திமிங்கிலம், புறச்சூழல் பாதுகாப்பு பற்றி கம்பன் தரும் அறிவியல் செய்தி! (Post No.4484)

திமிங்கிலம், புறச்சூழல் பாதுகாப்பு பற்றி  கம்பன் தரும் அறிவியல் செய்தி! (Post No.4484)

 

WRITTEN by London Swaminathan 

 

Date: 12 DECEMBER 2017 

 

Time uploaded in London-  7-43 am

 

 

Post No. 4484

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

புறச் சூழல் பாதுகாப்பு பற்றி வருணன் வாயிலாகவும் ராமனின் வாய் மொழி மூலமும் கம்பன் சொல்லும் செய்திகள் சிந்திக்க வைப்பவை.

 

யுத்த காண்டத்தில், ‘வருணனை வழிவிட வேண்டிய படல’த்தில், இந்தச் செய்திகள் வருகின்றன.கடலில் திமிங்கிலங்கள் அடிக்கடி கரை ஒதுங்கி தற்கொலை செய்துகொள்ளும் செய்திகள் பத்திரிக்கைகளில் வருகின்றன.இது பற்றிக் கம்பனும் பேசுகிறான்.

பூமிக்கடியிலிருந்து வரக்கூடிட்ய மின்காந்தலைகள் (magnetic waves) அல்லது பல நாட்டு நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து வரும் சிக்னல்கள் SONAR SIGNALS (சமிக்ஞை ஒலிகளே) திமிங்கிலங்களை வழிதவறச் செய்வதாகவும் அல்லது அவைகளைக் குழப்புவதாகவும் இந்த திமிங்கிலத் தற்கொலைகளுக்கு (Mass Suicide of Whales) விளக்கம் தரப்படுகிறது. தமிழ் நாட்டின் கடல் ஓரங்களிலும் இது நிகழ்வதுண்டு என்பது அவனது பாடல்களில் இருந்து தெரிகிறது.

 

ராமன் விட்ட அம்புகள்,மலை போன்ற உடல் உடைய பெரிய மீன்களைக் கரையில் வந்து விழச் செய்ததாக ஒரு பாடலில் கூறுகிறான். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அவன் கம்ப ராமாயணத்தை இயற்றினான். ஆனால் உவமை கூறும் விஷயங்களும், இது போன்ற நிகழ்வுகளும் உண்மையில் நடந்தால்தான் எழுத முடியும்; அவ்வாறு எழுதுவதை பாமர மக்களும் ரசிக்க முடியும்.

கம்பன் தனது பாடல்களில் ஜேம்ஸ், மேரி என்ற சொற்களைப் பயன்படுத்தமுடியாது நியூயார்க்கில் உள்ள வானளாவிய கட்டிடங்களை உவமை சொல்ல முடியாது. அந்த காலத்தில் உள்ள விஷயங்களைத்தான் சொல்ல முடியும். அவ்வாறே அவன்,சம காலத்திய நிகழ்வுகளையும், உவமைகளையும் நம் முன் வைக்கிறான்.

 

முதலில் கடற்கரையில் திமிங்கிலம் ஒதுங்கிய செய்திகளைக் கண்போம்:

 

பேருடைக் கிரி எனப் பெருத்த மீன்களும்

ஓரிடத்து உயிர்தரித்து ஒதுங்ககிற்றில

நீரிடைப் புகும் அதின் நெருப்பு நன்று எனாப்

பாரிடைக் குதித்தன  பதைக்கும் மெய்யன்

 

பொருள்:

பெரிய மலை போலப் பெருத்த மீன்களும், ஓரிடத்தில் உயிரைத் தாங்கி நிற்க முடியாமல் தீயில் வேகும் இந்தக் கடல் நீரைவிட நல்லதாகும் என்று தரையில் குதித்துத் துடிக்கும் உடலை உடையவை ஆகின.

 

இன்னொரு பாடலில் ராமனை சேது எனப்படும் பாலம் கட்டச் சொல்கிறான் வருணன்; கடலைக் குடித்து வற்றச் செய்வது காலம் பிடிக்கக்கூடிய செயல் என்றும் சக்தியை விரயம் செய்யும் செயல் என்றும் சொல்லிவிட்டு  அப்படிக் கடலை வற்றச் செய்தால் எவ்வளவு உயினங்கள் அழிந்து போகும் என்றும் நினைவிவு படுத்துகின்றான். ஆக, கடல் வாழ் உயிரினங்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற பெரும் உணர்வும்  அக்காலத்தில் இருந்தது.

கல்லென வலித்து நிற்பின் கணக்கிலா உயிர்கள் எல்லாம்

ஒல்லையின் உலந்து வீயும் இட்டது ஒன்று ஒழுகாவண்ணம்

எல்லை இல் காலம் எல்லாம் ஏந்துவென் இனிந்தின் எந்தாய்

செல்லுதி சேது ஏன்று ஒன்று இயற்றி என் சிரத்தின் மேலாய்

 

பொருள்:

 

என் தந்தை போன்றவனே! வற்றாமல் நீர் இறுகிக்   கல்லைப் போல ஆனால் உயிரினங்கள் மாண்டுவிடும் ஆகையால் என் முதுகின் மீது சேது என்னும் அணையைக் கட்டி அதன் மீது செல்வாயாக. இதனால் நீண்ட காலம் நான் நிலைத்து நிற்பேன்.

