சாணக்கிய நீதியில் பாம்பு!!! பரமஹம்சர் சொன்ன பாம்பு கதை (Post No.4581)  

சாணக்கிய நீதியில் பாம்பு!!! பரமஹம்சர் சொன்ன பாம்பு கதை (Post No.4581)

 

Written by London Swaminathan 

 

Date: 4 JANUARY 2018

 

Time uploaded in London- 8-16 am

 

 

 

Post No. 4581

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

தமிழ் இலக்கியத்தில் பாம்பு, மலைப் பாம்பு பற்றி வரும்  விஷயங்களையும், கம்பனும் காளி தாசனும் பயன்படுத்தும் பாம்பு உவமைகளையும் முந்தைய ஆராய்ச்சிக் கட்டுரைகளில் தந்தேன். சாணக்கிய நீதியில் பாம்பு பற்றி வரும் சுவையான விஷயங்ளைக் காண்போம்

 

நிர்விஷேணாபி ஸர்பேன கர்தவ்யா மஹதீ பணாஹா

விஷமஸ்து ந சாப்யஸ்து பணாடோபோ பயங்கரஹ

 

–சாணக்கிய நீதி, அத்தியாயம் 9, ஸ்லோகம் 10

விஷமே இல்லாத ஒரு பாம்பும் கூட அதன் தலையைத் தூக்கி படம் விரித்தாட வேண்டும் (படம் காட்ட வேண்டும்); விஷம் இருக்கிறதோ இல்லையோ பாம்பு படம் விரித்தாடுவது பயத்தை உண்டாக்கும்.

 

சாணக்கியனின் அருமையான போதனை இது. நல்லோர் எல்லோரும் வல்லவர்களாக இருக்க வேண்டும்; பலம் இல்லாதவர்கள் கூட பலம் இருப்பது போல நடித்தால்தான் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்

 

ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன பாம்பு கதை

 

ராமகிருஷ்ண பரமஹம்ஸர் இதை அழகான ஒரு கதையாகக் கூறுகிறார். ஒரு ஊரின் ஒதுக்குப் புறத்தில் ஒரு பாம்பு வசித்து வந்தது. மிகவும் கொடிய பாம்பு; யார் வந்தாலும் கடித்து விஷத்தைப் பாய்ச்சிவிடும்; அவர்கள கதி ‘சகதி’தான். ஒருமுறை அந்தப் பக்கமாக ஒரு சாது சந்யாஸி வந்தார். அவரையும் பாம்பு துரத்தியது ஆனால் அருகில் வந்தவுடன் அந்த யோகியின் தவ வலிமையால் அது சாதுவாக நின்றது என்னைக் கடிக்க வேண்டுமா? கடி என்றார். ஆனால் அது பதிலே சொல்லவில்லை.

 

 

உடனே அந்த ஸாது சந்யாஸியும் அதன் மேல் கருணை கொண்டு நல்லுபதேசம் அளித்தார். “ பாம்பே! இனிமேல் யாரையும் கடிக்காதே- என்றார் அதுவும் தலையையசைத்து சம்மதம் சொன்னது.

 

நாளடைவில் இதன் மென்யை மக்கள் தவறாகப் புரிந்து கொண்டனர். இது கிழட்டுப் பாம்பாகி விட்டது; விஷம் எல்லாம் தீரந்து போய்விட்டது என்று அதன் மீது கற்களை வீசினர். அப்போதும் அது ஸாதுவாக இருப்பதை அறிந்து அதன் வாலைப் பிடித்து தர தர என்று இழுத்தனர். அதற்கு உடம் முழுதும் காயம் ஏற்பட்டது.

 

சிறிது காலத்துக்குப் பின்னர் அதே ஸந்யாஸி அந்த வழியாகப் போக நேரிட்டது. பாம்பின் பரிதாப நிலையைக் கண்டார்; குசலம் விசாரித்தார்

 

 

பாம்பு தனக்கு ஏற்பட்ட அவல நிலையைச் சொல்லி, அவருடைய உபதேசத்தைப் பின்பற்றியதால் இந்தக் கதி என்றது.

 

 

ஸந்யாஸி சொன்னார்: “பாம்பே! நான் உன்னைக் கடிக்காதே என்று தானே சொன்னேன்; சீறி பயமுறுத்தக் கூடாது என்று சொல்லவில்லையே!”

இதைச் சொன்ன பரமஹம்ஸர் மேலும் சொல்லுவார்:

பலரும் நீதி வாக்கியங்களை, உபதேசங்களைப் புரிந்து கொள்வதில்லை; அல்லது அரைகுறையாகப் புரிந்து கொள்கி றார்கள். இந்த உலகத்தில் வாழும் வரை மற்றவர்கள் உன்னை மரியாதையாக நடத்தும்படி பார்த்துக்கொள்; அவர்கள் உன்னைக் கண்டு அஞ்ச வேண்டும்; மற்றவர்களைத் துன்புறுத்தாதே; மற்றவர்களைத் துன்புறுத்தவும் அனுமதியாதே.

 

இது நல்ல புத்திமதி. ஸாதுவான பள்ளிக் குழந்தைகளுக்குச் சொல்லித தர வேண்டிய அறிவுரை; பலரும் பள்ளி, கல்லூரிகளில்  கஷ்டப்படுவதைக் கேட்கிறோம்.

 

 

பாதகம் செய்பவரைக் கண்டால்—நாம்
பயம் கொள்ளல் ஆகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா – அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா

என்று பாரதி சொன்னதும் அதுவே

 

XXXX

பரஸ்பரஸ்ய மர்மாணி யே பாஷந்தே நராதமாஹா

த ஏவ விலயம் யாந்தி வல்மீகோதரஸர்பவத்

 

–சாணக்கிய நீதி, அத்தியாயம் 9, ஸ்லோகம் 2

 

 

ஒருவருடைய ரஹஸ்யங்களை மற்றொருவனுக்குச் சொல்லுபவன் , பாம்புப் புற்றிலுள்ள பாம்பு போல அழிவான்

 

XXXX

 

 

துர்ஜனஸ்ய ச ஸர்பஸ்ய வரம் ஸர்போ ந துர்ஜனஹ

ஸர்போ தசதி காலேன துர்ஜனஸ்து பதே பதே

–சாணக்கிய நீதி, அத்தியாயம் 3, ஸ்லோகம் 4

 

பொருள்

 

கெட்டவர்களையும் பாம்புகளையும் ஒப்பிடுங்கால், பாம்பு நல்லது ஆகிவிடும்; ஏனெனில் பாம்பு எப்போதாவது நம்மைக் கடிக்கிறது; கெட்டவர்களோ ஒவ்வொரு அடிக்கும் ஒரு முறை நம்மைக் கடிப்பார்கள்; துன்புறுத்துவார்கள்.

 

XXXX

 

 

சாணக்கியன் சொன்ன பாம்பும், கெட்டவர்களும் என்ற உவமை தமி ழ் இலக்கியத்திலும் உளது. எனது முந்தைய ஆய்வுக் கட்டுரைகளில் காண்க.

 

பாம்பு மந்திரம்: அதர்வண வேதமும் …

https://tamilandvedas.com/…/பாம்பு-மந்திரம்-அதர…

 

18 Oct 2016 – பாம்பு மந்திரம்: அதர்வண வேதமும், கம்பனும் காளிதாசனும் (Post No.3264). snake-nandhu-fb. Research Article by London Swaminathan. Date: 18 October 2016. Time uploaded in London: 14-59. Post No.3264. Pictures are taken from various sources; thanks. (Picture is used only for representational purpose; no connection with the current article.) Contact swami_48@yahoo.com. snakes-banded-egyptian-cobra.

 

பாம்பு | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/பாம்பு/

 

Written by London Swaminathan. Date: 22 October 2017. Time uploaded in London- 6-59 am. Post No. 4325. Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. தேவாரத்தைப் பக்தியோடு படிப்பது ஒருவிதம்; ஓதுவாரின் இனிய குரலில் கோவில் பிரகாரங்களில் கேட்டு ரசிப்பது மற்றொரு விதம்; இலக்கிய …

 

பாம்பு தலையில் பூமி! கம்பன் …

https://tamilandvedas.com/…/பாம்பு-தலையில்-ப…

 

7 Nov 2016 – இதில் நமக்கு வேண்டியது , பல்தலைப் பாந்தள் ஏந்திய மொய்நிலம், அதாவது பல தலைகளையுடையபாம்பின் தலையிலுள்ள பூமி! இன்னொரு பாடலில் … அரசனை சூரியன், வாயு பகவான் ஆகியோருடன் ஒப்பிடுவதும் தமிழ் சம்ஸ்கிருத இலக்கியத்தில் உள்ளது. Atlas holding the earth in Greek …

 

மலைப் பாம்பு | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/மலைப்-பாம்பு/

 

கட்டுரை எண்:- 892 தேதி:– 7 மார்ச் 2014. சங்க இலக்கியத்தில்மலைப் பாம்புகளின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்த தமிழ்ப் புலவர்கள், அவைகள் யானைகளை விழுங்கியது பற்றிப் பாடி வைத்திருக்கின்றனர். யானையை மலைப் பாம்புவிழுங்க முடியுமா? இதோ முதலில் சில உண்மைச் ………………..

 

–subham–

 

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: