வள்ளுவனும் கண்ணனும் அப்பரும் சொன்ன எட்டாம் நம்பர்! (Post No.4672)

WRITTEN by London Swaminathan 

 

Date: 28 JANUARY 2018

 

Time uploaded in London – 7-17 am

 

Post No. 4672

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU
(என் வாசகர்கள் தமிழர்கள்; அதாவது நல்லவர்கள்; எல்லோரும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணுவர். ஆகையால் என் எழுத்துக்களைத் திருட மாட்டார்கள். எழுதியவர் பெயருடன் பகிர்வார்கள்; பிளாக் பெயரை நீக்க மாட்டார்கள்)

 

 

எட்டு என்ற எண், ஆன்மீக உலகில் சிறப்படைந்து காணப்படுகிறது. வள்ளுவன் முதல் பல தத்துவ ஞானிகள் இதைப் பயன்படுத்துகின்றனர். ஏன்?

 

பிறந்த தேதி எட்டாம் எண் உடையவர்கள் மிகவும் கஷ்டப் படுவார்கள் அல்லது ஆன்மீகத்தில் சிறந்து நிற்பார்கள். ஏனெனில் இது தன்னம்பிக்கை (Self Confidence), நிலைத்த (Stability) தன்மையின் சின்னம். மேலும் சனைச்சரனுக்கு (சனிக் கிரஹம்) உரிய எண்.

கடவுள் வாழ்த்து என்னும் அதிகாரத்தில் வள்ளுவன் செப்புவான்,

கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை   (9)

 

பொருள் என்ன?

 

ஒருவனுக்கு ஐந்து புலன்கள் இருந்தாலும் அவை அதனதன் வேலையைச் செய்யாவிடில் பயன் இல்லை. அது போல தலை என்னும் உறுப்பு எவ்வளவு சிறந்து இருந்தும், எட்டு வகையான குணங்களை உடைய இறைவனின் திருப்பாதங்களில் பணிந்து வணங்கவில்லை என்றால் பயன் இல்லை.

 

இதில் வள்ளுவன், இறைவனுக்கு எட்டு குணங்கள் இருப்பதாக இயம்புவான். இது சைவ திருமுறைகளில் சிவ பெருமானுக்குச் சூட்டப்படும் அடைமொழி. அப்பர், சுந்தரர்  தேவாரத்திலும் காணலாம்.

 

 

இதற்குத் திருக்குறள் உரைகளில் காணப்படும் விளக்கம் பின்வருமாறு:

 

எட்டு குணங்கள் யாவை?

தன் வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருள் உடைமை, முடிவில்லாத ஆற்றல் உடைமை, வரம்பில்லாத இன்பம் உடைமை என்று சைவாகமத்துக் கூறப்பட்டது. ஸம்ஸ்க்ருதத்தில் இவைகளை சுதந்தரத்துவம், விசுத்த தேகம், நிராமயான்மா, சர்வக்ஞத்துவம், அநாதிபேதம், அநுபதசக்தி, அநந்தசக்தி, திருப்தி என்று கூறுவர்.

 

இன்னொரு விளக்கம் அஷ்டமா சித்திகள் என்றும் கூறும்; அவை அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசிதை, வசிதை என்னும் எட்டுவகைச் சித்திகள். இதை கி.வா.ஜகந்நாதன் எழுதிய திருக்குறள் ஆய்வுரையில் காணலாம்.

 

பரிதியார் உரையில் கூறுவதாவது: எட்டு குணங்கள் உடைய சிவனின்

சிவந்த தாளை வணங்காத் தலை, சித்திரத்தில் எழுதிய மரப்பாவைக்கு நிகராம். எட்டுக் குணமாவன: அநந்த ஞானம்,  அநந்த வீரியம், அநந்த குணம், அநந்த தரிசனம், நாமம் இன்மை, கோத்திரம் இன்மை, அவா இன்மை, அழியா இயல்பு என்பன. சிலப்பதிகாரத்தில் (நாடு காண் காதை) சமண நாமாவளியில் எண்குணங்கள் யாவை என்று அரும்பதவுரை ஆசிரியர் கூறியது இது.

 

 

சிலப்பதிகாரத்தில், பண்ணவன் எண்குணன் (நாடு காண் காதை)

என்று இளங்கோ அடிகளும் பகர்வதை சமணர் சொல்லும் எட்டு குணங்கள் என்பர் சிலர்.

 

அப்பர் தேவாரத்தில் பல இடங்களில் சிவ பெருமானை எட்டு குணம் உடையவர் என்பார்:

எட்டு கொலாமவர் ஈறில் பெருங்குணம்

குணங்கள்தோள் எட்டு மூர்த்தி

கலை ஞானிகள் காதல் எண் குணவன்காண்

எட்டு வான்குணத் தீசனெம்மான்

 

(அப்பர் விடந்தீர்த்த.8, வன்னியூர் 7, தென்குரங்கு 4, இடைமருது 4) பாடல்களில் இவற்றைக் காணலாம்.