 

 

இதைவிட ராமன் சொல்லும் காரணம் இன்னும் நன்றாக இருக்கிறது

நன்று இது புரிதும் அன்றே நளிர்கடல் பெருமை நம்மால்

இன்று இது தீரும் என்னில் எளிவரும் பூதம் எல்லாம்

குன்று கொண்டு அடுக்கிச் சேது குயிற்றுதிர் என்று கூறிச்

சென்றனன் இருக்கை நோக்கி வருணனும் அருளிச் சென்றான்

–யுத்த காண்டம், கம்பராமாயணம்

பொருள்:

இராமன், ‘வருணன் கூறும் இது நல்லது, இதையே செய்வோம்’ என்றான். மேலும் பெரிய ஆழம் உடைய கடலின் பெருமை என்னால் நீக்கப்பட்டால் மற்ற நான்கு பூதங்களான நிலம், தீ, காற்று, ஆகாயம் ஆகியனவும் பெருமை நீங்கி எளிமைப் பட்டுவிடும். ஆகையால்  மலைப் பாறைகளை அடுக்கி பாலம் கட்டும் பணியை துவக்குங்கள் என்று சொல்லிவிட்டு தனது இருப்பிடத்துக்குச் சென்றான். இராமனின் அருளுடன் வருணனும் அவனது இருப்பிடத்திற்குச் சென்றான்.

பஞ்ச பூதங்களில் ஒன்றை நான் அவமானப்படுத்தினால், பின்னர் மற்ற நான்கு பூதங்களும் கெட்டுப்போக, பெருமை இழக்க நேரிடும் என்ற இராமனின் வாதம் பொருளுடைத்து; நாள் தோறும்கடலில் சேரும் குப்பைகள், அசுத்தங்கள் பற்றி நாளேடுகளில் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. பெண்கள், குழந்தைகள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் ஜிகினா பொட்டு முதலியன கடல் மீன்கள் வயிற்றில் சேர்ந்து அவைகளுக்குச் சொல்லொணாத் துயரம் தரும் செய்திகளும் வந்த வண்ணம் இருக்கின்றன. நமது வீட்டு சாக்கடைகளில் தூக்கிப் போடும் சிறிய பிளாஸ்டிக் பொட்டுகளும் பாட்டரிகளும் கடல் வரை சென்று உலகைப் பாதிக்கின்றன; கடலை விஷமாக்குகின்றன.

 

நானே இன்று கடலை வற்றச் செய்து அவமானப் படுத்தினால், சிறுமைப் படுத்தினால், அது கெட்ட முன்னுதாரணமாகி மற்ற நான்கு பூதங்களையும் பாதிக்கும் எனும் ராமனின் வாதம் கம்பன் கால அறிவியல் கூற்று என்று கண்டு வியப்படைகிறோம்.

 

இதைத் தனித்துப் பார்க்காமல், முந்தைய பாட்டுகளில் கம்பன் சொன்ன கடலில் நடக்கும் சுறாமீன் சண்டைகள் (Shark Fights), திமிங்கிலங்களைத் தின்னும் திமிங்கிலங்கள் (Killer Whales) பற்றிய விஷயங்களையும் இணைத்துப் பார்த்தால் சோழர்கால கடல்  இயல் விஞ்ஞா ம் பற்றி அறிய முடியும்; Killer Whale கில்லர் வேல் என்று அழைக்கப்படும் திமிங்கிலங்கள் மற்ற சிறியவகை திமிங்கிலம், டால்பீன் (Dolphins), சுறாமீன்கள் ஆகியவற்றைக் கொல்லும் காட்சிகளை இன்று நாம் இயற்கை பற்றிய டெலிவிஷன் (T V Documentaries on Nature)  நிகழ்ச்சிகளில் காண முடிகிறது; இதைக் கம்பனும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பாட்டில் கூறுவதால் கடலோர மக்கள் சொல்லும்  அன்றாடக்கதைகளில் இவை இடம்பெற்றதை நாம் அறிகிறோம்.

இதற்கெல்லாம் கம்பனுக்கு 1000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த காளிதாசன் காவியத்திலேயே சான்று இருக்கிறது. அவன் திமிங்கிலங்கள் மூச்சு விடுகையில் தண்ணீர் ஊற்று போல மேலே பீய்ச்சி அடிப்பதையே குறிப்பிட்டுப் பாடுகிறான்.

 

கில்லர் வேல் எனப்படும் திமிங்கிலங்கள் பற்றிய பாடலுடன் கட்டுரையை முடிப்போம்:

 

நிமிர்ந்த செஞ்சரம் நிறத்தொறும்படுதலும் நெய்த்தோர்

உமிழ்ந்து உலந்தன மரங்கள் உலப்பு இல உருவத்

துமிந்த துண்டமும் பலபடத் துரந்தன தொடர்ந்து

திமிங்கிலங்களும் திமிங்கிலங்களும் சிதறி

பொருள்:

செஞ்சரமான அம்புகள் பட்டு சுறாமீன்கள் குருதி கக்கி இறந்தன. இராமன் தொடுத்த அம்புகள் தொடர்ந்து ஊடுருவியதால் திமிங்கிலங்களும் திமிங்கிலங்களும் பல துண்டுகளாகச் சிதறி விழுந்தன.

TAGS:– திமிங்கிலம், திமிங்கிலங்கள், கடல், புறச்சூழல், கரை ஒதுங்கல், கம்பன் அறிவியல்

 

–சுபம்–

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: