Date: 7 DECEMBER 2017
Time uploaded in London- 6-23 am
WRITTEN BY S NAGARAJAN
Post No. 4469
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.
ஹிந்து வரலாற்று அதிசயம்
28வது வியாஸர்!
ச.நாகராஜன்
1
ரிக், யஜுர், சாம, அதர்வணம் என்று வேதத்தை நான்காகப் பகுத்தவர் வியாஸ்ர் என்பதை நாம் அறிகிறோம்.
வியாஸர் என்பது ஒரு பதவியின் பெயர்.
வேதத்தைப் பகுப்பவர் வியாஸர்.
கிருத யுகம், திரேதா யுகம், த்வாபர யுகம் ஆகிய மூன்று யுகங்களில் வேதம் ஒன்றாகவே இருக்கும்.
கலி யுகத்திலோ மனித ஆயுள் குறைவு. புத்தி சக்தி குறைவு. ஒன்றாக உள்ள வேதத்திலிருந்து ம்ந்திரம், பிரம்மாணம், சாமம் ஆகியவற்றைப் பிரித்தெடுக்க மனிதர்களுக்கு சக்தி இருக்காது.
ஆகவே பிரம்மாண்டமான புத்தி உடைய ஒருவர் (வியாஸோ விசால புத்தே) மனித குலத்திற்கு உதவி செய்வதர்காக இப்படி வேதங்களை எளிது படுத்தி வகைப் படுத்தித் தருகிறார்.
கலியுகத்தில் தர்மம் ஒற்றைக் காலில் நிற்கிறது.வேதோகிலோ தர்ம மூலம்.
தர்மத்தின் அடிப்படை வேதமே.
ஆகவே வேதத்தைப் பாதுகாத்தால் தர்மத்தைப் பாதுகாத்தவர்கள் ஆகிறோம்.
பாரத பூமிக்கு ஹிந்து ராஷட்ரம் என்று பெயர் சூட்ட வேண்டியது இயல்பான ஒன்று. ஆனால் இன்று இந்தியா என்கிறோம்.
செகுலரிஸ்டுகளுக்குப் பயந்தோ அல்லது பணிந்தோ!
ஹிந்து ராஷட்ரம் என்று சொல்ல வேண்டாமென்றால் தர்ம ராஷ்ட்ரம் என்று சொல்லலாம். தர்ம ராஷ்ட்ரம் என்றால் வேத ராஷ்ட்ரம் என்று பொருள்.
வேதம் உடையதிந்த நாடு என்றார் பாரதியார்.
அது தான் நமக்குப் பெருமை!
அது ஒன்றே தான் நமக்கு அடிப்படைப் பெருமை.
இதர நாடுகளுக்கு இல்லாத அஸ்திவாரம் நம்மிடம் தான் இருக்கிறது.
இதை யுகம் யுகமாகக் காப்பாற்றுவதற்கென்றே வேத வியாஸர் அவதரிக்கிறார்.
இப்போது 28வது கலியுகம் நடக்கிறது.
இதற்கு முன் நடந்த 27 சதுர்யுகங்களிலும் 27 வியாஸர்கள் இருந்திருக்கின்றனர்.
அருள் புரிந்திருக்கின்றனர்.
2
28 வேத வியாஸர்களின் பட்டியல் இதோ:
ஸ்வாயம்புவ மனு (த்வாபரத்தில் அவதரித்தார்.) அவரே முதல் வியாஸர்.
ப்ரஜாபதி இரண்டாவது வியாஸர்
உசநஸ் மூன்றாவது வியாஸர்
பிருஹஸ்பதி நான்காவது வியாஸர்
சூரியன் ஐந்தாவது வியாஸர்
ம்ருத்யு ஆறாவது வியாஸர்.
இந்திரன் ஏழாவது வியாஸர்.
வஸிஷ்டர் எட்டாவது வியாஸர்
ஸாரஸ்வதர் ஒன்பதாவது வியாஸர்
திரிதாமா பத்தாவது வியாஸர்
திரிவிருஷர் பதினொன்றாவது வியாஸர்
பரத்வாஜர் பன்னிரெண்டாவது வியாஸர்
அந்தரிக்ஷர் பதிமூன்றாவது வியாஸர்
தர்மர் பதிநான்காவது வியாஸர்
த்ரய்யாருணி பதினைன்ந்தாவது வியாஸர்
தனஞ்சயர் பதிறாவது வியாஸர்
மேதாதிதி பதினேழாவது வியாஸர்
விரதி பதினெட்டாவது வியாஸர்
அத்ரி பத்தொன்பாவது வியாஸர்
கௌதமர் இருபதாவது வியாஸர்
ஹர்யாத்மா இருபத்தொன்றாவது வியாஸர்
வாஜச்ரவஸ் இருபத்தியிரண்டாவது வியாஸர்
ஸோம ஆமுஷ்யாயணர் இருபத்திமூன்றாவது வியாஸர்
த்ரிணபந்து இருபத்திநான்காவது வியாஸர்
பார்க்கவர் இருபத்திஐந்தாவது வியாஸர்
சக்தி இருபத்தியாறாவது வியாஸர்
ஜாதுகர்ண்யர் இருபத்தியேழாவது வியாஸர்
இப்போதுள்ள கலியுகத்தில் இருபத்தெட்டாவது வியாஸராக நாராயணனே அம்சாவதரமாக அவதரித்துள்ளார்.
