Date: 30 DECEMBER 2017
Time uploaded in London- 5-11 am
Compiled by S NAGARAJAN
Post No. 4562
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.
பாரதி போற்றி ஆயிரம் – 20
பாடல்கள் 126 முதல் 131
கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்
தொகுப்பு : ச.நாகராஜன்
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் பாடல்கள்
பாரதி மண்டபம்
தேவருமே இங்குவந்து செந்தமிழைக் கற்றினிய பாவலராய் வாழமனம் பற்றுவரே – பூவுலகில்
வானுயரும் பாரதியார் மண்டபத்தை எட்டப்பன்
மாநகரில் கண்டு மகிழ்ந்து
வேறு
பாரதத்தாய் செய்தவப் பயனாய் வந்த
பாவலன் சுப்பிரமணிய பாரதிக்குச்
சீருயரும் எட்டய புரத்திற் கண்ட
திருக்கயிலை யனையமணி மண்டபத்தைப்
பேருவகை தருசர்வ ஜித்தில் கன்னி
பிறந்தஇரு பானேழில் திறந்து வைத்தான்,
தாரணியில் வங்கவள நாட்டை யாளும்
சக்ரவர்த்தி ராஜகோ பால மாலே
இலங்கைப் பாரதி சங்கம்
சீரியநல் லறப்பணிகள் பலவும் செய்து
செந்தமிழை வளம்பெருகத் தினமும் பேணி
வீரசுதந் திரங்காத்துக் காந்தி யண்ணல்
விதித்திடும்மெய் யன்புநெறி கடைப்பிடித்து,
தாரணியில் புகழோங்கும் தில்லைக் கூத்தன்
தண்ணருளால் அழகியதென் இலங்கைத் தீவில்
பாரதியின் பெயர் போற்றும் இளைஞர் சங்கம்
பல்லாண்டு பல்லாண்டு வாழ்க மாதோ!
பாரதி தமிழ்ச் சங்க மலர்
அப்பாலுக் கப்பால்நின் றாளும் பெருமாளே
ஒப்பாரு மில்லா ஒருவனே – இப்பாரில்
பொங்கு புகழ் பாரதிபேர் போற்றும் இனியதமிழ்ச்
சங்கமலர் வாழவரம் தா
வங்க மகளின் திருமுகமாய்
வாய்த்த காளி கட்டத்தில்
பொங்கு புகழ்சேர் பாரதிபேர்
போற்றி வளரும் தமிழ்ச்சங்கம்
தங்கும் அன்பால் தந்தமலர்
தரணிமீது வாடாமல்
எங்கும் அறிவின் மணம்வீ சி
இனிது வாழ்க வாழ்கவே
சீருயர் காளிகட்டத் திருநகரில் வளரும்
பாரதி தமிழ்ச்சங்கப் பைங்கொடி பூத்தமலர்
சூரிய சந்திரர்கள் தோன்றிடு காலமெலா
வாரிது சூழுலகில் வாழ்கவே
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை: கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே வெளியாகியுள்ளது.
குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம்.
****