உத்வேகம் ஊட்டும் உத்தமருக்கு அஞ்சலி! (Post No.3062)

I day map 2

Article Written S NAGARAJAN

Date: 15th  August 2016

Post No. 3062

Time uploaded in London :– 5-50 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

சிறந்த தியாகியும், பத்திரிகையாளரும், ஆன்மீகத்தைத் தமிழகத்தில் வளர்த்த சிறந்த கர்மயோகியுமான எனது தந்தையார் தினமணி திரு வெ.சந்தானம் அமரரான தினம் ஆகஸ்ட் 15.(15-8-1997) ஒரு அஞ்சலிக் கட்டுரை இது!

 

உத்வேகம் ஊட்டும் உத்தமருக்கு அஞ்சலி!

ச.நாகராஜன்

 

ஒருவரை எப்பொழுது வேண்டுமானாலும் நினைக்கும் போது உடனே உத்வேகம் பிறந்து பல அரிய காரியங்களைச் செய்ய முடியும் என்றால் அப்படிப்பட்ட உத்வேக வாழ்க்கையை வாழ்ந்தவர் —வாழ்வாங்கு வாழ்ந்த சிறந்த மனிதர்– என்று அர்த்தம். ஆகஸ்ட் 15ஆம் தேதி கொடி ஏற்றியாகி விட்டதா என்று கேட்டு அமரரான திரு வெ.சந்தானம் சிறந்த மனிதர்களில் ஒருவர் என்பதை உத்வேகமூட்டும் அவர் வாழ்க்கை நிகழ்ச்சிகள் எப்பொழுதும் உணர்த்தும்.

 

மாபெரும் அரசியல் தலைவர்களுடன் சகஜமாகப் பழகியவர் அவர். ஆன்மீகத்திலோ இணையிலா ஆசார்யர்களுடன் நெருங்கிப் பழகும் பாக்கியம் கொண்டவர். சித்தர்களிலோ எனில் கணபதியுடன்நேருக்கு நேர் பேசும்  மகத்தான ஸ்வாமிஜியின் அன்புக்கு பாத்திரமானவர்.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
சில நிகழ்ச்சிகள் ..

 

காமராஜர் மதுரையில் நடக்கும் காங்கிரஸ் மாநாட்டு பந்தலைப் பார்வையிட வந்தார். பந்தலோ டி.வி.எஸ் நிறுவனத்தின் உதவியுடன் அமைக்கப்பட்ட அருமையான் பந்தல். தினமணி நிருபர் காமராஜரிடம் சென்றார். எங்கள் ஆசிரியருக்கு (தினமணி வெ.சந்தானம்) தேச் சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளுக்காக அரசு தரும் எதுவம் வரவில்லையே என்றார்.

ஏன் என்று கேட்டார் காமராஜர்.

 

அதற்கு சிறை இருந்ததற்கான சான்றை சக சிறைவாசி ஒருவர் தர வேண்டும் என்று விதி இருக்கிறதே என்றார் நிருபர்.

எவன் அப்படி விதியைப் போட்டான்?

“தாங்கள் தான்! முதலமைச்சர் விதி இது”

ஹ ஹ ஹா என்று சிரித்தார் காமராஜர்.

 

ஒரே ஒரு வரி.

ஆங்கிலத்தில்,

திரு சந்தானம் என்னுடன் சிறையில் இருந்தார்.

கேகாமராஜ்

 

I day squirrel

உடனுக்குடன் செயலபடும் மாபெரும் தலைவர் காமராஜர். என் தந்தையாரிடம் மீது அவர் கொண்ட அன்பும் மதிப்பும் எல்லையற்றது.

 

எனது தந்தையாரை “சாமி” என்று அழைக்கும் முத்துராமலிங்கத் தேவர் ஆன்மீகம் தேசீய்மும் இழைந்து ஓடும் உத்வேகமூட்டும் சொற்பொழிவுக்குச் சொந்தக்காரர். மகுடி கேட்ட நாகம் போல மக்கள்  கூட்டம் சொக்கும் அவரது பேச்சால். மதுரையில் அவர் சொற்பொழிவு ஆற்றும் கூட்டங்கள் பலவற்றிற்கு என் தந்தையார் தான் தலைவர். மறுநாள் அப்படியே தேவர் பெருமானின் சொற்பொழிவு தினமணியில் வெளியாகும். மக்கள் பெரிதும் மகிழ்வர். தேவர் பெருமானும் தான்! அப்படியே வந்திருக்கிறதே என்று மகிழ்வார். எங்கள் குடும்பத்திற்கு தேவர் சமூகத்தினரின் உதவி காலம் காலமாக இருந்து வந்தது!

 

ஆயக்குடி ஸ்வாமிஜி கிருஷ்ணா ஒரு அபூர்வமான சித்தருக்கெல்லாம் சித்தர். தினமும் கணபதி ஹோமம் இளமையிலிருந்தே செய்து வந்தவர். கணபதியை பிர்த்யட்சமாகக் கண்டு பேசுபவர்.

 

அவரை தரிசிக்கும் போதெல்லாம் ஏராளமான அபூர்வமான சம்பவங்களை எங்கள் குடும்பத்தினர் அனுபவித்து மகிழ்வது வழக்கம்.

 

ஆய்க்குடியி (தென்காசி அருகில் உள்ள அற்புதமான கிராமம்) வசித்து வந்தார் அவர்.

 

அவராலேயே பரசுராமர் பூஜை செய்த ஐயப்பனின் சிலை அச்சன்கோவிலில் ஸ்தாபிக்கப்பட்டது. இன்று லட்சக்கணக்கில் மக்கள் அங்கு செலவ்தை அனைவரும் அறிவர்.

 

அங்கு வருடந்தோறும் நடக்கும் புஷ்பாஞ்சலி அபூர்வமான ஒன்று.

என் தந்தையார் மீது அளவு  கடந்த அன்பு கொண்டவர் அவர் அவர் செய்யும் கணபதி ஹோமம் கணபதியை பிரத்யட்சமாக எழுந்தருளச் செய்யும் ஹோமம் ஆகும்.

 

எங்கள் வீட்டிலும் கணபதி ஹோமம் நடந்தது. நண்பர் ஒருவர் வீட்டிலும் ஹோமம் நடந்தது. அங்கு அனைவரையும் தீடீரென்று கீழே விழுந்து நமஸ்கரிக்கச் சொன்னார். அனைவரும் நமஸ்கரித்தோம்.

 

பின்னால் தான் அவர் நடந்ததைச் சொன்னார்,

ஹோமத்தைப் பார்க்க குழந்தையானந்தர் உள்ளிட்ட பலர் வந்திருந்ததாகவும் அவர்களைத் தரிசித்ததால் எங்களையும் நமஸ்கரிக்கச் சொல்லி அவர்களின் ஆசியைப் பெற வைத்ததாகவும் தெரிய வந்தது.

 

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஏராளமான சுவையான நிகழ்வுகள்.

காலம் நிறபதில்லை; ஓடுகிறது. நல்ல நினைவுகள் நீடிக்கின்றன மறைவதில்லை!

 

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்றார் வள்ளுவர்.

 

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து இன்றும் நினைப்பவருக்கு உத்வேகம் ஊட்டும் உத்தமர் திரு வெ.சந்தானம்.

எனது தந்தையார்.

 

இந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி அவரை நினைத்து அஞ்சலி செலுத்துகிறோம்.

 

*********

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: