Written by S.NAGARAJAN
Date: 22 NOVEMBER 2017
Time uploaded in London- 7-46 am
Post No. 4421
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.
சங்கிலிருந்து எழும் கலாநிதி மண்டலம் : பேரழகியின் வர்ணனை!
ச.நாகராஜன்
ஒரு பேரழகி. அவளை எப்படி வர்ணிப்பது.கவிஞர் ஒருவர் முயன்று பார்க்கிறார். அதன் விளைவாக அவர் நாவிலிருந்து உதிக்கிறது ஒரு பாடல்.
அது இது தான்:
உதயதி தடிச்சித்ரம் மித்ரம் ரதே: கமலத்வயி
குஸுமிதநவஸ்தம்பே ரம்பே விதாய தனோரத: I
தடிதி வலதி வ்யோம வ்யோமாஸ்ரயம் ச கிரித்வயம்
கிரிபரிசிரே கம்பு: கம்பௌ கலாநிதிமண்டலம் II
சூக்தி முக்தாவளி என்ற நூலில் காணப்படும் இந்தப் பாடல் ஹரிணி சந்தத்தில் அமைந்துள்ளது.
பாடலின் பொருள்:-
இதோ எழுகிறது ஒரு புதிய மின்னல் (கால்கள்), காதலின் தோழி, மேலும் இரு தாமரை (பாதங்கள்) மலரும் புதிய இரு வாழைத்தண்டுகளுக்குக் கீழே வைக்கப்பட்டுள்ளன (தொடைகள்), மின்னலைச் சுற்றி (கைகள்) வட்டமான ஆகாயம் உள்ளது (மெல்லிய இடை), இதைத் தாங்குகின்ற வானத்தில் இரு மலைகள் உள்ளன (கொங்கைகள் அல்லது மார்பகங்கள்), மேலும் மலைகளின் அருகேயே ஒரு சங்கும் (கழுத்து) அந்த சங்கிலிருந்து எழுகிறது வட்டமான சந்திரன். (அழகியின் முகம்)
இதை ஆங்கிலத்தில் அழகுறத் தருகிறார் திரு ஏ.ஏ.ராமநாதன் இப்படி:-
Here rises a novel lightning (legs), the friend of love, and two lotuses (feet), being placed below two plantain stems (thighs) that are fresh and flowering, and encircling is the flash of lightning (hands) round the sky (thins waist), supported by the sky are two hills (breasts) and a conch (neck) in the vicinity of the hills and the round orb of the moon (the face of the damsel) rises from the conch. (Translation by A.A.R)
இன்னொரு வர்ணனைப் பாடல்:
உத்க்ருஹா வோடோக்ரதனம் நதம்ரூர்
ஆச்சாத்ய வக்ஷ:ஸ்தலமஞ்சலேன I
உத்தாரயந்தி நிவிடம் நிசோலம்
மனோபவஸ்யாபி மனோ மினோதி II
வேணிதத்தரின் பத்யவேணி என்ற நூலில் வரும் பாடல் இது.
உபஜாதி சந்தத்தில் அமைந்துள்ள பாடல் இது. (இந்த்ரவ்ரஜம் மற்றும் உபேந்த்ரவஜ்ரம் இணைந்த சந்தம்)
இதன் பொருள்:-
அழகிய புருவத்தை உடைய அந்த அழகி, தனது மார்புக் கச்சை உயர்த்தி, தனது ஆடையின் நுனியால் மார்பகங்களை மூடிக் கொண்டு, தனது முகத்திரையைச் சற்றே உயர்த்தி, மனதிலே பிறந்த காதல் கடவுளின் மனதைக் கூடச் சலனப்படுத்துகிறாள்!
Holding high the knot of her bodice, the charming-browed one, having covered her bosom with the end of her garment, and raising her thick veil, she measures (agitates) the mind of even the mind-born (god) of love.
(Translation by A.A.R)
இப்படி ஆயிரக் கணக்கில் அழகிகள் பற்றிய வர்ணனைகளைக் கொண்ட அற்புதமான பாடல்கள் சம்ஸ்கிருதத்தில் உள்ளன.
தெய்வ மொழி சம்ஸ்கிருதம் என்பர் சிலர்.
காதல் மொழி சம்ஸ்கிருதம் என்பர் சிலர்.
இரண்டுமே சரி தான்!
பாடல்களைப் படியுங்கள். காதலையும் பக்தியையும் போற்றி கவிஞர்கள் பாடிய அழகை ரஸியுங்கள்!
***