Date: 16 JANUARY 2018
Time uploaded in London- 5-45 am
Compiled by S NAGARAJAN
Post No. 4621
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.
பாடல்கள் 157 முதல் 159
கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்
தொகுப்பு : ச.நாகராஜன்
பாரதிதாசன் பாடல்கள்
சமத்துவ உள்ளம்
யானும் கோசும் பேசியிருந்தோம்
என்றார் பாரதியார் என்னிடத்தில்
வெளியிற் சென்று வீடு வந்தவர்
மேலுடை கழற்றவும் இல்லை, மேலும்
ஐயர் கண்களில் அழகு குறைந்ததால்
அங்கு நடந்ததைக் கேட்டேன் ஐயரை,
எல்லாரும் சமமா இல்லையா என்றார்
என்ன நடந்த தென்றேன். ஐயர்
ஒன்றுமில்லை உட்கார் என்றார்
உட்கார்ந்திட்டோம் ஐயரும் நானும்
யானும் கோசும் பேசியிருக்கையில்
எவனோ கோசின் காலில் விழுந்தான்,
“நீரும் இவ்விதம் ஊரார் வணங்கச்
சீரும் சிறப்பும் தேடலாமே”
என்று சொன்னார் கோசு என்னிடத்தில்
மரியாதை எனல் உண்டு
பெரியார் சிறியார் இல்லை என்றாரே!
***
குறிப்பு : இங்கு கவிஞர் பாரதிதாசன் கோசு என்று குறிப்பிடுவது அரவிந்த கோஷ் என்ற பெயருடைய மஹரிஷி அரவிந்தரை!
கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே வெளியாகியுள்ளது.
குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம்.
***