திருப்புகழ் ஓதுதல் : ஒரு வழிகாட்டி (Post No.4414)

Written by S.NAGARAJAN

 

 

Date: 20 NOVEMBER 2017

 

Time uploaded in London- 6-58 am

 

 

Post No. 4414

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

திருப்புகழ் பெருமை

திருப்புகழ் ஓதல் : ஒரு வழிகாட்டி (திருப்புகழ் கைட்)!

 

ச.நாகராஜன்

 

1

அருணகிரிநாதர் அருளியுள்ள திருப்புகழின் மஹிமையை முற்றிலுமாக யாராலும் உரைத்திடல் இயலாது.

திருத்தணிகையில் அவர் அருளியுள்ள திருப்புகழ் “வீ ர ஜெயத் திருப்புகழ் என்று கொண்டாடப்படுகிறது.

அந்தப் பாடல் வருமாறு:

 

 

சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்

    செகுத்தவ ருயிர்க்குஞ்               சினமாகச்

சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்

    திருப்புகழ் நெருப்பென்               றறிவோம்யாம்

 

நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்

    நிசிக்கரு வறுக்கும்                  பிறவாமல்

    நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்

நிறைப்புக ழுரைக்குஞ்                    செயல்தாராய்

 

தனத்தன தனத்தந் திமித்திமி  திமித்திந்

    தகுத்தகு தகுத்தந்                     தனபேரி

தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந்

    தளத்துட னடக்குங்                   கொடுசூரர்

 

சினத்தையு முடற்சங் கரித்தம லைமுற்றுஞ்

   சிரித்தெரி கொளுத்துங்

தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண்

   திருத்தணி யிருக்கும்                 பெருமாளே

 

அற்புதமான இந்தத் திருப்புகழை எத்தனை தரம் படித்தாலும், பயின்றாலும் அதன் முழுப் பொருளையும் பெருமையையும் உணர்ந்ததாக ஆக முடியாது!

 

அத்துணை பொருள் செறிந்த புகழ்ப் பாட்டு.

 

திருப்புகழை ஓதினால் நினைத்ததும் அளிக்கும்.

மனத்தையும் உருக்கும்.

 

பிறவாமல் நிசிக் கருவறுக்கும்.

அடுத்து வரும் சொற்றொடர் அற்புதமான ஒரு சொற்றொடர்

எதையும் எரிக்கும்! நெருப்பையும் கூட எரிக்குமாம் திருப்புகழ்

 

மலையைக் கூடப் பொடிப் பொடி ஆக்கி விடும்.

அப்படிப்பட்ட பெருமையை உடைய அற்புதமான திருப்புகழை ஓதும் செயலை எனக்குத் தருவாயாக, திருத்தணி உறை பெருமாளே என்கிறார் அருணகிரிநாதர்.

அவர் பாடிய திருப்புகழுக்கான பெருமையும் இதில் தான் உள்ளது; அது உரைக்கும் முருகனின் பெருமையும் இதில் தான் உள்ளது.

 

 

2

    இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது ஜப்பான், ஜெர்மனி ஆகிய பகை நாடுகள் இந்தியா மீது குண்டுகள் வீசும் அபாயம் ஏற்பட்டதால் மக்கள் மிகவும் பீதியுற்றனர்.

 

 

     அப்போது வள்ளிமலைத் திருப்புகழ் ஸ்வாமிகள் மக்களின் பீதியை அகற்ற திருப்புகழ் பாராயணக் குண்டு என்னும் நூலை 1942ஆம் ஆண்டு ஜனவரியில் வெளியிட்டார்.

அந்த நூலின் முகவுரையில், “இத்திருப்புகழ்ப் பாராயணக் குண்டு ஜெர்மனி, ஜப்பான் குண்டுகளை அடக்கவல்ல பேராற்றல் வாய்ந்த எதிர் குண்டு. சூர சம்ஹார காலத்தும் முருகன் திருப்புகழ் வெற்றியே போர்க்களத்தில் முழங்கிற்று என்பது,

 

 

   “கஜரத பதாகிநி அரக்கர் துணி பட்டுவிழு

  களமுழுதும் வாழிய திருப்புகழ் முழக்குவன

கடிய குணத்த சினத்த ஸஹத்ர யோஜனை

     நெடிய கழுத்த சுழித்த விழித்த பார்வைய

காத நூறாயிர கோடி வளைந்தன

   பூத வேதாளம அநேக விதங்களே

 

 

என வரும் பூத வேதாள வகுப்பால் ஏற்படுவதால், போர்க்களத்தும், மற்றும் எல்லாவிடத்தும் இறைவன் திருப்புகழை ஓதி எளிதில் ஸுகம் பெறலாம். திட புத்தியுடன் நித்திய பாராயணம் செய்தால் இத்திருப்புகழ்க் குண்டின் ஆற்றலையும் ப்ரபாவத்தையும் அநுபவத்தில் காணலாம் என்று இவ்வாறு ஸ்வாமிகள் அருளினார்.

அனைத்துத் துன்பங்களையும் விடுவிக்க வல்ல திருப்புகழ்த் தொகுப்பை ஸ்வாமிகள் அருளினார். அதைக் கீழே காண்போம்.

 

 

 

3

1.பாடும் பணி பெற – கந்தரனுபூதி – ஆடும் பரிவேல்

2.உயிர்க்கு ஆதரவு –  திருப்புகழ் –  உம்பர்தருத்தே

3.எழுந்தருள வேண்டுதல் – திருப்புகழ் – சென்றே இடங்கள்

4.கோள்கள் ஒடுங்க – கந்தரலங்காரம் – நாள் என் செயும்

  1. திருப்புகழ் நெருப்பு – திருப்புகழ் – சினத்தவர் முடிக்கும்
  2. தரிசனப் பாடல் – கந்தரலங்காரம் – ஓலையும் தூதரும்
  3. வேலும் மயிலும் துணை – கந்தரலங்காரம்-விழிக்குத் துணை
  4. வேலின் ப்ரபாவம் கூறி பகைவரை வெல்ல – வேல் வகுப்பு பருத்த முலை ; ஸுரர்க்குமுநிவரர்க்கும்; தருக்கி நமன்; திரைக்கடலை உடைத்து ; கந்தரலங்காரம்- தேரணியிட்டு;

வேல்வாங்கு வகுப்பு – திடவிய நெஞ்சுடை; அடவி படும்ஜடை;

வடவை இடும்படி;

 

 

  1. பிரார்த்தனை பாக்களின் அடிகள்
  2. கொள்ளித் தலையில் எறும்பது போலக் குலையும்

    என்றன் உள்ளத் துயரை ஒழித்தருளாய்

  1. அஞ்சா நெஞ்சாக்கம் தரவல பெருமாளே
  2. ஆபத்தில் அஞ்சல் என்ற பெருமாளே
  3. இடர் சங்கைகள் கலங்க அருள்வாயே
  4. ஒருக்கால் முருகா பரமா குமரா உயிர்கா என ஓதருள் தாராய்
  5. நவர் வாட்டோமர சூலம் தரியாக் காதிய சூரும்

         தணியாச் சாகரம் ஏழும்      கிரி ஏழும்

        சருகாக் காய்கதிர் வேலும் பொருகாற் சேவலும் நீலம்

         தரிகூத்தாடிய மாவும்         தினைகாவல்

       துவர்வாய்க் கானவர் மானும் சுரநாட்டாள் ஒரு தேனும்

           துணையாத் தாழ்வற வாழும்     பெரியோனே!

             துணையாய்க் காவல் செய்வாய்!

 

7.வேலுமயிலும் நினைத்தவர் தந்துயர் தீர அருள்தரு கந்த!

   

  1. பதினால் உல கத்தினில் உற்றுறு பக்தர்கள்

    ஏது நினைத்ததும் மெத்த அளித்தருள்    இளையோனே

  1. மொழியும் அடியார்கள் கோடி குறைகருதி னாலும் வேறு

          முனிய அறியாத தேவர்               பெருமாளே

  1. வேண்டிய போதடியர் வேண்டிய போகமது

      வேண்ட வெறாதுதவு               பெருமாளே

  1. வேல் எடுத்த ஸமர்த்தை உரைப்பவர்

       ஏவருக்கும் மனத்தில் நினைப்பவை அருள்வோனே

  1. அடியவர் இச்சையில் எவைஎவை உற்றன

          அவைதரு வித்தருள்          பெருமாளே

**

 

  

  1. நவக்ரஹ சேஷ்டை நீங்க- கந்தரனுபூதி – சேயவன் புந்தி

          கந்தரலங்காரம் – மயில் துணை -குசைநெகிழா

           கந்தரலங்காரம் – சேவல் துணை -படைபட்ட

11.மனக்கவலை நீங்க – கந்தரனுபூதி -எந்தாயும்

  1. அச்சமற்ற வாழ்வுற – கந்தரலங்காரம் – சேந்தனைக்
  2. தாழ்வின்றி வாழ கந்தரலங்காரம் – சேந்தனை
  3. நாம விசேஷப் பலன் – கந்தரலங்காரம் – முடியாத் துயர
  4. திக்பந்தனம் – கந்தரலங்காரம் – தடக்கொற்ற

குறிப்பு: சலங்காணும், மடங்கல் நடுங்கும், வேலன் வாய்த்த திருப்புகழ்,கருப்புகழாம்,ஏகாந்த வீரம் போற்றி ஆகிய பாடல்கள் மட்டும் இங்கு மேலே குறிப்பிடப்படவில்லை.

 

 

4

இந்தத் திருப்புகழ் பாராயணக் குண்டு யுத்த காலத்துக்கு மட்டுமானது அல்ல; தினசரி வாழ்க்கை என்னும் யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் எந்தக் காலத்திற்கும் உகந்தது.

திருப்புகழைப் பாராயணம் செய்வோம்; இகபர சௌபாக்கியம் அடைவோம்.

*****

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: