமுகத் திருடர்கள்.

 

மனு 9-258

லஞ்சம் வாங்குவோர், மோசடிப் பேர்வழிகள், ஏமாற்றுப் பேர்வழிகள், சூதாட்டக்காரர்கள்,  மற்றவர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறது என்று ஆரூடம் சொல்லுவோர், குறி சொல்லுவோர்…………..

 

மனு 9-259

முறையற்ற வழியில் ஈடுபடும் மந்திரிகள், டாக்டர்கள், கலைகள் மூலம் சம்பாதிப்போர், வேசிகள்………….

 

மனு 9-260

இப்படிப்பட்டோர் வெளிப்படைத் திருடர்கள்; நல்லோர் வேஷம் போட்ட கீழ் ஜாதியார் மறைமுகத் திருடர்கள்.

 

மனு 9-261

இப்படிப்பட்ட திருடர்களை ரகசிய உளவாளிகள் மூலம் கண்டுபிடித்தவுடன் அவர்களைக் குற்றம் செய்யும் சூழ்நிலையை உருவாக்கி அதில் சிக்கவைத்து  கையும் களவுமாகப் பிடிக்கவேண்டும்.

மனு 9-262

ஒவ்வொருவர் செய்த தவறு என்ன என்பதைச் சொல்லி, தவற்றுக்கு ஏற்ற அளவு தண்டணை கொடுக்கவேண்டும்.

மனு 9-263

இந்தப் பூமியில் அமைதியாக உலவிவரும் தீயோரின்  நடவடிக்கைகளை  தீயோரைத் தண்டிப்பது ஒன்றினால்தான் செய்ய இயலும்.

மனு 9-264— மனு 9-266

சபைகள், சாலை ஓர நீர் குடிக்கும் இடங்கள், தாசி வீடுகள், உணவு விடுதிகள் (ஆப்பக் கடைகள்), மதுபானக் கடைகள், முச்சந்திகள், பொதுமக்கள் வேடிக்கை பார்க்கக் கூடும் இடங்கள், புனித மரங்கள், தோட்டங்கள், கலைஞர் வீடுகள், காலியாக இருக்கும் மனைகள், பொட்டல் காடுகள், புதர் மண்டிய பிரதேசங்கள் ஆகிய இடங்களில் உளவாளிகளையும் துருப்புகளையும் நிறுத்தி வைப்பதாலோ, அல்லது ரோந்து (காவல் சுற்று) செய்வதாலோ திருட்டுகளைக் கட்டுப்படுத்தலாம்.

 

kili 7

மனு 9-267

ஏற்கனவே திருட்டில் ஈடுபட்டு, இபோது திருந்தியவர்களைக் கொண்டு  புதிய திருடர்களைப் பிடிக்க வேண்டும் . அவர்களுடன் பழக வைத்து அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அறிந்து, அந்தத் திருடர்களை அடியோடு அழிக்க வேண்டும்

மனு 9-268

சாது சந்யாசிகளை சந்திக்க அழைப்பது போல அழைத்தோ, உணவு, கேளிக்கைக்காக கூப்பிடுவது போல கூப்பிட்டோ அல்லது அவர்களது சாகச செயல்களைப் பாராட்டுவது போல பாசாங்கு செய்தோ அவர்களை வளைத்துப் பிடிக்க வேண்டும்.

மனு 9-269

 

இந்த வலையில் சிக்காமலோ, அல்லது இதை அறிந்தோ தப்பித்து ஓடும் திருடர்களையும் , அவர்களுடைய தாய்வழி, தந்தை வழி உறவினர்களை  யும், நண்பர்களையும் அழிக்க வேண்டும் (உறவினர் நண்பர் மூலம் தான் செய்தி தெரிந்திருக்கும் என்பதால்)

 

(திருக்குறள் 550–ம் கொலையில் கொடியாரை மரண தண்டனை கொடுத்து தீர்த்துக் கட்டுங்கள் என்று செப்பும்.)

 

ஒரு திருடனிடம், அவன் திருடிய பொருட்கள் இல்லை என்றால் அவனைத் தண்டிக்கக்கூடாது. திருடிய பொருட்களோ திருட்டுச் சாதனங்களோ இருந்தால் தயக்கமின்றி தண்டணை கொடுக்க வேண்டும்.

 

இதற்குப் பின்னர், திருட்டுகளை ஒழிப்பதில் உதவாத அதிகாரிகளைத் தண்டிப்பது பற்றி பகர்கிறார்.

 

அதற்குப்பின்னுள்ள ஒரு ஸ்லோகம் குறிப்பிடற்பாலது:–

ஒரு கிராமம் கொள்ளை இடப்படுகையிலோ, ஒரு அணை உடைந்தபோதோ, சாலை வழிப்பறி நடக்கும்போதோ, அவர்களுக்கு உதவாதபடி, வேடிக்கை பார்ப்பவர்களை நாடுகடத்த வேண்டும்.

 

இரவில் திருடுபவர்களின் இரண்டு கைகளையும் வெட்டுங்கள். பிக் பாக்கெட் அடிக்கும் ஜேப்படித் திருடர்களின் விரல்களை வெட்டுங்கள் என்றும் மனு உத்தரவு இடுகிறார்.

 

ஒன்பதாவது அத்தியாயம் திருடர்கள் பற்றி இன்னும் பல விசயங்களை இயம்புகிறது. அக்காலத்தில் திருடர்கள் விஷயத்தில் எவ்வளவு கடுமையான விதிகள் இருந்தது என்பதை அறிவது அவசியம். 1600 ஆண்டுகளுக்கு முன்னர் – குப் தர் காலத்தில் — இந்தியாவுக்கு விஜயம் செய்த சீன யாத்ரீகன் பாஹியான், இந்தியாவில் திருட்டு பயமே இல்லை, மக்கள், வீடுகளின் கதவுகளைப் பூட்டாமல்தான் தூங்குவார்கள் என்று எழுதியுள்ளான்.

 

வாழ்க மனு! வளர்க மனு நீதி!

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: