Research article Written by London Swaminathan
Date: 8 June 2017
Time uploaded in London- 21-14
Post No. 3983
Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.
contact: swami_48@yahoo.com
ரிக் வேதத்தில் ‘தஸ்யூ’ (Dasyu) என்ற சொல் பல இடங்களில் வருகிறது; அதன் பொருள் குற்றம் இழைத்தவன், திருடன் , கொள்ளையன் என்பதாகும். ஆனால் இந்து மதத்தை அழித்து, இந்தியாவைப் பிளக்க வேண்டும் என்று எண்ணிய வெள்ளையர்கள் அந்தச் சொல்லுக்கு பழங்குடி மக்களாக ‘இருக்கலாம்’ அல்லது திராவிடர்களாக ‘இருக்கலாம்’ அல்லது ஆப்கனிஸ்தான்/பாகிஸ்தான் பகுதியில் வாழும் பிரஹுயி மொழி பேசுவோராக ‘இருக்கலாம்’ என்றெல்லாம் கதை கட்டிவிட்டனர். இவற்றில் எந்த உண்மையும் இல்லை என்பதை ரிக் வேதத்துக்குப் பின் எழுந்த ஐதரேய பிராமணம் என்னும் நூலும், நமக்கு இரண்டாயிரம் ஆண்டுக்கு முன் வாழ்ந்த உலகப் புகழ் கவிஞன் காளிதாசனும் பறை அறிவித்துள்ளனர்.
உலகிலேயே அதிகம் சண்டை போட்டவர்கள் தமிழர்கள்தான். உலக வரலாற்றைப் படித்தோருக்குத் தெரியும் 1500 ஆண்டுகளுக்கும் மேலாக இடைவிடாமல் போரிட்ட இனம் உலகில் தமிழ் இனம் மட்டுமே. சங்க இலக்கியப் பாடல்களில் இப்படி சண்டை போட்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்களை வீரர்கள் என்றும் புலவர்கள் போற்றியுள்ளனர். ஆனால் அந்த மூன்று வேந்தர்களையும் யாரும் ஆரியர், திராவிடர், முண்டா இன மக்கள் என்று சொல்லுவதில்லை. இவ்வளவுக்கும் அவர்களிடையே ஜன்மப் பகை! ‘சூ’ என்றால் சண்டைக்கு வருவர். எதிரி மன்னர்களின் மனைவியரின் கூந்தலைக் கத்தரித்து கயிறு திரித்து வெற்றிபெற்ற மன்னரின் ரதத்தை இழுத்துவந்ததாகவும், அவனது அரண்மனைகளைத் தரைமட்டமாக்கி கழுதை பூட்டிய ஏர் கொண்டு உழுது அவமானப் படுத்தியதாகவும் புறநானூற்றுப் புலவர் பாடுவர். அப்படிப் பாடிய போதும் அவர்களை
எவரும் வேற்றினமாகப் பார்க்கவில்லை.
ஆனால் இந்துமதத்தில் விஷ விதைகளை ஊன்ற வந்த மாக்ஸ்முல்லர்களும் கால்டுவெல்களும் சாதாரண ஒரு சொல்லுக்குப் பயங்கரப் பொருள் கற்பித்தனர்.
உலகிலுள்ள எல்லா சமய நூல்களிலும் பழைய இலக்கியங்களிலும் அதே இனத்தைச் சேர்ந்த அல்லது மாற்று இனத்தைச் சேர்ந்த எதிரிகள் வருணிக்கப்படுகின்றனர். இது தவிர திருடர், கொள்ளையர், குற்றவாளிகள் ஆகீயோரும் வருணிக்கப்படுகின்றனர். அர்ஜுனனைப் பார்த்து கிருஷ்ணன் பல இடங்களில் ‘பரந்தப:’ (எதிரிகளை தஹிக்கவைப்பவனே) என்பார் பகவத் கீதையில்; இது போல தமிழ் இலக்கியத்தில் பாலைநில மறவர்கள் எல்லோரையும் கொள் ளையடித்து கொன்ற செய்தியும் உள்ளது ஒன்றுமில்லாத ஒரு பிராமணனைக் கொன்றுவிட்டு ஐயோ இவனைக் கொன்றுவிட்டோமே என்று கையை நொடித்துக் கொண்ட பாடலும் சங்க இலக்கியத்தில் உள்ளது; ஆனால் அவர்களை
வேறு இனமாக நாம் பார்க்கவில்லை. இது போலவே ரிக்வேத காலத்தில் குற்றமிழைத்தவர்களை தஸ்யூக்கள் என்றனர்
காளிதாசனில் ஒரு காட்சி
காளிதாசன் எழுதிய சாகுந்தலம் நாடகம் உலகம் முழுதும் பிரசித்தம்; பல ஐரோப்பிய மொழிகளில் நீண்ட காலத்துக்கு முன்னரே மொழி பெயர்க்கப்பட்ட நூல்; 2000 ஆண்டுப் பழமை வாய்ந்தது; அதில் ஒரு காட்சி.
ஐந்தாம் காட்சி 21ஆவது ஸ்லோகம்
கண்வ மகரிஷியின் வளர்ப்பு மகள் சகுந்தலை; அவள் உலகப் பேரழகி; கானக ரோஜா; கண்வர், ஆஸ்ரம்த்தில் இல்லாத போது துஷ்யந்தன் என்ற மன்னன் அவளை ரஹசியமாகக் கல்யாணம் செய்துகொண்டு கர்ப்பவதி ஆக்கிவிடுகிறான்; அதுமட்டுமல்ல அவளைக் கானகத்திலேயே விட்டு விடுகிறான்; செய்தி அறிந்த கண்வ மஹரிஷி, உரிய காலத்தில் ஒரு சிஷ்யன் மூலமாக துஷ்யந்தனிடம் அனுப்புகிறார். மன்னனோ ஒன்றும் அறியாத அப்பாவி போல நடிக்கிறான். அப்போது கோபமுற்ற கண்வரின் சீடன, ‘ஐயன்மீர்; திருடன் (தஸ்யூ) கொள்ளையிட்ட சொத்தை அவனிடமே திருப்பித் தரவந்துள்ளேன்’ என்று கடிந்துரைக்கிறான். இங்கே திருடனுக்கு காளிதாசன் பயன்படுத்திய சொல் தஸ்யூ. துஷ்யந்தன் திருட்டுத்தனமாக அவளை அனுபவித்து விட்டுப் போனதால் திருடன் கொள்ளையிட்ட சொத்து என்று சகுந்தலா வருணிக்கப் படுகிறாள்; ஆகவே தஸ்யூ என்பதன் உண்மைப் பொருள் திருடன்.
ரிக்வேதத்தில் தஸ்யூ
ரிக் வேதத்தில் தஸ்யூவைக் குறிப்பிடும் இடங்களில், அநாஸ (மூக்கு அற்றவர்), அவிரத (உரிய கருமங்களைச் செய்யாதோர்),அதேவ (கடவுளை வணங்காதோர்), அயஜ்ய ( யாகம் செய்யாதோர்) ம்ருதவாக் (கடுஞ் சொல்லுடையோர்) என்றெல்லாம் வருணிக்கப்பட்டுள்ளனர்.
திராவிடர்களை மூக்கு இல்லாதவர்கள் என்று எவரும் சொல்லமாட்டார்கள்; மஞ்சள் நிறத் தோலுடைய மங்கோலாய்ட் (Mongoloid) இனத்தினர் (ஜப்பான், சீனா) சப்பை மூக்குடையோர். ஜப்பானியர்களுக்கு மூக்கு இருப்பதே தெரியாது; மேலும் திராவிடர்களுக்கு போண்டா மூக்கு, சுருட்டை முடி, முட்டைக் கண்கள் என்றெல்லாம் வெள்ளையர்களே எழுதி வைத்துள்ளனர். ஆகவே எதிரிகளைத் திட்டும்போது இப்படிப்பட்ட சொற்கள் வருவது இயல்பே.
உண்மையில் தமிழ் அரசர்களை காவல் காத்த யவனர்களைக்கூட ‘கடுஞ்ச் சொல்லுடையோர்’ என்று தமிழ் இலக்கியம் செப்பும்; அது போல இடையர்களைக் கல்லா இடையர் என்று தமிழ்ப் புலவர்கள் பாடுகின்றனர்.
ஒரு நல்ல சொல்லும் காலப் போக்கில் அவப் பெயர் பெறுவதும் , ஒரு கெட்ட சொல் காலப் போக்கில் நல்ல பொருள் பெறுவதும் மொழி அறிஞர்களுக்குத் தெரிந்த விஷயமே.
பறை அறிவிக்கும் அரசு அதிகாரி= பறையன். ஆனால் காலப் போக்கில் தீண்டத்தகாதவன் என்று பொருள் பெற்றது. இன்றும் அதே அர்தத்தில் உலகம் முழுதும் ஆங்கிலப் பத்திரிக்கைகளிலும், டெலிவிஷன் ஸ்டேஷன்களிலும் பயன்படுத்துகின்றனர். வேண்டாத நாடுகளையும் தலைவர்களையும் இன்டெர்நேஷனல் பறையா (International Pariah) என்று ஓலமிடுகின்றனர். ஆக ஆங்கில அகராதியில் இடம்பெற்ற தமிழ் சொல்லுக்கு இவ்வளவு துஷ்பிரயோகம்!
பழைய காலத்தில் கழகம் என்றால் சூதாடும் இடம்; இன்று பல அரசியல் கட்சிகள் கழகம் என்று பெயர் வைதுக்கொண்டுள்ளன. மேலே குறிப்பிட்ட தஸ்யூவும் இப்படி பொருள் மாறி வந்து திருடன் என்று மென்மைப் பொருள் பெற்று இருக்கலாம். பூர்வ காலத்தில் அது எதிரி, குற்றவாளி, கெட்டவன் என்ற பொருளுடன் இருந்திருக்கலாம்.
இந்திரனை வருணிக்கும் ரிக் வேதப் பாடலும் அவனை தஸ்யூவைக் கொல்பவன் என்று சொல்கிறதே தவிர தாசர்களைக் கொல்பவன் என்று சொல்லவில்லை. ஆக தஸ்யூ என்பது கடுமையான குற்றம் இழைத்தோர் ஆவர். அதில் இனம் ஏதும் இல்லை. இந்திரன் கொன்ற 30 அரக்கர்களில் மூன்றே பேருக்குத்தான் தஸ்யூ என்ற சொல் சேர்க்கப் பட்டுள்ளது. ஆகவே எல்லோரும் இப்படி அழைக்கப்படவில்லை. மேலும் வேதங்களில் தென்னகம் குறிப்பிடப்படவில்லை.; வடக்கில் திராவிடர்கள் இருந்ததும் ஊகமே.
–Subham–