ரஹசியம்! பரம ரஹசியம்! எல்லா மதத்திலும் உண்டு! (Post No.4300)

Written by London Swaminathan

 

Date:14 October 2017

 

Time uploaded in London- 7-43 am

 

 

Post No. 4300

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

பாரசீக நாட்டில் (ஈரான்) ஜொராஸ்டர் (Zoroaster or Zarathusthra) என்பவர் பின்பற்றிய மதம், வேத கால சமயம் போன்றது. அவர்களும் தீயை (யாக, யக்ஞம்) வணங்கினர். ஆயினும் சில கருத்துக்களில் மாறுபட்டார். ஒற்றுமை அம்சங்களே அதிகம்; அதில் ஒன்று மந்திரங்களை எல்லோருக்கும் கற்றுத் தராதே என்பதாகும். இது எல்லா சமயங்களிலும் உள்ள உண்மை.

 

நான் தினமும் படிக்கும் விநாயகர் கவசத்தில் கடைசியில் வரும் வரிகள் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக உளது என்பது எனக்கு வியப்பை ஏற்படுத்தியது!

அன்பு உறுதி ஆசாரம் உடையார்க்குக்கிக்

கவசத்தை அறைக அல்லார்க்கு

என்பெறினும் உரையற்க எனக்கிளந்து

மரீசி தனது இருக்கையுற்றான்

என்று விநாயக கவசம் முடியும். அதாவது அன்பு, உறுதி, ஆசாரம் ஆகியன எவருக்கு இருக்கிறதோ, அவர்களுக்கு மட்டும் இக்கவசத்தைச் சொல்லிக்கொடு; மற்றவர்கள் என்ன கொடுத்தாலும், அவர்களுக்குச் சொல்லி விடாதே என்று கூறிவிட்டு மரீசி முனிவர் அவருடைய இருப்பிடத்தை அடைந்தார் என்பதாகும்.

 

புத்தரும் ஒரு சொற்பொழிவில், எனக்கு நிறைய விஷயங்கள் தெரியும்; அவைகள் எல்லாவற்றையும் நான் சொல்லித் தரப்போவதில்லை என்று கூறுகிறார். அதிக விடயங்களைச் சொல்லச் சொல்ல குழப்பம் அதிகரிக்கும் என்பது அவருக்கும் தெரியும்.

 

ஜொராஸ்டர் சொல்லிய கருத்துக்கள் ஜெண்ட் அவஸ்தா (Zend Avesta) என்ற புனித நூலில் உள்ளது. சந்தஸ் என்ற சம்ஸ்கிருதச் சொல்லே ஜெண்ட் (ZEND) என்று திரிந்ததாக ஆன்றோர் கூறுவர். இந்தப் புனித நூலில் மூன்று இடங்களில் இந்த மந்திரங்களை யாருக்குச் சொல்லித் தரவேண்டும்,எப்படி சொல்லித் தர வேண்டும் என்று எழுதப்பட்டுள்ளது.

 

தந்தை ஒருவர் மகனுக்குக் கற்பிக்கலாம்; அல்லது சஹோதரன் ஒருவன் மற்ற சஹோதரனுக்கு உபதேசிக்கலாம்; அல்லது அதர்வண் (புரோஹிதர்) தனது சீடனுக்குச் சொல்லித் தரலாம் என்று ஜொராஸ்டருக்கு அஹுரமஸ்தா (AHURA MAZDA அசுர மஸ்தா= பெரிய கடவுள்) சொன்னதாக ஆறாவது அமேஷா ஸ்பெண்டாவில் (Sixth Amesha Spenta) வருகிறது. இதே போல யாஸ்ட் 14, 46 (Yasht 14, 46) ஆகியவற்றிலும் சொல்லப்பட்டுள்ளது.

இந்து மதத்தில் எல்லா மந்திரங்களும் குரு மூலமாகவே கற்பிக்கப்படுகிறது. பிராமனர் உள்பட மூன்று வருணத்தார் பூணுல் போடும்போதும் அவர்களுக்கு தந்தைதான் காயத்ரீ மந்திரத்தை உபதேசிப்பார். அப்பொழுது மகனையும் தந்தையையும், புரோஹிதரையும் ஒரு பட்டு வேஷ்டியால் போர்த்தி மறைத்து விடுவர். இதன் பொருள் இது ரஹசிய மந்திரம்; அந்த ரஹசியத்தைக் காக்க வேண்டும் என்பதாகும்.

பிருஹத் ஆரண்யக (பெருங் காட்டு) உபநிஷதத்திலும் (6-3-12), சாந்தோக்ய உபநிஷத்திலும் (3-2-5-6) இவ்வாறு எழுதப்பட்டுளது. அதாவது மகனோ அல்லது தனது மாணவரோ இல்லாவிடில் மந்திரங்களைக் கற்பிக்காதே என்பது கட்டளை.

 

மதத்தில் தீட்சை பெற்றவர்களுக்கே ரஹசிய ஞானம் கிடைக்கும் என்று கிறிஸ்தவ புனிதர் பால் (St.Paul) கூறுகிறார்.

 

பாபிலோனியா, எகிப்து போன்ற நாகரீகங்களிலும் சில விஷயங்கள் எல்லோருக்கும் கிடைக்காது என்றும் அதில் சேர்ந்தவர்களுக்கு (Initiated)  மட்டுமே கிடைக்கும் என்றும் வரலாற்று அறிஞர்கள் எழுதியுள்ளனர்.

 

ரோமானிய சாம்ராஜ்யத்தில் பரவிய மித்ர (Mithra Cult) வழிபாடு நிலத்து அடியிலுள்ள குகைகளில் கற்பிக்கப்பட்டது. அது மட்டுமல்ல அந்த வழிபாட்டில் தீட்சை எடுத்துக் கொள்வோர் சவுக்கடியும் (flagellation) பெறவேண்டும்.

மித்ரனைப் போற்றும் ஒரு மந்திரத்தில் (யாஸ்ட் Yasht 10-122) சவுக்கடி விதிகள் கூறப்படுகின்றன. மூன்று பகல், மூன்று இரவில் குளித்த பின்னர் 30 சவுக்கடி அல்லது சாட்டை அடி பெறும், சாத்திரங்களைக் கற்ற அறிஞர்களே மித்ர பானத்தை அருந்தலாம் என்று ஜோராஸ்டருக்கு அசுர மஸ்தா கூறுகிறா

ர் என்று இந்த யாஸ்ட் சொல்கிறது. சில சந்தர்ப்பங்களில் இரண்டு பகல் இரண்டு இரவுகளில் குளித்து விட்டு இருபது கசையடிகள் வாங்கிய பின்னர் மித்ரனுக்காக தயாரிக்கப்பட்ட பானத்தை அருந்தலாம் என்றும் அதே மந்திரம் சொல்லும்.

 

ஐயப்ப விரதம் இருப்போர் குருமார்களிடம் தீட்சை பெறுவது இப்போதும் உள்ளது.  அதற்கு 41 நாள் விரதம் இருக்க வேண்டும். இதே போல விஜயாவாடவில் பவானி விரதம் இருப்போர் 41 நாட்களுக்கு சிவப்பு ஆடைகளை அணிந்து கோவில் குருமாரிடம் தீட் சை பெறுகின்றனர்.

 

ஏன் இந்த ரஹசியம்?

கண்ட கண்ட தோழான் துருத்திகளுக்கு மந்திர உபதேசம் செய்தால், அவர்களுடைய நடை உடை பாவனைகள் அந்த மந்திரத்தின் மதிப்பைக் குறைத்து விடும்; மக்கள அதில் நம்பிக்கை இழந்து விடுவர். எல்லா மதங்களிலும் போலி சாமியார்கள் உண்டு; அவர்கள் எல்லாம் நாஸ்தீகவாதிகளுக்கு உதவி செய்யவும் மதங்களின் மதிப்பைக் குறைக்கவும் பிறந்தவர்கள். மந்திரத்தின் மதிப்பையும் சக்தியையும் காப்பாற்ற ரஹசியம், பரம ரஹசியம் அவசியம்!

Source: M P Khareghat Memorial Volume-1, Bombay, 1953 (A Symposium on Indo-Iranian Subjects)

TAGS: ரகசியம், ரஹசியம், பரம, மந்திரம், ஜொராஸ்டர்

இது தொடர்பான எனது பழைய கட்டுரைகள்:–

போலி சாமியார் பற்றிய பழந்தமிழ்ப் …

https://tamilandvedas.com/…/போலி-சாமியார்-பற…

2 days ago – போலி சாமியார் பற்றிய பழந்தமிழ்ப் பாடல்கள் (Post No.4294) … கூடா ஒழுக்கம் என்னும் அதிகாரத்தில், போலி வேடம் போடும் ஆட்கள் …

மந்திரங்களை யாரும் கற்கலாமா? | Tamil and …

https://tamilandvedas.com/…/மந்திரங்களை-யாரு…

6 Nov 2013 – ஏன் சில மந்திரங்களை ஒரு சில வகுப்பினர் மட்டுமே கற்கலாம் என்று … எல்லோருக்கும் முன்பாக மன்னர் தனக்கும் காயத்ரீ மந்திரம் …

மந்திரங்களை யாரும் கற்கலாமா? | Swami’s …

swamiindology.blogspot.com/2013/11/blog-post_6.html

6 Nov 2013 – ஏன் சில மந்திரங்களை ஒரு சில வகுப்பினர் மட்டுமே கற்கலாம் என்று … எல்லோருக்கும் முன்பாக மன்னர் தனக்கும் காயத்ரீ மந்திரம் …

 

–SUBHAM–

 

Leave a comment

2 Comments

  1. மந்திரங்கள் மட்டுமல்ல- எந்த சிறந்த வித்தையையும் ஆன்றோர்கள் தக்க சீடர்களுக்கே கற்பிப்பர். ‘தக்க’ என்பது தற்காலம் போன்று IQ மட்டுமே குறிக்காமல் ஒருவரின் குணம், நடத்தை ஆகியவற்றைக் குறித்தது. இன்று குணத்தின் மீதான தகுதியைப் பார்ப்பதில்லை. அதிகம் IQ உள்ளவன்தான் அதிகம் தில்லுமுல்லு செய்கிறான். இன்று பலவித குண்டு செய்யும் வித்தை- தொழில் நுட்பம்- தீவிரவாதிகள் கையில் சிக்கிவிட்டது. இவர்கள் கையில் அணு ஆயுத ரகசியம் கிடைத்தால் என்ன ஆகும்!

    இது ஒரு விதத்தில் தொழில் தர்மம் [ professional ethics ] என்பதோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். பழைய வக்கீல்கள் – பண்பட்ட குடும்பச் சூழ்நிலையில் வந்தவர்கள்- Conservative- ஒரு கேஸ் வந்தால், அவன் சொல்வது உண்மையா என்பதை முதலில் பார்ப்பார்கள். எல்லா வழக்கையும் தொடமாட்டார்கள். இன்று தொழில் தர்மம் என்ற பெயரில் தெரிந்த போக்கிரிக்கும் சிறந்த வக்கீல் ஆஜராகிறார்! எல்லோருக்கும் சட்டக் கல்வி வந்ததன் விளைவு!

    IQ பார்த்து மருத்துவக் கல்விக்கு சேர்க்கிறார்கள். இவர்கள் படித்து டாக்டரான பிறகு, தனியாகத் தொழில் செய்வதில்லை- கிராமப்புரம் போவதில்லை. நகர்ப்பகுதிகளில், வசதியான இடங்களில் ஆஸ்பத்திரிகளில் சேர்கிறார்கள். இது அமெரிக்காவிலேயே நிலவும் நிலை. 50 வருஷங்களுக்கு முன்வரை, 50% மேல் புதிதாக வரும் டாக்டர்கள் general practitioners, family physicians என்று போவார்கள், இன்று Corporate hospitals, university centres, research என்று கிளம்புகிறார்கள். இதனால் மருத்துவ உதவி, காசு பறிக்கும் இயந்திரமாகி விட்டது. சேவை மனப்பான்மை அருகிவிட்டது. இதை 1980 லேயே Marilyn Ferguson தனது ‘The Aquarian Conspiracy’ என்ற நூலில் விளக்கினார். வித்தை கற்க புத்தி மட்டும் தகுதியாகாது..

    இதம் தே நாதபஸ்காய நாபக்தாய கதாசன
    ந ச ஶுஶ்ரூஷவே வாச்யம் ந ச மாம் யோ அப்யஸூயதி

    என்று பகவான் கீதையில் (18.67) சொல்கிறார்.

    இது எல்லா உயர்ந்த வித்தைக்கும் பொருந்தும்.

  2. THANKS FOR ALL YOUR COMMENTS; IT IS A VERY USEFUL ADDITION TO WHAT I WRITE. I ALSO LEARN LOT OF THINGS FROM YOUR COMMENTS.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: