Image of Shah jahan
Written by London Swaminathan
Date: 24 DECEMBER 2017
Time uploaded in London- 12-42
Post No. 4540
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks
மொகலாயர் வரலாறு கொலைகார வரலாறு; அப்பாவை மகன் கொல்வது பரம்பரையாக நடந்தது; சஹோதர்களை சஹோதரர்கள் தீர்த்துக்கட்டுவதும் தொடர்ந்து நடந்தது.
நிக்கலோ மனூச்சி (Nicolao Manucci 1638- 1717) என்பவர் இதாலிய பயணி; அவர் இந்தியாவுக்கு வந்து மொகலாய மன்னர்களிடம் வேலை பார்த்தார். தாரா சிகோஹ், ஷா ஆலம், ராஜா ஜெய் சிங், கிராட் சிங் ஆக்யோர் சபைகளில் வேலை பார்த்தார். அவர் நிறைய சுவையான — சோகமான- விஷயங்களை எழுதிவைத்துள்ளார். இதோ ஒரு சோகக் கதை.
Image of Aurangazeb
ஷாஜஹானின் மகன் தாரா சிகோஹ்; அவருடைய தம்பி மதவெறி பிடித்த அவுரங்கசீப்.
மொகலாய மன்னன் ஷாஜஹானுக்கு பல புதல்வர், புதல்வியர் உண்டு. அவருக்கு அடுத்தாற்போல அரசு கட்டிலைப் பிடிப்பது யார் என்பதில் அவருடைய புதல்வர் தாரா ஷிகோஹுக்கும் அவுரங்கசீப்புக்கும் இடையே பெரிய போட்டி நடந்தது போட்டி அல்ல; யுத்தமே நடந்தது. ஷாஜஹானைச் சிறைப்பிடித்து ஆக்ரா சிறையில் வைத்தனர். இங்கிருந்தவாறே தாஜ் மஹலைப் பார்த்துக்கொண்டு செத்துப்போ என்று விட்டனர்.
தாரா சுகோஹ், தோற்கடிக்கப்பட்ட செய்தியை ஒரு தூதன் அவுரங்கசீப்பிடம் தெரிவித்தான். ஆனால் தோற்றுப்போன தாரா ஓடிவிட்டதாகவும் சொன்னான். உடனே அவுரங்கசீப் ஒரு சபதம் செய்தான். அண்ணனைச் சிறைப்பிடித்து தலையை வெட்டி அவர்களுடைய தந்தையான ஷாஜஹானுக்கு அனுப்பிவைப்பேன் என்று வீர சபதம் எடுத்தான். இதை இதாலிய பயணி மனூச்சி அப்படியே எழுதி வைத்துள்ளான்.
அவுரங்க சீப்பின் துஷ்ட ஆசையும் நிறைவேறியது. தாராவின் தலையை அவன் முன்னால் கொண்டு வந்தனர். ஒரு கத்தியை எடுத்து மூன்று வெட்டு வெட்டினான் . இதை கண் முன் காட்டாமல் தூக்கிக்கொண்டு போங்கள் என்று கட்டளையிட்டான்.
அவுரங்கசீப்பின் சஹோதரி (தாராவுக்கும் சஹோதரிதான்) ரோஷநாரா பேஹம் இந்தத் தலையை நமது தந்தை ஷாஜஹானிடம் கொண்டு காட்ட வேண்டும் என்று அவுரங்கசீப்பைத் தூண்டிவிட்டாள். அவள் அன்று மாலையே ஆக்ரா கோட்டையில் ஒரு விருந்தும் ஏற்பாடு செய்தாள்; தாரவைக் கொன்றதற்காக.
தலை வந்தபோது சிறைச் சாலையில் ஷாஜஹான் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தான். தாரவின் தலையைப் பார்த்தவுடன் ‘ஓ’ என்று கதறி ‘டின்னர் டேபிள்’ மீதே மயக்கம் போட்டு விழுந்தான்.
அவுரங்க சீப் அந்த தலையை மூன்றுமுறை வெட்டியபோது அந்தத் தலை ஹா, ஹா, ஹா என்று சிரித்ததாகவும் சொல்லுவர்.
ஆக்ராவில் தாஜ்மஹல் உள்ளேயுள்ள கல்லறையில் அந்தத் தலையைப் புதைக்குமாறு அவுரங்கசீப் கட்டளை இட்டதாக மனூச்சி எழுதியுள்ளார்.
அதே காலத்தில் இந்தியாவுக்கு வந்த பெர்னியர் என்ற மேல்நாட்டு யாத்ரீகரும் இதே சம்பவம் பற்றி எழுதிவைத்துள்ளார்.
தாராவின் மரண தண்டனையை நிறைவேற்றிய அவுரங்க சீப்பின் ஆட்கள், அவன் தலையை அவுரங்க சீப்பிடம் கொண்டுபோனபொது அதை ஹுஆமாயூன் கல்லறையில் புதைக்கச் சொன்னானாம்.
தாராவின் புகழைப் பாடும் பல பாடல்களை மக்கள் நாட்டுப் புறக் கதைப் பாடலாக பாடியதாகவும் அதைத் தடுக்க அவுரங்கசீப் முயன்றும் முடியவில்லை என்றும் அக்கால வரலாற்று ஆசிரியர்கள் எழுதி வைத்துள்ளனர்.
தாராவின் தலையை ஒரு அழகான பெட்டியில் வைத்து உங்கள் மகன் உங்களுக்கு அனுப்பிய பரிசு என்று படைவீரர்களிடம் சொல்லச் சொன்னானாம். அவர்கள் அப்படிச் சொன்னபோது ‘அட, என் மகன் என்னை ஞாபகமாவது வைத்துக் கொண்டிருக்கிறானே என்று சொல்லிக் கொண்டு பெட்டியைத் திறந்தானாம். தாராவின் தலை ரத்தவெள்ளத்தில் இருந்ததைக் கண்டு மூர்ச்சை அடைந்தானாம்.
தாராவின் தலையை சீவுவதற்கு முன்னர் அவனை விலங்கு மாட்டி யானை மீது வைத்து ஊர்வலமும் விட்டானாம் அவுரங்கசீப்.
தாராவின் மரணம் இந்துக்களுக்கு ஒரு பெரிய இழப்பு. அவன் ஏழாவது சீக்கிய குருவின் நண்பன். இந்து மத உபநிஷத்துகளை பாரசீக மொழியில் மொழி பெயர்த்தவன்
–சுபம்–