வள்ளுவர் குறளில் வடமொழிச் சொற்கள் (Post No.3873)

TIRUVALLUVAR STATUE AT LONDON UNIVERSITY

 

Written by S NAGARAJAN

 

Date: 3 May 2017

 

Time uploaded in London:-  5-45 am

 

 

Post No.3873

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

குறள் வேதம்

 

முக்கியக் குறிப்பு:

 

வைஷ்ணவ பரிபாஷை என்ற அழகிய நூலை எனக்கு அனுப்பி உதவியவர் எனது சம்பந்தி திரு ஆர்.சேஷாத்ரிநாதன் அவர்கள்.

அவ்வப்பொழுது அவர் அனுப்பும் மின் நூல்கள் அற்புதமானவை; பொருள் பொதிந்தவை. அவருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கட்டுரையை ஆரம்பிக்கிறேன்.

 

வள்ளுவர் குறளில் கையாண்ட வடமொழிச் சொற்கள்

 

ச.நாகராஜன்

 

 

சங்க காலம் தொட்டே சம்ஸ்கிருதமும் தமிழும் ‘கொண்டு கொடுத்து’ உறவைச் செழுமைப் பயன்படுத்திக் கொண்ட மொழிகள்.

 

 

தமிழிலிருந்து சம்ஸ்கிருதத்திற்குச் சென்ற வார்த்தைகள் ஏராளம். அதே போல சம்ஸ்கிருதத்திலிருந்து தமிழுக்கு வந்த வார்த்தைகளும் ஏராளம்.

காழ்ப்புணர்ச்சி, வெறுப்பு, பகை இன்றி தமிழ்ப் புலவர்களும் சம்ஸ்கிருத பண்டிதர்களும் தேவையான இடங்களில் நல்ல பதங்களை தங்கள் கவிதைகளிலும் காவியங்களிலும் நயம் படக் கையாண்டு வந்தனர்.

இதற்கு எடுத்துக்காட்டாக வள்ளுவர் தம் திருக்குறளில் கையாண்ட வடமொழிச் சொற்களைக் கூறலாம்.

இதைப் பட்டியலிடும் அரும் பணியில் ஈடுபட்ட எம்பார் கண்ணன் ரங்கராஜன் அவர்கள் வைஷ்ணவ பரிபாஷை என்ற தனது அரிய நூலில் கீழ்க்கண்ட பட்டியலைத் தந்துள்ளார். நூலின் பெருமையைப் பற்றி தனியே இனி எழுத இருக்கும் ஒரு கட்டுரையில் காணலாம்.

 

இப்போது குறள்களின் பட்டியல்:-

குறள் 1

அகர முதல் எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு

குறள் 9

கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை

குறள் 18

சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு

குறள் 19

தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம் வானம் வழங்கா தெனின்

குறள் 29

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயுங் காத்தல் அரிது

குறள் 43

தென்புலத்தார் தெய்வம் விருந்தோக்கல் தானொன்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை

குறள் 60

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன் நன்கலம் நன்மக்கட் பேறு

குறள் 102

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது

குறள் 120

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின்

குறள் 215

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு

குறள் 261

உற்ற நோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே

தவத்திற் குரு

குறள் 266

தவஞ் செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார் அவஞ்செய்வார் ஆசையுட்பட்டு

குறள் 271

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்

குறள் 337

ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப கோடியும் அல்ல பல

குறள் 360

காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய்

குறள் 490

கொக்கொக்கக் கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து

குறள் 580

பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர்

குறள் 636

மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம் யாவுள முன்நிற் பவை

குறள் 667

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து

குறள் 682

அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு இன்றி யமையாத மூன்று

குறள் 706

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்

குறள் 738

பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து

குறள் 763

ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை நாகம் உயிர்ப்பக் கெடும்

குறள் 931

வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம் தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று

குறள் 958

நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக் குலத்தின்கண் ஐயப் படும்

குறள் 1029

இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக் குற்ற மறைப்பான் உடம்பு

குறள் 1073

தேவர் அனையர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுக லான்ல்

குறள் 1086

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர் செய்யல மன்இவள் கண்

குறள் 1116

மதியும் மடந்தை முகனும் அறியா பதியின் கலங்கிய மீன்

குறள் 1157

துறைவன் துறந்தமை தூற்றாக்கொல் முன்கை இறைஇறவா நின்ற வளை

மேலே உள்ள குறள்களின் எண்ணிக்கை மொத்தம் 30

இவற்றில் வரும் சம்ஸ்கிருத்ச் சொற்கள் தடித்து சிவப்பு வண்ணத்தில் காட்டப்பட்டுள்ளன.

