Written by S NAGARAJAN
Date: 28 February 2017
Time uploaded in London:- 8-23 am
Post No.3676
Pictures are taken from different sources; thanks.
contact: swami_48@yahoo.com
பாரதி இயல்
ஏ.கே.செட்டியாரின் குமரி மலர் கட்டுரைகள் – 6
ச.நாகராஜன்
ஏ.கே. செட்டியாரின் குமரி மலரில் வெளியான கட்டுரைகள்
குமரி மலரில் வெளியாகியுள்ள இன்னும் சில கட்டுரைகள் பற்றிய செய்திகளை காண்போம்
- தராசு என்னும் நூலிலிருந்து ஸி.ஆர் ஸ்ரீநிவாஸன் (1939) எழுதிய கட்டுரை ஒன்றை குமரி மலரில் காண்கிறோம்.
அந்தக் கட்டுரை:
எந்த தேசக் கவியுடனும், எந்த முறையில் சோதித்தாலும் பாரதி சளைக்க மாட்டார் என்பது உறுதி. ஆனால் அவர் செய்த சேவையில் சிறு பகுதியையே அது குறிக்கும். பாஷைக்குப் பெர்ருமையைத் தேடியதே அவர் செய்த அரிய சேவை.
தமிழ் நாட்டிலே தாய் பாஷையின் மாற்று மங்கியிருந்தது; அன்னிய ஆட்சியில். அன்னிய பாஷைக்கு அளவு கடந்த மதிப்புக் கொடுத்து, ஆணவத்தை இழந்து விட்டனர் தமிழ் மக்கள். பதவியும் பொறுப்பும் படைத்த பெரியோர் சுயபாஷையில் பேசக் கூச்சப்பட்டனர்; குறைவென்றும் நினைத்தனர்.; பாஷையின் மீது பழியைச் சுமத்தினர். பாரதி தோன்று முன் இருந்த நிலைமையை இன்றைய நிலைமையுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
மாறுதலுக்கு முக்கிய காரணம் பாரதி என்பது என் சித்தாந்தம். தமிழை உயிர்ப்பித்தவர் அவர்; ஊட்டம் அளித்தவர் அவர்; பாஷையின் லாகவத்தை மெய்ப்பித்தவர் அவர்; பாஷைக்கு மேனி அளித்தவர் அவர்.
பாரதி வாழ்ந்தது சுதேசி இயக்கம் தோன்றிய காலம்; விடுதலை வேட்கை பிறந்த காலம்; வெற்றி முரசு கொட்டினார் பாரதி. உறக்கம் தெளிய, வீரம் சொரியப் பாடினார் பாரதி. அன்று தாயகத்திற்கு அவர் செய்த ஸேவை அளவிடற்பாலதன்று.
41) இதே குமரி மலர் இதழில் பாரதியார் பாமணம் என்ற தலைப்பில் பண்டித ஜனாப் K. அப்துல் சுகூர் (1933) எழுதிய கவிதையும் வெளியிடப்பட்டிருக்கிறது.
- கண்ணிகள் கொண்ட இந்தப் பாடல் பாரதி என்ற மாதப் பத்திரிகையில் வெளியாகியுள்ளது.
பாரதியார் பாமணம்
தேனிருக்குது தினையிருக்குது தென்பழனியில் என்ற மெட்டு
- பூ மணக்குது புகழ் மணக்குது
புண்ணியர் பாடலிலே \
பாமணக்குது பயன் மணக்குது
பாரதி பாட்டுள்ளே
- இனிமை மொழி இனிசையிலங்குது
இன்பப் பாடலிலே
பனிமொழிச்சியர் கலை மணக்குது
பாரதி பாட்டுளே
- காவியக்கனி கனிந்திருக்குது
காமர்ப் பாடலிலே
பாவியலணி பரந்திருக்குது
பாரதி பாட்டுளே
- புண்ணிய நெறி பொலிந்திருக்குது
புதுமைப் பாடலிலே
பண்ணியல்களின் நடை நடக்குது
பாரதி பாட்டுளே
- தகைமை தத்துவந் தவழ்ந்திருக்குது
தண்ணார் பாடலிலே
பகைமை குன்றிய வாழ்க்கை தங்குவது
பாரதி பாட்டுளே
- தேஞ்சார்ம் பசுந் தேறலிருக்குது
தேசப் பாட்லிலே
பாஞ்சாலி நிறை படர்ந்திருக்குது
பாரதி பாட்டுளே
- ஜெயந்தொனிக்குது திறனொலிக்குது
திவ்யப் பாடலிலே
ப்யந்தொதுங்குது தீண்டாமைப் பேய்
பாரதி பாட்டுளே
- சாதிக் கொடுமைகள் தகர்ந்தழியுது
சங்குப் பாடலிலே
பாதகர் செயும் மோசமோடுது
பாரதி பாட்டுளே
- சேவை முறைகள் சேர்ந்திருக்குது
தேசப் பாடலிலே
பாவையர் சுதந்திரமிலங்குது
பாரதி பாட்டுளே
- விடுத்லையெனும் வீணையொலிக்குது
வித்தகப் பாடலிலே
படுப்வத் தொழில் பறந்திரியுது
பாரதி பாட்டுளே
- அச்சமென்ற சொலகன்றிருக்குது
அன்புப் பாடலிலே
பச்சமென்ற சொல் பரவி நிற்குது
பாரதி பாட்டுளே
- கொஞ்சுங்காதல் திறந்தொனிக்குது
குயிலின் பாடலிலே
பஞ்சமோடிட வழியிருக்குது
பாரதி பாட்டுளே
- அடிமையென்ற சொலகன்றிருக்குது
அமுதப் பாடலிலே
படிதலென்ற சொல பழுதுபட்டது
பாரதி பாட்டுளே
- முத்தமிழெனும் வெற்றிமுழங்குது
முரசுப் பாடலிலே
பத்தழகுகள் பரவி நிற்குது
பாரதி பாட்டுளே
- அண்டத்தை வெல்லும்
ஆண்மை தங்குது அழகுப் பாட்லைலே
பண்டைத் தமிழர் வீறிலங்குது
பாரதி பாட்டுளே
- பாரதியென்றிட சக்தி ஜெனிக்குது
பாப்பாப் பாடலிலே
“பாரதி” மாளிகை தன்னிலுலாவுது
பாரதி பாடல்களிலே
- “பாரதி”
மாதப் பத்திரிகை
உத்தமபாளையம் 1933 ஆகஸ்டு
அடுத்து சில சுவையான கட்டுரைகள் உள்ளன.
இதைத் தொகுக்க திருஏ.கே. செட்டியார் அவர்கள் எத்தனை கஷ்டப்பட்டிருப்பார் என்பதை நினைத்துப் பார்த்தால் அவரின் அருமை தெரியும்.
-தொடரும்
***