சத்ய சாயி லீலை- சோகத்தால் அழுத நான்கு புடவைகள்! (POST. 4688)

Date: 1 FEBRUARY 2018

 

Time uploaded in London- 5-39 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4688

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

((நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

 

சோகத்தால் அழுத நான்கு புடவைகள்!

 

ச.நாகராஜன்

 

ஸ்ரீ சத்யசாயி பாபாவின் அவதாரத்தில் ஆயிரக்கணக்கான லீலைகள் உண்டு.

 

ஒவ்வொரு லீலையும் ஆனந்தத்தைத் தருவதோடு அல்லாமல் ஒரு அற்புதமான பாடத்தையும் கூடவே தரும்.

பம்பாயில் தர்மக்ஷேத்ராவில் நடந்த நிகழ்ச்சி இது. ஆண்டு 1968.

அங்கு சேவையில் ஈடுபட்டிருந்த பெண்மணிகள் நூறு பேருக்கு அருளாசியுடன் புடவைகள் தர ஸ்வாமி எண்ணி, நூறு புடவைகளைக் கொண்டு வருமாறு பணித்திருந்தார்.

ஒரு கார்ட் போர்ட் பெட்டியில் நூறு சேலைகள் வந்தன.

அவற்றில் 96ஐ ஸ்வாமி தேர்ந்தெடுத்தார். நான்கு புடவைகளை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டார்.

 

பின்னர் நடந்தது தான் அதிசயம்.

அணுக்க பக்தரான ஹிஸ்லாப், அவர் மனைவி, இன்னும் பல பக்த்ர்கள் குழுமி இருந்த அறையில் ஹிஸ்லாப் புடவைகளை நோட்டம் விட்டார்.

 

அவற்றில் நான்கு ஈரமாக இருந்தன.

 

உடனே அவர் இதை பாபாவிடம் சுட்டிக் காட்டினார்.

இந்த அறையில் ஈரம் வருவதற்கான வாய்ப்பே இல்லை. நூறில் நான்கில் மட்டும் எப்படி ஈரம் வர முடியும்? பெட்டியோ டேபிளின் மீது இருந்தது! ஸ்வாமியோ ஒவ்வொன்றையும் செக் செய்து ‘அப்ரூவ்’ செய்து கொண்டிருந்தார்.

 

ஆக புடவைகள் ஈரமானது எப்படி?

ஸ்வாமி கூறினார்: ஸ்வாமி அவற்றை வேண்டாம் எனச் சொல்லி விட்டதால் அவை அழுகின்றன!

இதைக் கேட்ட ஹிஸ்லாப் திடுக்கிட்டார்.

 

ஹிஸ்லாப்: அது எப்படி? உயிரற்ற ஜடங்களுக்கு உணர்ச்சிகள் உண்டு, அவை கூட அழும் என்றா ஸ்வாமி சொல்கிறார்?

பாபா: உயிரற்ற ஜடங்களுக்கு கூட உணர்ச்சிகள் உண்டு. அவை கூட துக்கத்துடன் அழும்.

 

இலங்கைக்கு சேது பாலம் கட்டப்பட்ட போது குரங்குகள் பாறைகளைக் கொண்டு வந்து பாலம் கட்ட உதவின. பாலம் கட்டி முடியப் போகும் தருணத்தில் ஒரு பெரிய மலை அந்தப் பாலத்திற்கு அருகில் கொண்டு வரப்பட்டது.

ஆனால் பாலமோ முடிந்து விட்டது; இனி அந்த மலை தேவை இல்லை. கொஞ்சம் தாமதமாக அங்கு அந்த மலை வந்து விட்டது.

 

அந்தத் தருணத்தில் தன்னை வேண்டாம் என்று சொல்லப்பட்ட வார்த்தைகளைக் கேட்டவுடன் துக்கம் தாளாமல் அந்த மலை அழ ஆரம்பித்தது.

 

உடனடியாக் இந்தச் செய்தியை ராமனுக்கு அறிவித்தனர்.

கருணையின் திரு உருவான ராமன் மனம் நெகிழ்ந்தார்.

உடனடியாக அந்த மலைக்கு ஒரு செய்தியை அனுப்பினார்- அந்த மலை கவலைப்பட வேண்டாம் என்று!

அந்த மலை இனி வரும் அவதாரம் ஒன்றில் சிறப்பாகப் பயன்படுத்தப்படும் என்று உறுதி மொழியையும் சொல்லச் சொன்னார்.

மலை துக்கம் தீர்ந்து மகிழ்ந்தது!

கிருஷ்ணாவதாரத்தில் அது தான் கோவர்த்தன கிரியாக இருந்தது! தன் ஒரு விரலால் அந்த  மலையைத் தான் கிருஷ்ணர் தூக்கி தன் லீலையைச் செய்தார். மலையும் பரவசம் அடைந்தது!

கோகுலத்தில் இந்திரன் மழை பெய்து வருத்திய காலத்தில் இடையர்களை மழையிலிருந்து காப்பாற்றியது அந்த மலையே!

 

 

பாபாவின் இந்த அருளுரையைக் கேட்ட ஹிஸ்லாப் உள்ளிட்ட அனைத்து பக்தர்களும் ஆச்சரியத்துடன் பரவசமாயினர்.

 

ஹிஸ்லாப்: ஸ்வாமி! அந்த பெரிய நாடகம் இன்று எங்கள் கண் முன்னாலேயே திருப்பியும் இப்போது அரங்கேறி விட்டதே!

‘இங்கு வந்த புடவைகளில் நா பயன்படுத்தப்படப் போவதில்லை என்று அழுதனன்குவே. அவை ஸ்வாமியின் கருணையால் கொண்டுவரப்பட்ட காரணத்திற்காக இல்லாவிட்டாலும், ஸ்வாமியால் இன்னொரு விதத்தில் பயன்படுத்தப்பட்டு விட்டனவே’ என்று கூறி மகிழ்ந்தார்.

 

ஆம், அந்த நான்கு புடவைகளையும் ஹிஸ்லாப்பின் மனைவி, இன்னும் அங்கிருந்த இதர மூன்று பெண்மணிகளுக்கு அருளாசியுடன் பாபா வழங்கினார்.

 

அதைத் தான் அதிசயமாக ஹிஸ்லாப் குறிப்பிட்டார்!

ஸ்வாமி: ஆம்! நீங்கள் கூறியது சரியே! எவர் ராமனாகவும் கிருஷ்ணனாகவும் வந்தாரோ அவரே தான் இப்போது இங்கு உங்கள் முன் இருக்கிறார்!

 

அவதார மஹிமையைச் சொல்லவும் வேண்டுமோ!

இதைப் படிக்கும் போதே ஆனந்தம் அடையும் போது அதை நேரில் அனுபவித்தவர்களின் ஆனந்தத்திற்கு ஒரு எல்லை உண்டோ!

லீலையின் வாயிலாக உயிரற்ற ஜடங்களுக்கும் கூட உணர்ச்சிகள் உண்டு என்ற பாடத்தையும் கூட அல்லவா அறிய முடிகிறது!!

***

ஆதாரம் : Conversations with Bhagavan Sri Sathya Sai Baba by John S. Hislop

p 31; Sri Sathya Sai Books And Publications Trust வெளியீடு

1968 ஜனவரியில் நடந்த டேப் செய்யப்பட்ட உரையாடல்கள்

நன்றி : ஹிஸ்லாப்; நன்றி : Sri Sathya Sai Books And Publications Trust

***

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: