Written by London Swaminathan
Date: 28 APRIL 2018
Time uploaded in London – 14-37 (British Summer Time)
Post No. 4957
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU
ராமன் பற்றி ராவணன் கிண்டல்/பரிஹாசம் (Post No.4957)
இராம பிரானின் வீரத்தையும் புகழையும் சொல்லி, அவன் திருமாலின் அவதாரம், ஆகையால் சீதையை ஒப்படைப்பதே நன்மை பயக்கும் என்று விபீஷணன் புத்திமதி சொல்கிறான் இராவணனுக்கு.
அதற்கு இராவணன் வெடிச் சிரிப்பு சிரித்துவிட்டு, சில பாடல்களில் இராம பிரானைக் கிண்டல் செய்கிறான்; சுவையான பாடல்கள்.
இவை யுத்த காண்டத்தில் இராவணன் மந்திரப் படலத்தில் உள்ள பாடல்கள்.
இந்திரன் தனை இருஞ்சிறையிட்ட நாள் இமையோர்
தந்தி கோடு இறத் தகர்த்த நாள் தன்னை யான் முன்னம்
வந்த போர் தொறும் துரந்த நாள் வானவர் உலகை
சிந்தவென்ற நாள் சிறியன் கொல் நீ சொன்ன தேவன்
பொருள்:
ஏ விபீஷணா! நீ சொன்னாயே ஒரு தேவன், அவன் நான் இந்திரனைச் சிறையில் வைத்தபோது வரவில்லை; தேவரின் யானையான ஐராவதத்தின் கொம்புகளை (தந்தம்) முறித்த போதும் வரவில்லை; அது போகட்டும்; திருமாலையே நான் புறமுதுகு காட்டி ஓட வைத்தேனே அப்போதும் வரவில்லை; தேவர்கள் உலகத்தை நான் வென்றபோது அவர்கள் பயந்து ஓடினர். அப்போதும் வரவில்லை. ஒருவேளை நீ சொன்ன தேவன் பச்சைக் குழந்தையாக இருந்தானோ!!
இன்னொரு பாட்டில் “அட, உன் திருமால், ஆயிரம் தோள்– ஆயிரம் கைகளை எடுத்தவனாயிற்றே! ஓரடிக்குள் பூமியை அளந்தானே. அதெல்லாம் சிறுமையுடையது என்று கருதி இப்பொழுது நாம் உணவாக உண்ணும் மனித வடிவத்தை எடுத்தானோ!” என்று பரிஹாசம் செய்கிறான்.
ரிக்வேதத்தில் பத்தாவது மண்டலத்தில் உள்ள புகழ் மிகு புருஷசூக்தம்
என்னும் துதியில் “ஸஹஸ்சீர்ஷா புருஷஹ, ஸஹஸ்ராக்ஷ ஸஹஸ்ரபாத்”- என்று விஷ்ணு புகழப்படுகிறான் (ஆயிரம் தலை, ஆயிரம் கண், ஆயிரம் கால்). இன்னொரு துதியில் மூன்று அடி எடுத்த த்ரிவிக்ரம அவதாரம் பற்றி வருகிறது. இவை எல்லாம் கம்பனுக்கு அத்துபடி.
பகவத் கீதையில் கண்ணன் எடுத்த விஸ்வரூபத்திலும் இப்படிப்பட்ட வருணனை உண்டு.
ஆயிரம் பெருதோள்களும் அத்துணைத் தலையும்
மாயிரும் புவி உள்ளடி அடக்குறும் வடிவும்
தீய சாலவும் சிறிது என நினைத்து நாம்தின்னும்
ஓயும் மானுட உருவுகொண்டனன் கொலாம் உரவோம்
இதே காண்டத்தில் ஓம், உபநிஷதம் ஆகியவற்றின் பெருமையையும் விளக்குகிறான்.
இதில் இன்னொரு விசயத்தையும் இந்த காண்டத்தில் கம்பன் திரும்பத் திரும்ப சொல்லி வருகிறான். வேதம் படித்தாலும், வீணை வாசித்தாலும், தங்கக் கோட்டையில் வசித்தாலும் அரக்கர் இனம் மனிதர்களைத் தின்னும் (CVANNIBALS) இனம் என்பதாகும்
இக்கால வெள்ளையர்களை இராவணனுக்கு ஒப்பிடலாம்; எவ்வளவுதான் ராக்கெட் விட்டாலும் அணுகுண்டு வெடித்தாலும், பொருளாதாரத்தில் முன்னிலையில் இருந்தாலும் மேலை நாடுகள் பெட்ரோலியம் கொடுக்காத நாடுகள் மீது பொய்க் குற்றம் சாட்டி குண்டு மழை பொழிவதையும்,பெட்ரோலியம் கொடுக்கும் துலுக்க நாடுகளில் அடிப்படை உரிமையே இல்லாத போதும் அவைகளைக் கண்டுகொள்ளாமல் அவைகளுக்கு ஆயுதம் விற்பதையும் இராவண ஆட்சியுடன் ஒப்பிடலாம்.
அதுமட்டுமல்ல; சென்றவிடமெல்லாம் பழங்குடி மக்களை பறவைகளைச் சுடுவது போலச் சுட்டுத் தள்ளினர்; சிலர் அந்த நர மாமிசத்தை தின்னவும் செய்தனர்!
கடைசியாக ராவணன் கூறுவது இன்னும் பகடி செய்கிறது:
பித்தன் ஆகிய ஈசனும் அரியும் என்பெயர்கேட்டு
எய்த்த சிந்தையர் ஏகுழி ஏகுழி எல்லாம்
கைத்த ஏற்றினும் கடவிய புள்ளினும் முதுகில்
தைத்த வாளிகள் நின்றுள குன்றின் வீழ் தடித்தின்
பொருள்:
என் பெயரைக் கேட்ட மாத்திரத்தில் பைத்தியக்காரனான சிவனும் திருமாலும் காளையிலும், கருடனிலும் ஏறி ஓடிப்போயினர். அப்போது நான் விட்ட அம்புகள், மலையில் இடி விழுந்த தடம் போலத் தழும்பேறிக் கிடக்கின்றன.
இவ்வாறு இராவணன் கிண்டல் செய்தவுடன், விபீஷணன் பதில் தருகிறான். அண்ணா! உன்னைவிட வலிமை படைத்ட் இரணியன் கதை கேள் என்று இரணியன் வதைப் படலத்தைச் சொல்கிறான். அது மிகவும் சுவையான பாடல்கள் கொண்ட பகுதி; தனிக் கட்டுரையில் தருகிறேன்.
–சுபம்–