சொற்களின் பட்டியல்:

ஆதி

பகவன்

குணம்

பூசனை

தானம்

தவம்

குணம்

கணம்

தெய்வம்

மங்கலம்

காலம்

வாணிகம் (இரு முறை)

நீர்

உரு

தவம்

கருமம்

ஆசை

பூதங்கள்

கோடி

காமம்

நாமம்

பருவம்

நாகரிகம்

மதி

அதி

அச்சாணி

தூது

முகம்

அணி

நாகம்

சூது

குலம்

குடும்பம்

தேவர்

புருவம்

மதி

பதி

வளை

சம்ஸ்கிருதச் சொற்களின் மொத்த எண்ணிக்கை 39.

இவற்றில் இரு முறை வந்த சொற்கள் :குணம், தவம், வாணிகம்,மதி ஆகியவை.

ஆக மொத்த எண்ணிக்கையில் ஆறைக் கழித்தால் வரும் சம்ஸ்கிருத்ச் சொற்கள் 33.

 

சில அறிஞர்கள் இன்னும் சில சொற்களையும் கூட சம்ஸ்கிருதப் பட்டியலில் சேர்த்திருக்கின்றனர்.

ஆனால் எம்பார் கண்ணன் ரங்கராஜன் அவர்கள் தந்துள்ள பட்டியலில் இடம் பெறுபவை இவை மட்டுமே.

வள்ளுவர் சொல்லின் மகிமையை அறியாதவ்ர் இல்லை.

அணுவைத் துளைத்து பொருளைத் தரும் அற்புதக் குறளின் வன்மையை அறியாதவர் யார்?

அவர் நினைத்திருந்தால் இவற்றைத் தவிர்த்திருக்கக் கூடும்.

ஆனால் எடுத்துக் கொண்ட பொருளின் தன்மை கருதி உரிய கருத்திற்கு உரிய இடத்தில் அவற்றைப் பயன் படுத்தி இருக்கிறார்.

குறள் தமிழ் மறை. இதற்கு மேலும் விவரிக்க வேண்டாமே!

இனி அடுத்த கட்டுரையில் தமிழ்த் தாய் வாழ்த்தில் இடம் பெறும் சம்ஸ்கிருதச் சொற்களைக் காண்போம்.

 

PLEASE READ THE OLD POSTS

 

வள்ளுவன் ஒரு சம்ஸ்கிருத அறிஞன் | Tamil …

https://tamilandvedas.com/…/வள்ளுவன்-ஒரு-சம்…

5 Nov 2012 – Picture: Tamil Poet Valluvar’s statue at SOAS, University of London பொய்யா மொழிப் புலவன் திருவள்ளுவன் ஒரு பெரியசம்ஸ்கிருத அறிஞன். அவன் செய்த …

 

Who was Tiruvalluvar? written and posted by me on 24 July 2013

Abert Einstein and Tiruvalluvar, posted on 17 December 2013

Tamil Merchant who dumped god into sea, posted on 17 August 2014

Elelasingan Kathai (Tamil), posted on 17 August 2014

 

வள்ளுவனும் வன்முறையும் (ஜூலை 24, 2013)

 

வள்ளுவன்  ஒரு  சம்ஸ்கிருத  அறிஞன் (நவம்பர் 5, 2012)

 

வள்ளுவான் சொன்ன புராண, இதிஹாசக் கதைகள் (ஜூலை 30, 2013)

 

வள்ளுவன் காமெடி ( 5 ஜனவரி, 2015)

திருவள்ளுவர் பற்றிய பழைய புத்தகம் (Post No. 2532) , 12 -2-2016

திருவள்ளுவர் யார்?,  Post No. 748 dated 17th December 2013.

 

Buddha and Tamil Saint on Good thoughts!, Post No 717 dated 21 November 2013

ஏலேல சிங்கன் கதை!, கட்டுரை எண்:– 1238; தேதி 17 ஆகஸ்ட் 2014.

அவ்வையார், வள்ளுவர் பற்றிய அதிசய தகவல்கள்! 14-11-2015

 

திருவள்ளுவர் ஐயரா? ஐயங்காரா? (Post No.3068); Date: 17th August 2016

–SUBHAM–

 

 

 

 

Leave a comment

2 Comments

  1. No this is not correct. World’s Thirukural which was written in Tamil only.

  2. thirukkural, the unique and wonderful literature is written in Tamil only. No doubt! but the article points out that valluvar has used sanskrit words also to emphasise his points. Some tamil scholars say that he has used more than one hundred words. This in anyway degrade kural. On the contrary it gives us a valuable advise that in order to grow in the present scientific age, we may use necessary words from other languages also. Please go through the history about the growth of English language. S.NAGARAJAN

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: