பணம், பணம், பணம்– ரிக் வேதமும் தமிழ் வேதமும் புகழ்மாலை (Post No.4923)
WRITTEN by London Swaminathan
Date: 17 April 2018
Time uploaded in London – 13-53 (British Summer Time)
Post No. 4923
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.
‘பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்’ – என்பது தமிழ்ப் பழமொழி. ரிக் வேதமும், தமிழ் வேதமாகிய திருக்குறளும் பணத்தைப் போற்றுகின்றன. தமிழ் வேதம் என்று திருவள்ளுவமாலை போற்றும் திருக்குறளை விடப் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையுடைத்து ரிக் வேதம் . ஜெர்மன் அறிஞர் ஹெர்மன் ஜாகோபி சுமார் 6000 முதல் 8000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று வானியல் குறிப்புகளை வைத்து மொழிந்தார். அவர் உரைத்ததை இன்று வரை தகர்த்தார் எவருமிலர். நிற்க
பணம் ஜிந்தாபாத்! பணம் வாழ்க! ஏன்? ஏன்?
அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள் இல்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகியாங்கு (குறள் 247)
பொருள்
பணம் இல்லாதவர்களுக்கு இந்த உலகத்தில் நல்ல வாழ்வு இல்லை; அது போல அருள் (கருணை) இல்லாதவர்களுக்கு சுவர்க்கத்தில் இடம் இல்லை.
தொல்காப்பியரும் திருவள்ளுவரும் அதி தீவிர இந்துக்கள். ஆர். எஸ். எஸ்.காரர்கள் தோற்றுப்போவார்கள்!!
ஸம்ஸ்க்ருதத்தில் சொன்ன தர்ம, அர்த்த , காம என்ற வரிசையில் தீவிர இந்துத்வவாதியான திருவள்ளுவர் திருக்குறளை அமைத்தார். த்ருண தூமாக்கினி என்னும் தொல்காப்பிய ரிஷியோ இதைப் பல இடங்களில் அதே வரிசையில் செப்பிச் சென்றார்.
ஆக பொருள் (பணம்) என்பதன் முக்கியத்துவத்தைத் தொல்காப்பிய ரிஷியும் வள்ளுவ முனியும் வலியுறுத்துவர்.
இன்னொரு குறளில் வள்ளுவன் விளம்புவது யாதெனின்,
பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருள் அற்றார்
அற்றார் மற்று ஆதல் அரிது (248)
உலகில் பணம் இல்லாதவர்களுக்கு திடீரென லாட்டரிப் பரிசு அடிக்க வாய்ப்பு உண்டு; ஆனால் கருணை இல்லாதவர்களுக்குப் பாவம் சேர்வதால் மீண்டும் வளம்பெறுவது கடினமே.
இவ்வாறு பல இடங்களில் வள்ளுவன் நுவல்வதோடு, வாணிகம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லை அப்படியே வள்ளுவத்தில் கையாளுவதால் அவர் நல்ல பிஸினஸ்வாதி என்றும் தெளிவு பெறலாம்.
சாணக்கிய நீதியில் சாணக்கியன் பகர்வான்-
கெட்ட வழியில் சம்பாதித்த பணம் பத்து ஆண்டுகளுக்கு இருக்கும். பதினோராவது ஆண்டு துவங்கும் போது அடியோடு, வேரோடு பிடுங்கிக் கொண்டு போய்விடும்.
செல்வம் என்பது சக்கரம் போல. அது மாறி மாறி வரும் என்று ரிக் வேதம் புகலும். அதை மேற்கூறிய (248) குறளில் கண்டோம்.
15-6
அன்யாயோபார்ஜிதம் வித்தம் தச வர்ஷாணி திஷ்டதி
ப்ராப்தே சைகாதசே வர்ஷே ஸமூலம் தத் வினஸ்யதி
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பாலவை – குறள் 659
பிற மக்களை அழ, அழ வைத்து சம்பாதித்த பொருள் எல்லாம், அந்த மனிதனை அழ அழ வைத்துவிட்டுப் போய் விடும்; உண்மையாக உழைத்து சம்பாதித்த பணம் போனாலும், அதில் ஒரு நன்மையே ஏற்படும்.
இனி ரிக் வேதத்துக்குள் நுழைவோம்:-
எங்களுக்குச் செல்வத்தைக் கொடு; அதன் மூலம் தாக்கும் சக்தியையும் கொடு- என்று வேத மந்திரம் சொல்கிறது (ரிக் வேதம் 3-46)
பணம் இருந்தால்தான் எதிரிகளைத் தாக்கும் சக்தியும் கிடைக்கும்.
ஆயினும் பணம் என்பது மோட்ச சாம்ராஜ்யத்துக்கு வழி இல்லை என்பதை பிருஹத் ஆரண்யக (பெருங்காட்டு உபநிஷதம்) உபநிஷத் தெளிவுபடுத்தும்:-
‘செல்வம் மூலம் முக்தி பெற முடியாது’- நாலாவது அத்யாயம், ஐந்தாவது பிராஹ்மணம், பிரு. உபநிஷத்.
xxx
கவச ஐலூஷன் என்ற ரிஷி பாடுகிறார் (10-31-2)
மனிதர்கள் செல்வம் பற்றி சிந்திக்கட்டும்
சட்டபூர்வ வழிகளிலும் வழிபாட்டின் மூலமும் வெல்லட்டும்
நன்கு சிந்தித்து விவேகத்துடன் செயல்படட்டும்
சுய சிந்தனையால் திறமையுடன் செயல்படட்டும்.
க்ருத்ஸமடர் என்ற ரிஷியும் செல்வம் பற்றிப் பாடுகிறார் (2-21-6)
இந்திரா! எங்களுக்கு நல்ல புதையல்கள் கிடைக்கட்டும்
திறமையான சிந்தனையையும் பிரகாசமான புத்தியையும் கொடு
செல்வம் அதிகரிக்கட்டும், உடல் ஆரோக்கியம் பெருகட்டும்
இனிமையான பேச்சு அமையட்டும், நாட்கள் நல்லதாக இருக்கட்டும்.
ஆக செல்வத்திதை வேண்டுவது, உலகின் பழமையான புஸ்தகத்தில் இருப்பது குறிப்பிடத் தக்கது. உலகில் இந்துக்கள் மட்டுமே இப்படி அறம்- பொருள்- இன்பம்- வீடு (மோக்ஷம்) என்று வாழ்க்க்கைக்கு நான்கு தூண்கள் நிறுவியவர்கள். வேறு எந்த ஒரு மதத்திலும் இவ்வாறான தெளிவான வரையறை இல்லை!
MY OLD ARTICLES ON THE SAME THEME
பண மோசடி பற்றி வள்ளுவன், சாணக்கியன் …
https://tamilandvedas.com/…/பண-மோசடி-பற்றி-வள…
1 Mar 2018 – அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும். பிற்பயக்கும் நற்பாலவை – குறள் 659. பிற மக்களை அழ,அழ வைத்து சம்பாதித்த பொருள் எல்லாம், அந்த மனிதனை அழ அழ வைத்துவிட்டுப் போய் விடும்; உண்மையாக உழைத்து சம்பாதித்த பணம் போனாலும், அதில் ஒரு நன்மையே …
https://tamilandvedas.com/tag/பாவங்கள்/
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும். பிற்பயன் நற்பாலவை (659). பிறரை அழவைத்து பிடுங்கிய பணம்எல்லாம், உன்னை அழ அழச் செய்துவிட்டு ஓடிப்போகும். உனக்கு பொருளே நஷ்டமானாலும், புண்ணியம் செய்தால் அது பிற்காலத்தில் பலன் தரும். இடுக்கட் படினும் இளிவந்த …
https://tamilandvedas.com/tag/அஜீரணம்/
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும். பிற்பயன் நற்பாலவை (659). பிறரை அழவைத்து பிடுங்கிய பணம்எல்லாம், உன்னை அழ அழச் செய்துவிட்டு ஓடிப்போகும். உனக்கு பொருளே நஷ்டமானாலும், புண்ணியம் செய்தால் அது பிற்காலத்தில் பலன் தரும். இடுக்கட் படினும் இளிவந்த …
https://tamilandvedas.com/category/குறள்-உவமை/
அன்யாயோபார்ஜிதம் வித்தம் தச வர்ஷாணி திஷ்டதி. ப்ராப்தே சைகாதசே வர்ஷே ஸமூலம் தத் வினஸ்யதி.அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும். பிற்பயக்கும் நற்பாலவை – குறள் 659. பிற மக்களை அழ,அழ வைத்து சம்பாதித்த பொருள் எல்லாம், அந்த மனிதனை அழ அழ வைத்துவிட்டுப் …
–subham–