Translated by London Swaminathan
Date: 1st September 2016
Time uploaded in London:5-20 AM
Post No.3109
Pictures are taken from various sources; thanks for the pictures.
(Posted in English yesterday)
சம்ஸ்கிருதத்தில் இரண்டே வரிகளில் , திருக்குறள் போல, அருமையான கருத்துகளைச் சொல்லி விடுவர். அது போன்ற 4 வட மொழி ஸ்லோகங்கள் “ஏன்? ஏன்?” என்று முடியும். ஆகையால் ஸ்லோகத்தில் எதுகை மோனையும் இருக்கும்.
இதோ முதலில் கருத்து; பின்னர் ஸ்லோகம்!!
பொறுமை உள்ளவனுக்கு கவசம் ஏன்?
கோபம் உள்ளவனுக்கு எதிரி ஏன்?
உறவினர் உள்ளவனுக்கு நெருப்பு ஏன்?
நண்பன் இருந்தால் மருந்து ஏன்?
கெட்டவர் சேர்க்கை இருக்கும்போது பாம்பு ஏன்?
படிப்பாளிக்கு பணம் ஏன்?
பணிவு உடையோருக்கு ஆபரணம் ஏன்?
நல்ல விவேகம் உள்ளவனுக்கு ராஜ்யம் ஏன்?
பேராசை இருந்தால் வேறு கெட்ட குணம் அவசியமா?
கோட் சொல்லும் ஆளுக்கு வேறு பாவம் அவசியமா?
உண்மை இருக்குமிடத்தில் வேறு தவம் அவசியமா?
சுத்த மனம் இருந்தால் தீர்த்த யாத்திரை அவசியமா?
ஒற்றுமை உள்ள இடத்தில் வேறு பலம் அவசியமா?
புகழ் இருக்குமிடத்தில் வேறு அலங்காரம் அவசியமா?
நல்ல கல்வி இருந்தால், செல்வம் அவசியமா?
கெட்ட புகார் இருந்தால், மரணமும் அவசியமா?
சாந்திஸ்சேத் கவசேன கிம், கிம் அரிபி: க்ரோதோ அஸ்தி, சேத் தேஹினாம்
ஞாதிஸ்சேத் அனலேன கிம், யதிசுஹ்ருத் திவ்ய ஔஷதை: கிம் பலம்
கிம் சர்பைர் யதி துர்ஜனா: கிம் தனை வித்யா அனவத்யா யதி
வ்ரீடா சேத்கிமு பூஷணை:, சுகவிதா யத்யஸ்தி ராஜ்யேன கிம்
லோபஸ்சேத் குணேன கிம், பிசுனதா யத்யஸ்தி கிம் பாதகை:
சத்யம் சாத் தபஸா ச கிம் சுசிமனோ யத்யஸ்தி தீர்தேன கிம்
சௌஜன்யம் யதி கிம் பலேன மஹிமா யத்யஸ்தி கிம் மண்டனை:
சத்வித்யா யதி கிம் தனைர் பயசோ யத்யஸ்தி கிம் ம்ருத்யுனா
–SUBHAM–