வேத வியாஸரின் மஹிமை பற்றி மஹாபாரதத்தில் காணலாம்.
அடுத்த வியாஸராக – இருபத்தொன்பதாவது சதுர்யுகத்தில் த்வாபர யுகத்தில் – வரப்போவது அஸ்வத்தாமா.
3
ஹிந்துக்களுக்கு வரலாறு பற்றி ஒன்றும் தெரியாது. வரலாறுத் தொகுப்பையே நாம் தான் கற்றுத் தந்திருக்கிறோம் என்று பல மேலை நாட்டு அறிஞர்கள் பெருமிதமாகக் கூறுவது வழக்கம்.அதை அப்படியே எழுதியுள்ளனர்.
ஆனால் 28 சதுர் யுக சரிதத்தையும் விளக்கியுள்ள ஒரே மதம் ஹிந்து மதம் தான்.
வேறு எந்த ஒரு மதமும், நாகரிகமும் இப்படி ஒரு காலக் கணக்கைத் துல்லியமாகத் தந்ததில்லை.
ஆகவே தான் காஸ்மாஸ் தொலைக்காட்சித் தொடர் தயாரித்த பிரபல விஞ்ஞானி கார்ல் சகன் உலக மதங்களையெல்லாம், உலக நாகரிகங்களையெல்லாம் முற்றிலுமாக ஆராய்ந்து விட்டு பிரபஞ்ச தோற்றத்தை அறிவியல் ரீதியிலாகக் கணக்கிட்டுச் சொல்லும் அதே கால அளவை ஹிந்து மதம் ஒன்று மட்டுமே தருகிறது என்று கூறி தன் தொடரின் முதல் காட்சியில் சிதம்பரம் நடராஜரைக் காட்டினார்.
அத்துடன் அவர் சிதம்பரத்திற்கு வருகை புரிந்து நடராஜரைத் தரிசித்தார்.
ஆக பிரபஞ்ச வரலாறையே தந்துள்ள ஹிந்து மதம், முகலாய, பிரிட்டிஷ் ஆதிக்கத்தினால் தன் இயல்புத் தன்மையில் ஒரு பங்கைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்தது உண்மை.
பழைய இயல்பான நிலைக்குத் திரும்ப நாம் ஓவொருவரும் முயற்சி எடுத்தால் பொற்காலம் தோன்றும்.
4
நண்பர் ஒருவர் என்னைச் சந்தித்த போது “ஒரே குழப்பமாக இருக்கிறது” என்றார்.
“என்ன விஷயம்”, என்றேன்.
“நம் மதத்தை எடுத்துக் கொண்டால் பல விவரங்கள் குழப்பமாக உள்ளன. இதோ பாருங்கள், சப்த ரிஷிகள் என்று இரண்டு பட்டியல் உள்ளன. இதில் எது உண்மை?” என்று அவர் கேட்டார்.
அதை வாங்கிப் பார்த்த நான், “இரண்டுமே உண்மை” என்றேன்.
“என்ன, இன்னும் அதிகமாகக் குழப்புகிறீர்கள்?” என்றார் அவர்.
“ஒரு குழப்பமும் இல்லை. பல லட்சம் ஆண்டுகள் சரித்திரத்தைக் கொண்டுள்ளோம் நாம். சப்தரிஷி பட்டியலைப் பார்க்கும் போது இது எந்த சதுர்யுகத்திற்கானது, எந்த மன்வந்தரத்திற்கானது என்று கேட்டால் விடை சுலபமாக வந்து விடும்.
27 மன்வந்தரம் கடந்தவர்கள் நாம். ஆக இந்த இரண்டு பட்டியலுமே உண்மை. வெவ்வேறு மன்வந்தரத்திற்கு உரிய சப்த ரிஷிகள் இவர்கள்” என்றேன்.
“அடடா, இது எனக்குத் தெரியாமல் போயிற்றே! இதைச் சொல்வதற்கு ஆள் இல்லையே” என்றார் அவர்.
5
புராண, இதிஹாஸம் மிகவும் பரந்தது. சுலபமாக அதைக் கற்றுக் கரை சேர முடியாது.
ஆகவே தான் சமீப காலம் வரை மண்டபங்களிலும் கோவில்களிலும் பிரவசனகர்த்தாக்கள், இதிலேயே ஊறி அனைத்தையும் அறிந்த நிபுணர்கள் – பல்வேறு விஷயங்களை மால நேரத்தில் கூறுவார்கள்.
ஆனால் இந்தக் காலத்தில்..
நாமே குழுவை அமைத்து இவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது.
படித்தும் தெரிந்து கொள்ளலாம் – தமிழ் அண்ட் வேதாஸ் டாட் காம் (www.tamilandvedas.com) கட்டுரைகளைப் படிக்கலாம்; பயன் அடையலாம்.
****
Raghavan Narayanasamy
/ December 7, 2017Thanks for enlightening us regularly you are also one of the Veda vyasas
category
Santhanam Nagarajan
/ December 7, 2017veda vyasar paaR kadal. ahtil karai pakkam irukkum neeril oru thuliyil thuli nan.
Veda Vyasa ia lika Parkadal. I am one of the little drpos.
thanks