மன்னர்களுடன் படகுகளை புதைத்தது ஏன்? எகிப்திய அதிசயங்கள் -14 (Post No.3689)

Written by London swaminathan

Date: 4 March 2017

Time uploaded in London:- 8-09 am

Post No. 3689

Pictures are taken from various sources; thanks.

contact; swami_48@yahoo.com
11 ஆவது வம்சாவளி அரசர்கள், நடு ராஜ்ய (MIDDLE KINGDOM) காலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்தக் கால அரசர்களில் சிறந்தவர் நெபபத்ரெ மண்டுஹோதப் (NEBHEPETRE MONTUHOTEP- நவபத்ரி மண்டூக தேவன்) அவர் நீண்ட காலம் (2055-2004 BCE) அரசாட்சி செய்தார்.

இதற்கு முன்னர், பாரோ என்பவர் கடவுளின் அவதாரம் என்று கருதப்பட்டது. இப்பொழுது அவர் ஒரு பெரிய அதிகாரி என்று நிலைமை மாறிவிட்டது.

உண்மையில் 11-ஆவது வம்சாவளியில் அதிகாரியாக இருந்த ஒருவர் மன்னராகி (பாரோ- ஆகி) 12ஆவது வம்சத்தைத் துவக்கிவைத்தார்.
12-ஆவது வம்சாவளியின் சிறப்பமசம் எல்லா மன்னர்களும் நீண்டகாலம் ஆட்சி செய்தனர்.
(வெள்ளைக்கார்களின் இந்திய விரோதப் போக்கிற்கு இங்கே ஒரு எடுத்துக்காட்டு உள்ளது. புராணங்களில் உள்ள வரலாற்றை ஒட்டு மொத்தமாகப் புறக்கணித்துவிட்டு புதிய வரலாறு எழுதினர் வெள்ளைக்காரர்கள். ஆனால் எகிப்தில் உள்ள விஷயங்களை — முன்னுக்குப் பின்னாக முரணாகவுள்ள விஷயங்களை ஒடடுப் போட்டு உண்மைபோல எழுதி வருகின்றனர். இந்திய புராண மன்னர்கள் எல்லோரும் 60 முதல் 90 ஆண்டு ஆட்சி புரிந்தனர். ஆனால் இந்திய அரசர்களின் சராசரி ஆட்சிக் காலம் 20 ஆண்டுகள் மட்டுமே என்று வெளிநாட்டினர் பொய் வரலாறு எழுதினர். அதை மாற்றி உண்மை வரலாறு எழுதுவது நமது கடமை)
இந்த ஆட்சிக் காலத்தில் எகிப்தின் ஆதிக்கம் வெளிநாடுகளுக்குப் பரவியது. புதிய கலைகள் வளர்ந்தன; புதிய பாணி பின்பற்றப்பட்டது. பழைய ராஜ்யத்தில் “பிரம்மாண்டம்” என்று அளவுக்கு மதிப்பு கொடுத்தனர். நடு ராஜ்யத்தில் அளவு சின்னதானாலும் அதில் கலைவேலை நுணுக்கமாக மாறியது.

 

சிறந்த மன்னர் சேஷாத்ரி

12-ஆவது வம்சாவளியில் குறிப்பிடத்தக்கவர் சென்வர்ச்ரேட் SENWOSRET (சம்வத்சர சிரேஷ்டன்) கி.மு 1965-1920

இவர் இளவரசராக இருந்தபோது லிபியாவில் போர் செய்துகொண்டிருந்தார். அப்போது மன்னன் அமணமேத (Amenemhet I) படுகொலை செய்யப்பட்ட செய்தி வந்தது. உடனே எகிப்துக்குத் திரும்பி ஆட்சியைக் கைப்பற்றினார். இவருடைய பெயர் கிரேக்க புத்தகங்களில் சேஷாச்த்ரி (Sesostris) என்று எழுதப் பட்டுள்ளது!

இதற்கு அடுத்து வந்த 13-ஆவது வம்சம் எகிப்திய வரலாற்றில் மிகப்பெரிய மாறுதல்களை உண்டாக்கின. ஆசியாவிலிருந்து ஹிக்ஸோஸ் (HYKSOS) என்பவர் உள்ளே புகுந்தனர். இவர்கள் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்பது என் கருத்து. அதை அடுத்த கட்டுரையில் காண்போம்.

மன்னர்களுடன் படகுகளை புதைத்தது ஏன்?

இறந்தவர்களுடன் படகுகளையோ கப்பல்களையோ புதைக்கும் வழக்கம் நார்வே, ஸ்வீடன் போன்ற நாடுகளிலும், பிலிப்பைன்ஸிலும் இருந்தது. ஆயினும் மிகப்பழமையான தடயங்கள் எகிப்திலிருந்தே கிடைத்துள்ளன (கி.மு.2500).
ஆஹா (ஹோர் Hor Aha) என்ற மன்னன் கி.மு.3150-ல் ஆண்டான். அவனுடைய கல்லறை சக்கராவில் இருக்கிறது. அருகில் இரண்டு குறிப்பிடத்தக்க விஷயங்கள் உண்டு. ஒரு கிராமப்புற காட்சியின் பொம்மைகளை செய்துவைத்துள்ளனர். இர்ணடாவது ஒரு படகு புதைக்கப்பட்டது. மன்னன் மேலுகத்துக்க்ப் போன பின்னர் நட்சத்திரங்களுக்கு இடையே படகில் பவனி வரவும், அப்படி பவனி வருகையில் பழைய கிராமப்புற காட்சிகளை நினைவுகொள்ளவும் இந்த ஏற்பாடு. இது எல்லாம் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் செய்துள்ளனர் எகிப்தியர்!

கீஸா (பெரிய) பிரமிடு மூலம் வரலாற்றில் அழியா இடம்பெற்ற கூஃபு (கிரேக்கர்கள் கீயாப்ஸ் CHEOPS என்பர்) ஒரு பெரிய கப்பலையும் விட்டுச் சென்றுள்ளார். மன்னர் தனது மறு உலக வாழ்வில் பயன்படுத்த இதைப் பிரமிடில் ஓரிடத்தில் புதைத்து வைத்தனர். இது இப்போது (GIZA SOLAR BOAT MUSEUM) மியூசியத்தில் உள்ளது.

143 அடி நீளமும் 20 அடி அகலமும் உடைய இந்தப் படகு, உண்மையில் பயன்படுத்திய படகு அல்ல. மன்னருக்காக அடையாளபூர்வமாகச் செய்யப்பட்டது. மேலும் இதை பூமியிலிருந்து 1954ல் எடுத்தபோது தனித் தனியாகக் கிடைத்தது. அதை படகுகள் பற்றி ஆராய்ச்சி செய்து அதன்படி ஒட்ட வைத்துள்ளனர். அதாவது வரலாற்றை “உருவாக்கியுள்ளனர்” (RECONSTRUCTED).

இதில் பழைய கயிறுகள் கூட அப்படியே உள்ளன. இது தைக்கப்பட்ட (Sewn) படகு. அதாவது கயிறு கொண்டு கட்டப்பட படகு. ஆணிகள் அல்லது மர ஆணிகள் (குச்சிகள்) (neither riveted nor nailed) பயன்படுதப்படவில்லை. ஒமான் கடற்கரையில் இன்றும் இத்தகைய படகுகள் உள்ளன. பாலைவனம் போன்ற பகுதிகளைக் கடக்கையில் அவைகளைப் பிரித்து துண்டு துண்டாக எடுத்துக் கொண்டு போய் பின்னர், மீண்டுமிணைத்து படக்காக்கிக் கொள்ளலாம்!

1991-ஆம் ஆண்டில் அபிதோஸ் (ABYDOS) நகரில் பா லைவனப் பகுதியில் ஒரு அரிய கண்டுபிடிப்பு! அதவது 12 படகு வடிவக் கல்லறைகள்!

 

உண்மையில் ஒவ்வொரு கல்லறையிலும் ஒரு படகு காணப்பட்டது. இந்த கல்லறைகள் செங்கற்களால் செய்யப் பட்டவை. சராசியாக ஒவ்வொரு கல்லறையும், 86 அடி நீளம். அதில் 75 அடி நீளமுள்ள மரத்தினால் ஆகிய படகு. பகிற்குள்ளும் செங்கற்களை நிரப்பி மேலே காரை கொண்டு பூசி வெள்ளை அடித்துள்ளனர். 2000 ஆம் ஆண்டில் இதைத் தோண்டி ஆராய்ந்தனர். இவைகளும் தைக்கபட்ட (sewn) படகுகள். ஆனால் உண்மையில் நதியில் பயன்படுத்தக் கூடியவை. வெறும் பொம்மைப் படகுகள் (not Models) அல்ல. மன்னர்கள் அல்லது அதிகாரிகளை ப் படகுகளோடு புதைப்பதில்லை. அவர்கள் அருகில் அல்லது கொஞ்சம் தொலைவில் புதைக்கப்படுவர்.

புதைக்கப்பட் ட இடம் தெரியாமல் இருக்க அந்த இடங்களை சம தரை போலக் காட்டி இருக்கின்றனர் இது போல சக்கரா, ஹெல்வா (Helwan) ஆகிய இடங்களிலும் படகுப் புதையல்கள் கிடைத்தன.

பல இடங்களில் யாருக்காக இந்தப் படகுகள் என்று பெயர் எழுதாமலேயே புதைத்துள்ளனர். பொதுவாக மன்னர்கள் புதைக்கப ட்ட இடங்களில் அவர், மேல் உலகத்தில் பயன்படுத்துவதற்காக துணிமணிகள், நாற்காலிகள், உணவு, பானங்கள் ஆகியவற்றை விட்டுச் சென்றனர். ஒரு வேளை இந்தப் படகுகள் மூலம் அவைகள் மேலும், மேலும் வரும் என்று கருதி இருக்கலாம்.

எகிப் திய சுவர் எழுத்துக்களில் மன்னரின் மறு உலகப் பயணம் (after life) பற்றியும், சூரிய தேவனின் வானுலகப் படகுப் பயணம் பற்றியும் எழுதி வைத்துள்ளனர். ஆகையால் நாம் இவற்றின் பயனை ஊகித்தறியலாம்.

அ ருகருகே புதைக்கப்ப ட்ட இரண்டு படகுகளின் அளவுகள் வித்தியாசப் படுவதால் ஒன்று மன்னரின் படகு, மற்றொன்று சூரியனின் படகு என்றும் ஆராய்ச்சியாளர்கள் ஊகிப்பர்.

 

5000 ஆண்டுகளுக்கு முன்னர் அவர்கள் விட்டுச் சென்ற பல்லாயிரக்கணக்கான விஷயங்கள் குறித்து புதுப் புது விஷயங்களுடன் பத்திரிக்கைகளும், புத்தகங்களும் வந்து கொண்டே ருக்கின்றன. மேலை உலத்தில் எகிப்தியவியல் (Egyptology) ஒரு கவர்ச்சிகரமான துறையாகும்.

–தொடரும்

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: