அரச்சலூர் இசைக் கல்வெட்டில் ஒரு அற்புதம்! (Post No.4095)

Written by London Swaminathan


Date: 19 July 2017


Time uploaded in London-8-50 am


Post No. 4095


Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

என்ன அற்புதம்?

முதல் இரண்டு கல்வெட்டுகளையும் இடமிருந்து வலமாகப் படித்தாலும் மேலிருந்து கீழாகப் படித்தாலும் ஒரே மாதிரி உள்ளதைக் (Palindrome) காணலாம். இவை இசைத் துறையிலும், கூத்துத் துறையிலும் பயன்படுத்தப்படுகின்றன.

 

சங்க இலக்கியத்திலும் வண்ணக்கன், தேவன் , சாத்தன் முதலிய பெயர்கள் வருகின்றன.

 

தேவன், சாத்தன் (சாஸ்தா) முதலிய சம்ஸ்கிருதச் சொற்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டில் புழங்கின. வால்மீகி, கண்ணதாசன், காமாக்ஷி, விஷ்ணுதாசன் (கண்ணந்தாயன், காமக்கண்ணி, விண்ணந்தாயன்) என்ற பெயர்கள் புறநானூற்றில் இருப்பதால் இதில் வியப்பதற்கு எதுவும் இல்லை.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் இசைத் துறையிலும் நாடகத் துறையிலும் நல்ல முன்னேற்றம் கண்டனர் என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு.

 

எங்கே உள்ளது?

ஈரோட்டிலிருந்து காங்கேயம் செல்லும் பாதையில் 12 மைல் தொலைவில் அரச்சலூர் இருக்கிறது.

ஊரின் எல்லை ஓரமாகவுள் ள நாக மலையில் ஆண்டிப்பாறையில் பாண்டியர் குழியில் (குகை) உள்ளது. அங்கேதான் இக் கல்வெட்டுகள் உள. சில வரிகள் சிதைந்து உள்ளன.

 

சிதைந்த எழுத்துக்களை அடைப்புக்குறிக்குள் காணலாம். எளிதில் ஊகிக்க முடியும்.

எந்தக்காலம்?

இக்கல்வெட்டு கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த (பிராமி) தமிழி எழுத்துக்களில் எழுதப் பட்டுள்ளது

 

முதல் கல்வெட்டு

 

த தை தா தை த

தை தா தே தா தை

தா தே தை தே தா

தை தா தே தா தை

த தை தா தை த

 

இரண்டாம் கல்வெட்டு

தை த தை த தை

த தை (த) தை த

தை த தை த தை

த தை (த) தை த

(தை த தை த தை)

மூன்றாம் கல்வெட்டு

எழுத்துப் புணருத்தான் மணிய்

வண்ணக்கன் தேவன் சாத்தன்

xxxx

 

புணருத்தான் = தொகுத்தான்

 

தொல்காப்பியம், சிலப்பதிகாரம் முதலிய பழந்தமிழ் நூல்களில் இசையில் எப்படி எழுத்துக்கள் நீட்டித்தும், தனித்தும் உச்சரிக்கப்படும் என்பது உரை ஆசிரியர்களால் விளக்கப்பட்டுள்ளது. இன்றும் சங்கீதக் கச்சேரிகளில் இப்படிச் சொற்கள் பயன்படுத்தப்படுவதைக் காணலாம்.

 

கன்யாகுமரியில் என்பதை , கன்னியாக்கு…………… மரியிலே………. என்று முழங்கும் பாடல் என் நினைவுக்கு வருகிறது!

 

உதவிய நூல்

கல்வெட்டு – ஓர் அறிமுகம்

தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை வெளியீடு 1976

TAGS:– அரச்சலூர், இசை, கல்வெட்டு, அற்புதம்

–Subham–

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: