Written by S. NAGARAJAN
Date: 23 October 2016
Time uploaded in London: 5-50 AM
Post No.3278
Pictures are taken from various sources; thanks
Contact :– swami_48@yahoo.com
By ச.நாகராஜன்
தமிழ் இன்றேல் தெய்வம் இல்லை; தெய்வம் இன்றேல் தமிழ் இல்லை. இரண்டும் இரண்டறப் பின்னிப் பிணைந்தவை என்பதை தமிழ் இலக்கியம் காட்டும்; தமிழ்ப் பண்பாடு காட்டும். தமிழ்ச் சமூகம் காட்டும்.
இதை உடைக்க நினைப்பவர் உடைபட்டுப் போவர்.
பிரம்மாண்டமான வரலாறைக் கொண்ட தமிழ் இலக்கியத்தில் தெய்வத்தைப் பிரித்தால் மிஞ்சுவது சவமே.
அதாவது சிவ இலக்கியம் சவ இலக்கியம் ஆகி விடும்!
சங்க இலக்கியம் மிகவும் பழமையானது.
அதில் தெய்வம் பற்றிய பாட்லகள் ஏராளம் உள்ளன. அனைத்தையும் தொகுத்து விளக்கினால் அது ஒரு கலைக் களஞ்சியமாக ஆகி விடும்.
ஒவ்வொரு தெய்வத்திற்கும் சங்க இலக்கியத்திலிருந்து எடுத்துக் கொடுக்கப்பட்ட குறிப்புகள் கீழே உள்ளன.
விநாயகரிலிருந்து ஆரம்பிப்போம்
- விநாயகர் : ஒருகைமுகன் தம்பியே (திருமுருகாற்றுப்படையில் காணப்படும் வெண்பா 7)
- சிவன் முதுமுதல்வன் (புறம் 166) தொல்முது கடவுள் (மதுரைக் காஞ்சி 42)
பணிவில் சீர்ச் செல்விடைப் பாகன் திரிபுரம் செற்றுழிக்
கல்லுயர் சென்னி இமயவில் நாணாகித்
தொல்புகழ் த்ந்தாரும் தாஅம்
(பரிபாடல் திரட்டு 1: 72-78)
- உமை கொடிபுரை நுசுப்பினாள் கொண்டசீர் தருவாளோ (கலைத்தொகை கடவுள் வாழ்த்து 7)
- திருமால் மறு பிறப்பறுக்கும் மாசில் சேவடி மாயோனே (பரிபாடல் 3)
- இலக்குமி அகனமர்ந்து செய்யாள் (குறள் 84)
அவ்வித்து செய்யவள் (குறள் 167)
- பிரம்மா- நான்முகன் தாமரை பயந்த தாவில் ஊழி நான்முக ஒருவற் சுட்டி (திருமுருகாற்றுப்படை 164-165)
- முருகன் முருகமர் மாமலைப் பிர்ந்தெனப் பிரிமே (ஐங்குறுநூறு 308;4) ஒடியா விழவின் நெடியோன் குன்றத்து (அக்நானூறு 149-16)
- தெய்வயானை மறுவில் கற்பின் வாணுதல் கணவன் (திருமுருகாற்றுப்படை -6)
- வள்ளி என்னுள் வருதியோ நல்நடை கொடிச்சி முருகு புணர்ந்து இயன்ற வள்ளிபோல நின் (நற்றிணை 82 3,4)
- இராமன் கடுந்தெறல் இராமன் உடன் புணர் சீதையை வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை (புறநானூறு 358 :18,19)
- பலராமன், கண்ணன்
பால்நிற உருவின் பனைக்கொடியோனும்
நீல்நிற உருவின் நேமியோனும் என்று
இரு பெரும் தெய்வமும் உடன் நின்று ஆஅங்கு
(புறநானூறு 58) இப்படி ஏராளமான குறிப்புகளைச் சங்க இலக்கியத்த்தில் பரக்கக் காணலாம்.
இதை யார் படித்து விடப் போகிறார்கள் என்ற நோக்கில் தமிழர் பண்பாடு என்பது தெய்வத்திற்கு அப்பாற்பட்ட ஒரு பண்பாடு என்பது போலவும் தெய்வங்களைப் பற்றிப் பழைய தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடவில்லை என்றும் தன் சொந்த உள் நோக்கிற்காக வெள்ளையரின் வழியில் கடந்த அறுபது ஆண்டுகளாக நாத்திக பிரச்சாரம் நடைபெறுகிறது.
இவர்கள் தெய்வத்தை நம்பவில்லை என்றால் தமிழையும் நம்பக் கூடாது. தமிழை நம்பினால் அது சுட்டிக்காட்டும் தெய்வீகப் பண்பாட்டையும் மதித்துத் தழுவ வேண்டும்.
இல்லையேல் இவர்கள் அனைவரும் ‘ஜோம்பிகளாகத்’ தான் வாழ வேண்டும். ஜோம்பி என்பது கல்லறையில் புதைக்கப்பட்டு திடீரென்று இருளில் எழுந்து நடமாடும் சவம் என்ப்தை அனைவரும் அறிவர்.
தாங்கள் ஜோம்பிகளாக மாறியதோடு மொத்த தமிழ்ச் சமுதாயத்தையும் ஜோம்பிகளாக மாற்ற முயலும் இவர்களை என்ன்வென்று சொல்வது?
தமிழர்கள் விழிப்புணர்வுடன் சங்க இலக்கியத்தைத் தாமே ஊன்றிப் படிக்க வேண்டும். அது காட்டும் பண்பாட்டை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
குமரி முனையில் ஆரம்பித்து இமயமலை வரை முடிந்த் இடம் எல்லாம் சென்று நமது பண்பாட்டை ஊன்றிக் கவனிப்பதுடன் தனது ஆன்மீக அனுபவங்களைச் சிலரிடமாவது சொல்லி நல்லனவற்றைப் பரப்ப வேண்டும்.
சங்க இலக்கியம் தங்க இலக்கியம் அது தெய்வ இலக்கியமே!
**********
You must be logged in to post a comment.