 

திருவள்ளுவருக்கு உருவ வழிபாடு உடம்பாடு என்பது இதனால் புலப்படும் என்றும் உரைகாரர்கள் புகல்வர்.

புத்தர் பெருமான்:–

 

புத்தர் பெருமான், இறை வழிபாடு பற்றி யாதும் செப்பாமல் எட்டு வகைக் குணங்கள் இருந்தால் போதும் என்று செப்பிச் சென்றார்.

 

அவையாவன:

நல்ல எண்ணம், நல்ல நம்பிக்கை, நல்ல பேச்சு, நல்ல செயல்,

நல்ல வாழ்க்கை, நல்ல முயற்சிநல்ல சிந்தனைநல்ல நோக்கம்

 

 

சீன தத்துவ ஞானி கன்பூசியஸ், ஜப்பானிய சாமுராய் வீரகள் ஆகியோரும் எட்டு குணங்கள் பற்றி விதந்தோதுகின்றனர்.

 

சீன தத்துவ ஞானி கன்பூசியஸ்:–

 

அன்புடைமை, அறம், மரியாதை, ஞானம், உறவினரிடத்தில் நம்பிக்கையைக் காப்பாற்றுதல், விசுவாசம், பெற்றோரிடத்தில் அன்பு பாராட்டல், பெரியோர்களை மதித்தல்

 

ஏற்த் தாழ இதே கொள்கைகளை சில மாறுதல்ளுடன் ஜப்பானிய சாமுராய் வீரர்களும் ஏற்றனர்.

 

கண்ணன் செப்பிய எட்டு:–

இவர்கள் எல்லோருக்கும் முன்னதாக கிருஷ்ண பரமாத்மா, பகவத் கீதையில் பகன்ற எட்டு குணம் பின்வருமாறு:–

பூமிராபோ அனலோ வாயுஹு கம் மனோ புத்திரேவ ச

அஹங்கார இதீயம் மே பின்னா ப்ரக்ருதிரஷ்டதா

 

நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம், மனம், புத்தி, அஹங்காரம் இப்படி எட்டு விதமாக என் பிரக்ருதி பிரிவு பட்டிருக்கிறது (கீதை 7-4)

 

இது பற்றி ராமகிருஷ்ண மடம் அண்ணா எழுதிய பகவத் கீதை பேருரையில் விளக்குவார்:

அஹங்காரமே பின்னர் புத்தியாகவும் மனதாவும் பரிணமிகும். அதன் பின் ஒன்றன் பின் ஒன்றாக ஆகாயம், வாயு, தேயு (அக்னி), அப்பு (ஜலம்), ப்ருத்வீ (மண்) இவற்றின் சிருஷ்டி (தைத்ரீய உபநிஷத் 2-1) எல்லாப் பிரவ்ருத்திக்கும் அஹங்காரமே மூல காரணம். இங்கு குறிப்பிட்ட மண் முதலிய பஞ்ச பூதங்கள் ஸூக்ஷ்மத் தன்மாத்திரைகளைக் குறிப்பன., ஸ்தூலமான பொருள்களையன்று.

மேலும் அண்ணா சங்கரரின் ஒரு மேற்கோளையும் எடுத்தாளுகிறார்:-

அந்தக் கரணம் என்பது என்ன?

மனது புத்தி சித்தம் அஹங்காரம் – இந்நான்கினையும் அந்தக் கரணம் என்பர். மனதின் ஸ்தானம் கழுத்து, அதன் வேலை சந்தேகித்தல்; புத்தியின் ஸ்தானம் முகம், வேலை- நிச்சயம்; அஹங்காரத்தின் ஸ்தானம் இருதயம், வேலை- அபிமானம்; சித்தம் புத்தியுடனும், அஹங்காரத்துடனும்,மனத்துடனும் சேரும் (சங்கர- ஆத்மனாத்ம விவேகம்)

 

ஆக, எட்டு என்ற எண் மஹாபாரத காலத்தில் இருந்து, அப்பர் காலம் வரை ஆன்மீகத்தில் பயன்பட்டு வந்து இருக்கிறது.

 

எண்குணத்தான் அருள் பெறுவோமாக!

TAGS:– எட்டு எண், ஆன்மீகத்தில், புத்தர், கன்பூசியஸ், சமணர், சாமுராய், கீதை, குறள்

–subham–

Leave a comment

3 Comments

  1. Dhananjeyan

     /  January 29, 2018

    Sir,

    Which Tamil font is used by you?
    Not displayed in Tamil;
    Are you in Facebook?

    Regards,
    Dhananjeyan

    2018-01-28 12:47 GMT+05:30 Tamil and Vedas :

    > Tamil and Vedas posted: ” WRITTEN by London Swaminathan Date: 28
    > JANUARY 2018 Time uploaded in London – 7-17 am Post No. 4672 Pictures
    > shown here are taken from various sources such as Facebook friends, Books,
    > Google and newspapers; thanks. ”
    >

  2. I use latha font. I have not received any complaint so far regarding the font.

  3. my facebook ID santanam swaminathan

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: