Date:13 FEBRUARY 2018
Time uploaded in London- 6-15 am
WRITTEN by S Nagarajan
Post No. 4736
PICTURES ARE TAKEN from various sources.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.
(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))
இணையிலா இந்து மதம்
சிவாகமங்கள் 28; என்ன பிரச்சினை பகுத்தறிவுவாதிகளுக்கு?!
ச.நாகராஜன்
1
சிவாகமங்கள் 28. சிவ வழிபாட்டை நியமத்திற்குத் தகவும், ஆங்காங்குள்ள தொன்மத்திற்குத் தகவும் உரியவர்கள் இதைக் காலம் காலமாக நூற்றுக் கணக்கான ஆலயங்களில் நடத்தி வருகிறார்கள்.
விக்கிபீடியா மற்றும் இதர சைவ இணைய தளங்களில் இவற்றைப் பற்றி முழுவதுமாக அறியலாம்.
28 சைவ ஆகமங்களின் பட்டியல் இது:
The Sivabheda Agamas
1) Kamika, 2) Yogaja, 3) Chintya, 4) Karana, 5) Ajita, 6) Dipta, 7) Sukshma, 8) Sahasraka, 9) Amshumat and 10) Suprabheda.
The Rudrabheda Agamas
(1) Vijaya, 2) Nihshvasa, 3) Svayambhuva, 4) Anala, 5) Vira (Bhadra), 6) Raurava, 7) Makuta, 8) Vimala, 9) Chandrajnana (or Chandrahasa), 10) Mukhabimba (or Bimba), 11) Prodgita (or Udgita), 12) Lalita, 13) Siddha, 14) Santana, 15) Sarvokta (Narasimha), 16) Parameshvara, 17) Kirana and 18) Vatula (or Parahita).
இதில் பகுத்தறிவுவாதிகளுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது என்று புரியவில்லை.
2
எல்லா பிராமணர்களும் பூஜையைச் செய்து விட முடியாது.அலங்காரங்களைச் செய்ய முடியாது. தெய்வ உருவங்களைத் தொட்டு விட முடியாது.சிதம்பரத்தில் தீக்ஷிதர்கள்,சிவாலயங்களில் உரிய சிவாசாரியார் என்று ஒரு வரைமுறை உண்டு.
அவர்கள் மட்டுமே இதைச் செய்ய முடியும்.
சில ஆலயங்களில் பிராமணர்கள் பூஜை செய்ய முடியாது.
பாரம்பரியத்திற்குத் தக்கபடி யார் பூஜை செய்ய வேண்டுமோ அவர்களே செய்வார்கள்.
ஆக இது தான் உண்மை.
3
இந்தச் சடங்கைச் செய்யக் கூடாது, அந்தச் சடங்கை செய்யக் கூடாது என்று முழங்கும் பகுத்தறிவுவாதிகள் தாங்களே சடங்குகளில் எப்படிக் கட்டுண்டிருக்கிறார்கள் என்பது வியப்பூட்டும் ஒரு விஷயம்.
இவர்களின் தலைவர் சமாதிக்கு எதற்கு ஊதுபத்தி? செருப்பை ஏன் வெளியில் கழட்டிப் போட வேண்டும்?கொடி எதற்காக?
சீருடை எதற்காக?
பகுத்தறிவுக்கு ஒத்ததா இது?
ஆஸ்பத்திரிகளில் சர்ஜன்கள் ஏன் பச்சை உடை அணிய வேண்டும்?
ஏதோ நினைத்த சட்டையை ஏன் போடக் கூடாது?
வக்கீல்களுக்கு எதற்குக் கறுப்பு கோட்டு.
நீதிபதிகளுக்கு (அயல்நாட்டில்) எதற்கு விக்?
இந்தப் பட்டியல் முடிவற்ற ஒன்று.
4
பகுத்தறிவுச் செல்வங்களுக்கு இதெல்லாம் தெரியாதா என்ன?
பள்ளி மாணவன் கூட சற்று யோசித்தால் இவர்களின் கலாட்டா நோக்கத்தைப் புரிந்து கொள்வான்.
திருஞானசம்பந்தரை இழிவு படுத்து. சிறிது நாள் ஆனால் ஆண்டாளை இழிவுபடுத்து.
இதன் மூலம் தாங்கள் பொதுவாழ்க்கையில் பரபரப்பாக இருப்பதை உறுதி செய்வது தான் இவர்களின் நோக்கம்!
ஆமாம், இதே அளவு சடங்குகள், ஏன் இன்னும் அதிகமாகக் கூட சடங்குள் கிறிஸ்தவத்திலும், இஸ்லாமிலும் உள்ளனவே.
பகுத்தறிகவு மனித குலம் அனைத்திற்கும் பொதுவானது தானா,அல்லது ஹிந்து மதம், கோவில்களுக்கும் மட்டுமான ஒன்றா?!
கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமியரிடம் கொஞ்சம் பகுத்தறிவை இவர்கள் சொல்லட்டுமே. இத்தனை ஆண்டுகளில் ஒரு முறையாவது இவர்கள் அவர்களைச் சீண்டவில்லையே!
இந்த போலி பகுத்தறிவுவாதிகளை ஒவ்வொருவரும் சமயம் கிடைத்த போதெல்லாம் தோலுரித்துக் காட்ட வேண்டும்.
அது ஒன்றே நல்ல வழி!
***
R.Nanjappa (@Nanjundasarma)
/ February 13, 2018தமிழ் நாட்டில் பிரச்சினை எழுவது பகுத்தறிவுவாதிகள் எனப்பட்ட ஹிந்து விரோதிகளால் மட்டும் அல்ல. சைவர்கள் எனச்சொல்லிக்கொள்ளும் சில ஆத்திகர்களலாலும் பிரச்சினை எழுகிறது. தமிழ் சைவர்கள் , சைவமே தமிழனின் ஆதி மதம் எனச் சொல்லிக்கொள்ளும் இவர்கள் சைவத்திற்கும் ஸம்ஸ்க்ருதத்திற்கும் உள்ள தொடர்பை மறுத்துப் பேசுகிறார்கள். அல்லது மறைக்கிறார்கள். இதனால் வைதீகத் தொடர்பை மறுக்கிறார்கள். இது உண்மைக்குப் புறம்பானது என்பது சைவ மடாதிபதிகளுக்குத் தெரியும். சைவ சித்தாந்தத்தின் அடிப்படை நூல்கள் ஸம்ஸ்க்ருதத்திலிருந்து வந்தவையே, அவற்றின் மூலம் ஸம்ஸ்க்ருதத்தில் உள்ள ஆகமங்களே அவர்கள் தீக்ஷை தரும்-பெறும் மந்திரங்களும் ஸம்ஸ்க்ருதத்திலுள்ளவையே. அவர்களின் சித்தாந்த பரிபாஷையும் ஸம்ஸ்க்ருதச் சொற்களின் திரிபுதான். ஆனால் ஹிந்துமதம் -ஸம்ஸ்க்ருதம் ஏதோ பிராமணத்தொடர்பு மட்டுமே உடையது என்ற திராவிட அரசியலின் பிரசாரத்தை சைவ மடாதிபதிகள் துணிந்து நேரிடையாக எதிர்ப்பதில்லை. They just run with the hare and hunt with the hound.
சைவ மடங்ளுக்கு பிராமணரல்லாதாரே தலைவராகிறார்கள். ஆனால் பிராமணரல்லாதார் அனைவரும் அவ்வாறு வரமுடியாது. அதிலும் கார்காத்த வேளாளர்தான் தலைமைக்கு வரமுடியும் எனச் சொல்லப்படுகிறது. அங்கும் சில வரம்புகள்- நெறிமுறைகள் இருக்கின்றன. பகுத்தறிவுவாதிகள் எனத் தங்களைச் சொல்லிக்கொள்வோர் இதையெல்லாம் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.
எனவே தமிழ் நாட்டில் பகுத்தறிவு வாதமென்பது பிராமணர்களுக்கு- ஸம்ஸ்க்ருதத்திற்கு- ஹிந்துமதத்திற்கு எதிரான அரசியல் இயக்கத்தின் ஒரு கூறுதான்.
இந்தியாவின் எந்தப் பகுதியிலும் பகுத்தறிவு வாதம் (Rationalism) என்பது ஹிந்துக்களுக்கு மட்டுமே எதிரான நடவடிக்கைதான்.
nparamasivam1951
/ February 13, 2018ஆம், நாம் அனைவரும் இணைந்து பகுத்தறிவு வாதிகளை தோலுரித்து காட்ட வேண்டும். திரு @Nanjundasarma அவர்கள், சைவ மடங்கள் குறித்து ஐயம் எழுப்பிஉள்ளார்கள். மொகலாயர் கோவில் அழிப்பு சமயங்களில், சிதம்பரம் தீக்ஷதர்கள் “நடராஐரையும் மரகத லிங்கத்தையும்” உயிரை பயணம் வைத்து பாதுகாத்தனர்.(ராமானுஜர் திருவரங்கனை மேல்கோட்டையில் பாதுகாத்தது போல்) அதே போல், கார்குல வேளாளர்கள், சோழநாட்டிலும் நெல்லையிலும் சைவக் கோவில்கள் பராமரிப்புக்காக மடங்கள் நிறுவி, (தங்கள் வேளாண் நிலங்களை அளித்து), பாதுகாத்தனர். ஆகவே, தீக்ஷதர்களோ மடாதிபதிகளோ, யாருடைய கட்டுப் பாட்டிலும் வர மாட்டார்கள். சுதந்திரமானவர்கள். உண்மையில் சைவ சமயத்தை காத்த இவர்கள் போற்றப் பட வேண்டியவர்கள்.