COMPILED by S NAGARAJAN
Date: 18 April 2018
Time uploaded in London – 5-37 AM (British Summer Time)
Post No. 4925
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU
பாரதி போற்றி ஆயிரம் – 79
பாடல்கள் 666 முதல் 691
கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்
தொகுப்பு : ச.நாகராஜன்
புலவர் கு.ப. பெருமாள் இயற்றிய பாரதியின் “பா”ரதம்
இந்த பாரதியாரின் வரலாற்று நூலில் பல அத்தியாயங்கள் உள்ளன. நூலை முழுவதுமாகத் தர இயலாத நிலையில் தேர்ந்தெடுத்த கவிதைகள் இங்கு அளிக்கப்படுகின்றன. இங்கு இறைவணக்கம் – ஒரு பாடலையும், பாரதி யார் என்ற அத்தியாயத்தில் 25 பாடல்களையும் படித்து மகிழலாம்.
அத்துடன் நூலை அப்படியே புகைப்படங்களாக எடுத்து அளிக்கும் உத்தி கையாளப்படுகிறது.
ஆகவே நூலின் பக்கங்களை அப்படியே காணலாம்.
இணைப்பாகத் தரப்படுபவை :
முதல் பாடல் : இறை வணக்கம்
1 பாடல்
பாரதி யார்? அத்தியாயத்தில் 25 பாடல்கள் மட்டும்
தொகுப்பாளர் குறிப்பு:
புலவர் கு.பொ.பெருமாள் பல்வேறு சந்தங்களில் மரபு நிலை மாறாது பாடல்களை யாத்துள்ளார்.
இவர் தன்னைப் பற்றிக் கூறுவதில் ஒரு சிறு பகுதி: “ உயர் பள்ளி சென்று ஒரு நாளும் கல்லாத யான் கறைப்பட்டவனாகச் சிறைப் (ஆயுட்சிறை) பட்ட காலத்தில் இருபத்து ஏழாம் அகவையில் இருட்டறையில் தவித்த எனக்கு, அணையா ஒளிவிளக்காகக் கல்வி அறிவூட்டிப் புலவனாக வெளியில் வரும் நிறைவுற்றவனாகச் செய்தவர், இதயத்துள் என்றும் நிற்கும் என் ஆசிரியர் ஆவார்கள்.”
இவரது ஆசிரியர் நக்கீரன்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மாவட்டம் புளியம்பட்டியில் இருக்கும் புலவர் பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது.
முதற் பதிப்பு டிசம்பர் 2003. விலை ரூ 35/ (144 பக்கங்கள்)
கவிஞரையும் பதிப்பகத்தையும் தொலைபேசி வாயிலாகவும் கடித வாயிலாகவும் தொடர்பு கொள்ள முயற்சித்தும் பலனில்லை.
கவிஞர் கு.பொ.பெருமாள் அவர்களுக்கும் புலவர் பதிப்பக உரிமையாளருக்கும் நமது நன்றி
***