மறக்கின்ற தருணமும் நினைக்கின்ற தருணமும்! (Post No.3885)

Written by S NAGARAJAN

 

Date: 7 May 2017

 

Time uploaded in London:-  5-18 am

 

 

Post No.3885

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

கடவுளும் மனிதனும்

மறக்கின்ற தருணமும் நினைக்கின்ற தருணமும்!

 

.நாகராஜன்

 

ஒரு பிரம்மாண்டமான அடுக்கு மாடிக் கட்டிடம் கட்டப்படுக் கொண்டிருந்தது. ஒரு நாள் சூபர்வைஸர் ஒருவர் தரையிலிருந்து பதினாறாம் மாடியில் இருந்த ஒரு தொழிலாளியைக் கூவி அழைத்துக் கொண்டிருந்தார். ஆனால் அந்தத் தொழிலாளிக்கோ அவரது அழைப்பு காதில் விழவில்லை.

 

 

அவர் பத்து ரூபாய் நோட்டு ஒன்றை மடித்து குறி பார்த்து அவனை நோக்கி எறிந்தார். நோட்டு பறந்து போய் தொழிலாளியிடம் விழுந்தது. அதை ஆவலுடன் பார்த்த் தொழிலாளி அதை எடுத்துத் தன சட்டைப் பையில் பத்திரமாக்ப் போட்டுக் கொண்டு தன் வேலையைத் தொடர்ந்து பார்க்க ஆரம்பித்தான்.

 

 

தன்னை அவன் கவனிக்காததைக் கண்ட சூபர்வைஸர் ஒரு ஐநூறு ரூபாய் நோட்டை எடுத்து நன்கு மடித்து அவனை நோக்கிக் குறி பார்த்து எறிந்தார். நோட்டு தொழிலாளியிடம் வந்து விழுந்தது. ஐநூறு ரூபாய் நோட்டு!! அதை ஆவலுடன் எடுத்துக் கொண்ட தொழிலாளி தன் சட்டைப் பையில் பத்திரமாக வைத்துக் கொண்டான். தன் வேலையைத் தொடர்ந்தான்.

 

இப்போது சூபர்வைஸர் ஒரு சிறிய கல்லை எடுத்துக் கொண்டு குறி பார்தது அதை அவன் மேல் எறிந்தார். கல் வந்து விழுந்தது. உடனே தொழிலாளி கல் வந்த திசையை நோக்கிப் பார்த்தான். அங்கு சூபர்வைஸர் நின்று கொண்டிருந்தார். சூபர்வைஸர் தான் சொல்ல வேண்டியதைச் சொன்னார்.

 

 

இதே தான் நம் வாழ்க்கையிலும் நடக்கிறது.

 

கடவுள் நம்மிடம் தொடர்பு கொள்ள நினைக்கிறார். ஆனால் நாமோ ந்மது பிஸியான உலகியல் வாழ்க்கையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம், அவரைக் கவனிக்க முடியாமல்.

உடனே அவர் சில சிறிய பரிசுகளை அனுப்புகிறார். ஊஹீம், அவரை நம்மால் கவனிக்க முடியவில்லை. பிறகு அவர் சில பெரிய பரிசுகளை அனுப்புகிறார்.

 

ஊஹீம், இப்போதும அவரைக் கவனிக்க முடியவில்லை. பரிசுகளைப் பத்திரப் படுத்திக் கொள்கிறோம்.

 

தந்த அவருக்கு ஒரு நன்றி கூடச் சொல்லமுடியவில்லை, பார்த்தால் தானே சொல்ல முடியும்!  நாம் அதிர்ஷ்டசாலி என்று நினைத்துக் கொண்டு நம் வாழ்க்கையைத் தொடர்கிறோம்.

 

உடனே அவர்  ஒரு சின்ன கல்லால் நம்மை அடிக்கும் போது – அது தான், சில தொந்தரவுகளை அனுப்பும் போது -உடனே, கடவுளே, எனக்கு மட்டும் ஏன் இந்த சோதனை என்று கதறுகிறோம்.

 

இப்போது நமது முழு பார்வையும் கவனமும் கடவுள் மீது திரும்புகிறது.

 

அடடா! என்னே மனிதனின் விசித்திரமான போக்கு! என்னே அவன் வாழ்க்கை!!

 

அதனால் தான் இப்படிச் சொல்கிறார்கள் போலும்:

HE GIVES AND GIVES AND FORGIVES ; AND

WE GET AND GET AND FORGET..?!!!!

 

அவன் கொடுக்கிறான்; கொடுத்துக் கொண்டேஇருக்கிறான்; அவனைக் கவனிக்காத போதும் கூட மன்னிக்கிறான்

 

நாம் பெறுகிறோம்; பெற்றுக் கொண்டே இருக்கிறோம்; அவன் அனைத்தையும் தந்ததையும் மறந்து அவனையும் மறக்கிறோம்!

 

 

SOURCE

From : TRUTH WEEKLY 28-4-2017  ISSUE

தமிழில் தந்தது ச.நாகராஜன்

 

இதன் மூலத்தை ஆங்கிலத்தில் கீழே காணலாம்:

 

Snippet from Social Media

 

Pain or Mercy !

 

A Construction Supervisor from 16th Floor of a Building was calling a worker on Ground Floor. Because of noise the worker did not hear his call.

 

To draw attention, the Supervisor threw a 10 Rupee note in front of worker. He picked up the note, put it in his pocket and continued to work.

 

Again to draw attention the Supervisor threw a 500 Rupee note and the worker did the same.

 

Now the Supervisor picked a small Stone and threw on the Worker. The Stone hit the Worker. This time the worker looked up and the supervisor communicated with him.

This Story is same as to our ‘LIFE’ …
God wants to communicate with us, but we are busy doing our worldly jobs. Then, he give us small gifts and big gifts. We just keep them without looking from where we got it. We are the same.

Just keeping the gifts without thanking Him, we just say, we are LUCKY. And when we are hit with a small stone, which we call PROBLEMS, then only we look up and communicate with him.

 

That’s why it is said :–

 

He gives, gives and forgives

And We get, get and forget.. …..

***

நன்றி : Truth magazine

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: